பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் அடுக்குமாடி; கட்டுமான பணியை நிறுத்த ஐகோர்ட் உத்தரவு
 
  
சென்னை: சதுப்பு நிலமான பள்ளிக்கரணை பெரும்பாக்கத்தில் பிரிகேட் அடுக்குமாடி குடியிருப்பு கட்டக்கூடாது என  சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
சென்னை பள்ளிக்கரணை சதுப்பு நிலம், சர்வதே அளவில் 'ராம்சார்' தளமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இயற்கையாக அமைந்த இந்த நீர் நிலை, மழைநீரை உள்வாங்கும் திறன் கொண்டது. இதை அழிக்கும் பட்சத்தில், நகருக்குள் வெள்ளம் வரும் அபாயம் இருக்கிறது. இதனால் சதுப்பு நிலத்தை பாதுகாக்க வேண்டும் என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் நீண்ட காலமாக கோரி வருகின்றனர்.
சதுப்பு நிலத்தின் முக்கியத்துவம் காரணமாக, அங்கு கட்டுமான பணிகள் செய்வதற்கு அனுமதி எதுவும் வழங்கப்படக் கூடாது. ஆனால், பள்ளிக்கரணை சதுப்பு நிலத்துக்கு எல்லை வரையறுக்கவில்லை என்று கூறியும், சதுப்பு நிலத்துக்கு வெளியே இருக்கும் பட்டா நிலம் என்று கூறியும், பிரிகேட் நிறுவனம் அடுக்குமாடி கட்ட அரசு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இது பற்றி அறப்போர் இயக்கம் புகார் எழுப்பியது. கட்டுமானத்துக்கு அனுமதி அளித்த அரசு அதிகாரிகள் மீதும் அறப்போர் இயக்க ஒருங்கிணைப்பாளர் ஜெயராம் வெங்கடேசன் குற்றச்சாட்டுகளை தெரிவித்துள்ளார். இதையடுத்து பல்வேறு அரசியல் கட்சியினரும் இந்த பிரச்னையை கையில் எடுத்தனர். கட்டுமானத்துக்கு வழங்கப்பட்ட அனுமதியை ரத்து செய்ய வேண்டும் என்றும் கோரியுள்ளனர்.
இந்நிலையில், சதுப்பு நிலத்தில் அடுக்குமாடி கட்ட அனுமதி அளித்த உத்தரவை ரத்து செய்யக்கோரியும், சதுப்பு நிலத்தை சுற்றி ஒரு கிலோ மீட்டர் சுற்றளவுக்கு எந்த கட்டுமான பணிகளுக்கும் அனுமதி அளிக்கக்கூடாது என்ற கோரியும் அதிமுக வழக்கறிஞர் அணி நிர்வாகி ப்ரஸ்நெவ் சென்னை ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்தார்.
இந்த வழக்கு இன்று (அக் 31 ) ஐகோர்ட் தலைமை நீதிபதி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு தரப்பில், ''கட்டப்படும் கட்டடத்திற்கு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் அனுமதி வழங்கி உள்ளது. சதுப்பு நிலத்தில் எல்லையை துல்லியமாக தீர்மானிப்பது குறித்த ஆய்வு 2 வாரத்தில் முடிவடையும்'' என வாதங்கள் முன் வைக்கப்பட்டது.
பின்னர் ஐகோர்ட் நீதிபதிகள் கூறியதாவது:
* சுப்ரீம்கோர்ட், பசுமைத் தீர்ப்பாய உத்தரவுகள் தெரியாமல் சிஎம்டிஏ கட்டுமானத்துக்கு அனுமதித்தது எப்படி? 
* பள்ளிக்கரணை சதுப்பு நிலப் பகுதியில் குடியிருப்பு வளாகம் கட்டும் பணி மேற்கொள்ளக் கூடாது. 
* நவம்பர் 12ம் தேதிக்குள் தமிழக அரசு, மத்திய அரசு பதில் அளிக்க வேண்டும் என ஐகோர்ட் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
 வாசகர் கருத்து (27)
         
        ஜெய்ஹிந்த்புரம்   - Madurai,இந்தியா          
 
         31 அக்,2025 - 19:53 Report Abuse
       இடித்துத் தள்ள உத்தரவு போட என்ன தயக்கம்? வடநாட்டு சார் என்ன சொல்வாரோ என்ற பயமா? இடித்து சதுப்புநிலத்தில் போடாமல் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
  இடித்துத் தள்ள உத்தரவு போட என்ன தயக்கம்? வடநாட்டு சார் என்ன சொல்வாரோ என்ற பயமா? இடித்து சதுப்புநிலத்தில் போடாமல் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.  0
0 
        Reply 
      
