வெளிநாட்டவருக்கு வேலை அனுமதி வழங்குவதை நிறுத்தியது அமெரிக்கா
வாஷிங்டன்: வெளிநாட்டவர்களின் வேலைக்கான அனுமதியை தானாக நீட்டிப்பு செய்யும் முறையை அமெரிக்கா நிறுத்தி வைத்துள்ளது. இதன் காரணமாக, இந்தியர்கள் உள்பட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த வெளிநாட்டவர்கள் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
அமெரிக்க அதிபராக டிரம்ப் பொறுப்பேற்றது முதல் பல்வேறு தடாலடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில், அமெக்காவில் உள்ள நிறுவனங்கள் தங்கள் நாட்டவர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்பதில் அவர் திட்டவட்டமாக உள்ளார்.
இந்த நிலையில், வெளிநாட்டவர்கள் அமெரிக்காவில் தங்கி வேலை பார்ப்பதற்கான இஏடி எனப்படும் வேலைவாய்ப்பு அங்கீகார ஆவணங்களை தானாக நீட்டிக்கும் வசதியை அமெரிக்கா நிறுத்தி வைத்துள்ளது.
இது தொடர்பாக அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்புத்துறை வெளியிட்ட அறிக்கையில், 'அக்.,30 மற்றும் அதற்கு பிறகு வேலைவாய்ப்பு அங்கீகார ஆவணங்களை புதுப்பிக்கக் கோரி விண்ணப்பிப்பவர்களுக்கு, இனி தானியங்கி மூலம் நீட்டிப்பு வழங்கப்படாது. பொதுமக்கள் மற்றும் தேசிய பாதுகாப்பைக் காக்கும் விதமாக, மேலாண்மை மற்றும் தணிக்கையை அரசு முன்னுரிமையாகக் கொண்டுள்ளது,' என தெரிவித்துள்ளது.
வெளிநாட்டவர்கள் தங்கள் வேலைக்கான அனுமதி காலம் முடிந்த பின்னரும், கூடுதலாக 540 நாட்கள் அமெரிக்காவில் பணியாற்ற, முந்தைய பைடன் அரசு நிர்வாகம் அனுமதியளித்திருந்தது. தற்போது, அந்த நடைமுறைக்கு மாற்றாக, இந்த அறிவிப்பு அமைந்துள்ளது.
டிரம்ப் அரசின் இந்த உத்தரவால், வெளிநாட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக, அங்கு பெருமளவில் பணியாற்றும் இந்தியர்களுக்கே பாதிப்பு அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்காவில் போனவுடன் இந்தியாவை நக்கல் அடிப்பவர்கள் இந்த இந்தியர்கள் ,இவ்வளதுக்கும் இவர்கள் வெறும் தற்காலிக வேலை வீசாவில் போனவர்கள் , இப்ப இங்கேயே ஓடி ஒழித்து இருக்காங்க ,, யூடூபில் பொடும் கூத்தை பாத்து இருப்பீர்கள்
சீக்கிரம் அமெரிக்காவை சூடான் மாதிரி ஆக்காம விடப் போவதில்லை இந்த ஜோக்கர்.. சீக்கிரம் ஆடிய ஆட்டம் முடியும்
Good job trump is doing for his country
அமெரிக்காவின் சுற்றுலா துறை படுத்தே விட்டது. பெரும்பாலான airports kaatru vaangugiradhu. USA will become next Bangladesh soon.
டிரம்ப் அவர் நாட்டுக்கு அவர் நாட்டு மக்களுக்கு எதை நன்மைன்னு நினைக்கிறாரோ அதை செய்கிறார். நமது அரசாங்கமும் நமது ஐஐடி ஐஐஎம் மற்றும் மிகச்சிறந்த ப்ரேமியம் கல்லூரிகளில் இருந்து வெளிவரும் திறமையான மாணவர்களை வெளிநாடுகளில் பணிபுரிய ஒரு வரைமுறை கொண்டுவரவேண்டும். அவர்களை இந்தியாவில் ஸ்டார்ட்டப் நிறுவனங்களை உருவாக்கவேண்டும். ஏற்கனவே மத்திய அரசாங்கம் பல ஆண்டுகளாக இதை செய்து கொண்டிருந்தாலும் மேலும் விளம்பரப்படுத்தி சலுகை ஊக்குவிக்க வேண்டும். பெங்களூரில் கடந்த ஐந்தாறு ஆண்டுகளில் இந்த மாதிரி ஏகப்பட்ட ஸ்டார்ட்டப் நிறுவங்கள் சக்கை போடு போட்டுக்கொண்டு இருக்கிறார்கள். சென்னையில் மிகவும் குறைவு. நமது இண்டெலெக்சுவல் ப்ராப்பர்டியை அமெரிக்காவுக்கு கடத்துவதை நிறுத்தினாலே ஸ்ரீதர் வேம்பு சொன்ன மாதிரி நாம் வெளிநாடுகளை நம்பி போய் இந்த மாதிரி அவமானப்பட்டு தொங்க வேண்டியதில்லை.
"Short term gain" most often results in "long term loss".
ட்ரம்ப் இதுபோன்ற அதிரடி நடவடிக்கைகளை அடிக்கடி எடுக்கவேண்டும். அப்போதுதான் ட்ரம்ப் பதவிக்காலம் முடியும்போது அமெரிக்கா திவாலாகும்.
முறையான ஆவணங்கள் இல்லாமல் எல்லா மாநிலங்களிலும் தங்கி வேலை பார்க்கிறார்கள் ..ஆங்கிலம் எழுத படிக்க தெரியாது ..கார் ஓட்டுவார்கள் ...வீட்டு வேலை முதல் அனைத்து வேலையும் சர்வ சாதாரணமாக செய்கிறார்கள்
அப்ப சரி, இனி ஏர்போர்ட், மால்களில் எங்கும் குப்பை, கழிவறைகள் நாறும், டாக்சி குறைவாய் திணறுவாங்க, கம்ப்யூட்டர்கள் கிராக் ஆகும்,
இங்கு இயங்கும் அமெரிக்கா RELATED கம்பெனிகளை தடை செய்ய வேண்டும்
ட்ரம்பின் அழகான அன்பு நண்பர் மோடிஜி இது பற்றி உடனே பேசி தீர்த்து வைப்பார்
ஏன்
உங்க கும்பல் எப்பவும் அடுத்தவன் கஷ்டத்தில் சுகம் காணும்
அறிவான அப்பாவை மறந்துவிட்டிர்களே. நேற்றுதான் எனக்கு எல்லாம் தெரியும் என்று நிர்வாகிகள் கூட்டத்தில் பணிவன்போடு கூறினார் .மேலும்
-
தொண்டர்களின் உற்சாகம் புது ஆற்றலை அளிக்கிறது: பிரதமர் மோடி
-
சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதியாக சூர்யகாந்த் நியமனம்: நவ.,24ல் பதவியேற்பு
-
தமிழகத்தைச் சேர்ந்த ஐந்து பேருக்கு ஐஏஎஸ் அந்தஸ்து வழங்கப்பட்டது
-
ராகுல் மன்னிப்பு கேட்க வேண்டும்: தேர்தல் கமிஷனில் பாஜ., மனு
-
இந்தியாவுக்கு மேலும் 6 மாதம் சலுகை: அமெரிக்கா முடிவில் மாற்றம்
-
பிணைக்கைதிகளாக அடைக்கப்பட்ட குழந்தைகள் மீட்பு; குற்றவாளி சுட்டுக்கொலை