கோவில் உண்டியல் திருட்டு

காரைக்கால்: காரைக்கால் பசுபதிஸ்வர் கோவில் உண்டியலைத் திருடிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

திருப்பட்டினம் பசுபதிஸ்வரர் கோவிலில் கடந்த 27 ம் தேதி இரவு வழக்கம் போல் கோவில் மூடப்பட்டு , நேற்று முன்தினம் கோவிலுக்கு பக்தர்கள் சென்றபோது புவனேஸ்வரி அம்மன் சன்னதி அருகில் உள்ள கதவு உடைக்கப்பட்டு கோவிலில் இருந்த 4 அடி உயரம் உள்ள சில்வர் உண்டியலை மர்ம நபர்கள் திருடிசென்றது தெரியவந்தது.

கோவில் சிறப்பு அதிகாரி நெடுஞ்செழியன் புகாரின் போரில் திருப்பட்டினம் போலீசார் வழக்குப் பதிந்து சி.சி.டி.வி.,கேமரா பதிவுகளை ஆய்வு செய்து, விசாரித்து வருகின்றனர்.

Advertisement