     Rajan A   - ,இந்தியா          
 
         31 அக்,2025 - 18:30 Report Abuse
       அந்த கம்பெனி ஏன் வாயே திறக்கவில்லை?
  அந்த கம்பெனி ஏன் வாயே திறக்கவில்லை?  0
0 
       ஜெய்ஹிந்த்புரம்  - Madurai,இந்தியா  
        
        
         31 அக்,2025 - 19:54Report Abuse
        
       சார் யார்?
சார் யார்?  0
0 
      
        Reply 
      
     V GOPALAN   - chennai,இந்தியா          
 
         31 அக்,2025 - 17:04 Report Abuse
       உச்ச நீதிமன்றம் சென்று வென்று வருவார்கள்
  உச்ச நீதிமன்றம் சென்று வென்று வருவார்கள்  0
0 
        Reply 
      
     panneer selvam   - Dubai,இந்தியா          
 
         31 அக்,2025 - 16:10 Report Abuse
       In the history Dravidian government for any misdeed of government , no government officials has been penalized or at the maximum they will be moved to another location . Have not seen , any police caught in corruption case , the punishment is just transfer to armed battalion of course after a few months , they will be back .
  In the history Dravidian government for any misdeed of government , no government officials has been penalized or at the maximum they will be moved to another location . Have not seen , any police caught in corruption case , the punishment is just transfer to armed battalion of course after a few months , they will be back .  0
0 
        Reply 
      
     Raja    - Coimbatore,இந்தியா          
 
         31 அக்,2025 - 16:02 Report Abuse
       இது குறித்த விரிவான தகவல்களை எடுத்துரைத்த திரு.சவுக்கு சங்கர் அவர்களுக்கும், அதிமுகவுக்கும் மனமார்ந்த நன்றி.
  இது குறித்த விரிவான தகவல்களை எடுத்துரைத்த திரு.சவுக்கு சங்கர் அவர்களுக்கும், அதிமுகவுக்கும் மனமார்ந்த நன்றி.  0
0 
        Reply 
      
     Palanisamy Sekar   - Jurong-West,இந்தியா          
 
         31 அக்,2025 - 15:52 Report Abuse
       அப்போ திரும்ப அந்த பணத்தை கொடுத்துடுவாங்களா? இல்லை கவலையே படாதீங்க, சுப்ரீம் கோர்ட்டுக்கு போயாவது அங்கே கட்டிடம் கட்ட அனுமதியை வாங்கித்தர்றோம் ன்னு சொல்லி வாங்கிய பணத்தை திரும்ப கொடுக்காமல் இழுத்தடிக்க போறாங்களோ தெரியல. ஆட்சி மாற்றம் வந்துடும்ன்னு பயந்துபோய் இப்படி அனுமதி கொடுப்பதை இன்னும் நிறைய பார்க்கப்போகிறோம்
  அப்போ திரும்ப அந்த பணத்தை கொடுத்துடுவாங்களா? இல்லை கவலையே படாதீங்க, சுப்ரீம் கோர்ட்டுக்கு போயாவது அங்கே கட்டிடம் கட்ட அனுமதியை வாங்கித்தர்றோம் ன்னு சொல்லி வாங்கிய பணத்தை திரும்ப கொடுக்காமல் இழுத்தடிக்க போறாங்களோ தெரியல. ஆட்சி மாற்றம் வந்துடும்ன்னு பயந்துபோய் இப்படி அனுமதி கொடுப்பதை இன்னும் நிறைய பார்க்கப்போகிறோம்  0
0 
        Reply 
      
     C.SRIRAM   - CHENNAI,இந்தியா          
 
         31 அக்,2025 - 15:37 Report Abuse
       அனுமதி கொடுத்த அதிகாரிகளே பெரும் தொகையை லஞ்சமாக பெற்றிருப்பதாக தெரிகிறது . சம்பத்தப்பட்ட எல்லாரையும் பாரபட்சமின்றி டிஸ்மிஸ் செய்து சிறையில் அடைத்தல் நலம் ?. செய்வார்களா ?
  அனுமதி கொடுத்த அதிகாரிகளே பெரும் தொகையை லஞ்சமாக பெற்றிருப்பதாக தெரிகிறது . சம்பத்தப்பட்ட எல்லாரையும் பாரபட்சமின்றி டிஸ்மிஸ் செய்து சிறையில் அடைத்தல் நலம் ?. செய்வார்களா ?  0
0 
        Reply 
      
     shunmugham    - ,          
 
         31 அக்,2025 - 15:28 Report Abuse
       வேலியே பயிரை மேய்ந்த கதை மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது. இதெல்லாம் திராவிட மாடல் என்று தமிழ்நாடு பெருமை கொள்ள வேண்டும்.
  வேலியே பயிரை மேய்ந்த கதை மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது. இதெல்லாம் திராவிட மாடல் என்று தமிழ்நாடு பெருமை கொள்ள வேண்டும்.  0
0 
        Reply 
      
