ராமானுஜருக்கு வெள்ளி கவச அலங்காரம்

செவிலிமேடு, புரட்டாசி மாத திருவாதிரை திருமஞ்சனத்தையொட்டி காஞ்சிபுரம் செவிலிமேடு ராமானுஜர் வெள்ளி கவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.



காஞ்சிபுரம் செவிலிமேடில் சாலை கிணறு ராமானுஜர் கோவில் உள்ளது. இங்கு புரட்டாசி மாத திருவாதிரை திருநட்சத்திரத்தையொட்டி, நேற்று காலை, 10:00 மணிக்கு ராமானுஜருக்கு சிறப்பு திருமஞ்சனம், மஹாதீப ஆராதனை நடந்தது.



தொடர்ந்து வெள்ளி கவசம் அலங்காரத்தில் ராமானுஜர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில், திரளான பக்தர்கள், நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு தீர்த்த பிரசாதமும், அன்னபிரசாதமும் வழங்கப்பட்டது.

Advertisement