குடும்பத்தோடு தீக்குளிக்க முயன்ற மாற்றுத்திறனாளி கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு

விழுப்புரம் : தகுதியிருந்தும் அங்கன்வாடி பணியாளர் வேலை வழங்காமல் புறக்கணிப்பதை கண்டித்து, மாற்றுத்திறனாளி குடும்பத்தோடு கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு நிலவியது.
செஞ்சி அடுத்த எடமலை கிராமத்தைச் சேர்ந்தவர் வெங்கடேசன், 40; மாற்றுத்திறனாளி. இவரது மனைவி லட்சுமி, 34; இவர்கள், நேற்று காலை விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்திற்கு தனது 7; 4; 2; வயது மகள்களுடன் மனு அளிக்க வந்தனர். அப்போது திடீரென அலுவலக வாயில் பகுதியில் குழந்தைகள், மனைவி மற்றும் தன் மீதும் மண்ணெண்ணெய் ஊற்றி குடும்பத்துடன் தீக்குளிக்க முயன்றார்.
உடன் அங்கிருந்த தாலுகா போலீசார், அவர்களை தடுத்து நிறுத்தி தண்ணீரை ஊற்றினர்.
போலீஸ் விசாரணையில், வெங்கடேசன் கூறுகையில்,'நான் கால்கள் பாதித்த மாற்றுத் திறனாளி, என்னால் வேலைக்கு செல்ல முடியாமல், குடும்பத்தை காப்பாற்ற முடியாத நிலையில் உள்ளேன். அரசு சார்பில் அறிவிக்கப்பட்ட அங்கன்வாடி பணியாளர் பணிக்கு, எனது மனைவி லட்சுமி விண்ணப்பித்து, கடந்த ஜூன் மாதம் நேர்முகத்தேர்விலும் பங்கேற்றார். உரிய கல்வி தகுதி, மாற்றுத்திறனாளி மனைவி, கலப்புத்திருமணம் என முன்னுரிமை தகுதிகள் இருந்தும், விதிகளை மீறி வேறு நபருக்கு அங்கன்வாடி பணியாளர் பணியை வழங்க முடிவு செய்து, இழுத்தடிக்கின்றனர்.
3 பெண் குழந்தைகளுடன், வறுமை கோட்டிற்கு கீழ் வசித்து வருகிறோம். அங்கன்வாடியிலிருந்து, விதிகள்படி 2 கி.மீ., தொலைவிற்குள் தான் எங்கள் வீடும் உள்ளது.
இதனால், எங்களின் நிலையை அறிந்து, தகுதியுடைய எங்களுக்கு அங்கன்வாடி பணியாளர் வாய்ப்பை வழங்க வேண்டும்' என்றார்.
இதனையடுத்து, அவரது மனுவை பெற்ற அதிகாரிகள் விசாரித்து நடவடிக்கை எடுப்பதாக கூறி அனுப்பி வைத்தனர்.
மேலும்
-
நோபல் பரிசு தராவிட்டால் அமெரிக்காவுக்கு ரொம்ப அவமானம் ஆகிவிடும்: புலம்பும் டிரம்ப்
-
டில்லியில் ஆர்எஸ்எஸ் நுாற்றாண்டு நிறைவு விழா; அஞ்சல் தலை வெளியிட்டார் பிரதமர் மோடி
-
ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை: 5.5 சதவீதமாக நீடிக்கும் என ரிசர்வ் வங்கி அறிவிப்பு
-
தொடர் விடுமுறை எதிரொலி; அரசு பஸ்களில் 6.91 லட்சம் பேர் பயணம்
-
புத்தகங்கள் திருட்டு: ஆசிரியர் 'சஸ்பெண்ட்'
-
குடிநீர் சப்ளையின்றி வரி கேட்கும் அவலம் அரண்மனைப்புதுார் திருப்பதி நகர் குடியிருப்போர் குமுறல்