     ஆரூர் ரங்   - ,          
 
         31 அக்,2025 - 15:18 Report Abuse
       நம்பி பிளாட் புக் செய்தவர்கள் கதி? கேரளாவில் இரண்டு பெரிய அடுக்குமாடி கட்டிடங்கள் பல ஆண்டுகள், வழக்குகளுக்கு பின் இடிக்கப்பட்டதால் நூற்றுக்கணக்கான குடியிருப்புவாசிகள் நடுத்தெருவுக்கு தள்ளப்பட்டனர். ஆட்சி மாறும்வரை பொறுத்திருந்து வாங்குவது சிறந்தது. அப்போதும் சதுப்பு நிலம் அருகில் வாங்கி உலகை சிதைக்காதீர்கள்.
  நம்பி பிளாட் புக் செய்தவர்கள் கதி? கேரளாவில் இரண்டு பெரிய அடுக்குமாடி கட்டிடங்கள் பல ஆண்டுகள், வழக்குகளுக்கு பின் இடிக்கப்பட்டதால் நூற்றுக்கணக்கான குடியிருப்புவாசிகள் நடுத்தெருவுக்கு தள்ளப்பட்டனர். ஆட்சி மாறும்வரை பொறுத்திருந்து வாங்குவது சிறந்தது. அப்போதும் சதுப்பு நிலம் அருகில் வாங்கி உலகை சிதைக்காதீர்கள்.  0
0 
       திகழ்ஓவியன்  - AJAX  ONTARIO,இந்தியா  
        
        
         31 அக்,2025 - 18:45Report Abuse
        
       டெல்லியில் 23 மாடி கட்டிடம் இப்படி unaproved என்று அப்ப என்ன செய்தீர்கள் , இங்கு ஜஸ்ட் ஸ்டே தான் அரசு தான் நம்பிக்கை கொடுக்கிறதே என்ன கவலை , ஆருத்ரா திருடன் எல்லாம் சுற்றி கொண்டு தானே இருக்காங்களே
டெல்லியில் 23 மாடி கட்டிடம் இப்படி unaproved என்று அப்ப என்ன செய்தீர்கள் , இங்கு ஜஸ்ட் ஸ்டே தான் அரசு தான் நம்பிக்கை கொடுக்கிறதே என்ன கவலை , ஆருத்ரா திருடன் எல்லாம் சுற்றி கொண்டு தானே இருக்காங்களே  0
0 
      
       Oviya vijay   - ,  
        
        
         31 அக்,2025 - 21:02Report Abuse
        
       2G , 10 roova பாலா தங்க hair இவங்க எல்லாம் அரசர்கள் மாதிரி வலம் வரும்போது ஆருத்ரா எல்லாம் piskothu
2G , 10 roova பாலா தங்க hair இவங்க எல்லாம் அரசர்கள் மாதிரி வலம் வரும்போது ஆருத்ரா எல்லாம் piskothu  0
0 
      
        Reply 
      
     C.SRIRAM   - CHENNAI,இந்தியா          
 
         31 அக்,2025 - 15:11 Report Abuse
       துல்லியமாக அளவீடு செய்யாமல் அனுமதி எப்படி ?. இங்கு கட்டப்படும் வீடு பூமிக்கு உள்ளெ அமுங்கிவிடும் வாய்ப்பு ஏராளம் . திருட்டு திராவிடம் மீண்டும் நிரூபணம் .
  துல்லியமாக அளவீடு செய்யாமல் அனுமதி எப்படி ?. இங்கு கட்டப்படும் வீடு பூமிக்கு உள்ளெ அமுங்கிவிடும் வாய்ப்பு ஏராளம் . திருட்டு திராவிடம் மீண்டும் நிரூபணம் .  0
0 
        Reply 
      
    மேலும் 14 கருத்துக்கள்...
மேலும்
-     
          48 பதக்கம் குவித்த இந்தியா * ஆசிய யூத் விளையாட்டில் முதன் முறையாக...
-     
          டில்லி அணி சாம்பியன்: புரோ கபடி லீக் தொடரில்
-     
          ஜிஎஸ்டி சீரமைப்பு: யுபிஐ பணப்பரிமாற்றம் அதிகரிப்பு
-     
          உலக விளையாட்டு செய்திகள்
-     
          ஜோனா, ஜானிஸ் கலக்கல்: சென்னை ஓபன் டென்னிசில்
-     
          தான்சானியாவில் தேர்தல் முடிவுக்கு எதிராக வெடித்தது மோதல்: 700 பேர் பலி என அச்சம்
Advertisement
 Advertisement
 

 
  
  
 


