ஓய்வூதியர்களுக்கு டிஜிட்டல் உயிர்வாழ் சான்றிதழ் வழங்க தபால்துறை ஏற்பாடு
தேனி: மத்திய அரசின் ஓய்வூதியதாரர்கள், குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு வீடு தேடி வந்து டிஜிட்டல் உயிர்வாழ் சான்றிதழ் வழங்க வசதி செய்யப்பட்டுள்ளது. இதனை ஓய்வூதியதாரர்கள் பயன்படுத்தி கொள்ளலாம்,'' என தேனி கோட்ட தபால்துறை கண்காணிப்பாளர் குமரன் தெரிவித்து உள்ளார்.
அவர் கூறியிருப்பதாவது: ஓய்வூதியம் பெறுவோர் உயிர்வாழ் சான்றிதழ் வழங்க நேரில் சென்று சிரமம் அடைகின்றனர். இதனை தவிர்க்க இந்தியா போஸ்ட் பேமண்ட்ஸ்வங்கி ஓய்வூதியதாரர்களின் வீட்டு வாசலிலேயே பயோமெட்ரிக், முக அங்கீகார தொழில்நுட்ப நடைமுறையை பயன்படுத்தி டிஜிட்டல் உயிர்வாழ் சான்றிதழ் (ஜீவன்பிரமான்) சமர்ப்பிக்க ஏற்பாடு செய்துள்ளது.
இதற்கு சேவை கட்டணமாக ரூ.70 தபால்காரரிடம் செலுத்த வேண்டும். ஓய்வூதியதாரர்கள் தங்கள் பகுதி தபால்காரர்களிடம் ஆதார், அலைபேசி எண், பி.ஆர்.ஓ., எண், ஓய்வூதிய வங்கி கணக்கு விபரங்களை தெரிவித்து, கைவிரல் ரேகை பதிவு செய்து டிஜிட்டல்உயிர்வாழ் சான்றிதழை சமர்பித்து, பயன் பெறலாம்.
எனவே மத்திய அரசு ஓய்வூதியதாரர்கள், குடும்ப ஓய்வூதியதாரர்கள், தொழிலாளர் வருங்கால வைப்புநிதி ஓய்வூதியதாரர்கள் இந்த வசதியை பயன்படுத்தி பயன் பெறலாம்., என்றார்.
கூடுதல் விபரங்களுக்கு இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி மேலாளர் தினேஷை 98401 22061 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
மேலும்
-
பல்லவர் கால மூத்ததேவி சிற்பம்: பண்ருட்டி அருகே கண்டெடுப்பு
-
தமிழக அமைதியை சீர்குலைக்கும் செயல்!
-
பைனான்சியர் கடத்தல் வழக்கு: மதுரையில் இருவர் கைது
-
ரூ.8 ஆயிரம் கோடி ஈட்டி என்.எல்.சி., புதிய சாதனை: சேர்மன் பிரசன்னகுமார் மோட்டுப்பள்ளி தகவல்
-
கோவிலை கையகப்படுத்த எதிர்ப்பு: வடலுாரில் 68 பேர் கைது
-
வாலிபரை தாக்கிய 20 பேர் மீது வழக்கு