தேஜஸ்வி இந்த முறை எப்படியும் பீஹார் முதல்வராகி விடுவார்: லாலு நம்பிக்கை
  பாட்னா: தேஜஸ்வி எப்படியும் இந்த முறை பீஹார் முதல்வராகிவிடுவார் என்று அவரது தந்தையும், முன்னாள் முதல்வருமான லாலு பிரசாத் கூறி இருக்கிறார்.
ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திற்கு அவர் அளித்த பேட்டியில் இவ்வாறு கூறியுள்ளார். லாலு பிரசாத் மேலும் கூறியதாவது; 
நவ.14ம் தேதி பீஹாரில் அரசாங்கம் மாறிவிடும். இந்த முறை தேஜஸ்வி முதல்வராவார். ராஷ்டிரிய ஜனதா தள தேர்தல் பிரசாரத்தில் மட்டுமல்ல, மாநிலம் முழுவதில் இருந்தும், அவருக்கு பெரும் ஆதரவு கிடைத்து வருகிறது.
தேர்தல் பிரசாரம் சிறப்பாக நடக்கிறது. எங்கள் கூட்டணி வெற்றி பெறும். உள்ளூர் நிர்வாகிகள் சிறப்பாக செயல்படுகின்றனர். 
இவ்வாறு லாலு  கூறினார்.
எதிர்க்கட்சிகள் கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக நிறுத்தப்பட்டு உள்ள தேஜஸ்வி, ரகோபூர் தொகுதியில் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளராக சதீஷ்குமார் களம் காண்கிறார். இவர்கள் தவிர, பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் கட்சி வேட்பாளர் சஞ்சல்குமாரும் களத்தில் உள்ளார்.
  ஐயோ பாவம். பெருசு உன் பையன் எதிர்கட்சி வரிசையில் தான் அமர்வான்
  ஒருவேளை தேஜஸ்வி பீகார் முதல்வர் ஆனால் அன்றே தொடங்கிவிடும் பீகார் மாநிலத்தின் வீழ்ச்சி. பீகார் வீழ்ச்சி அடையவேண்டுமா பீகார் வாக்காளர்களே? யோசியுங்கள். நேர்மையான வாக்காளரை தேர்ந்து எடுத்து முதல்வராக்குங்கள். பீகாரை வளர்ச்சிப்பாதையில் கொண்டுசெல்ல முயலுங்கள்.மேலும்
-     
        
 10, 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தேதி அறிவிப்பு: முழு விபரம் இதோ!
 -     
        
 அதிமுக எம்எல்ஏ மனோஜ் பாண்டியன் திமுகவில் ஐக்கியம்
 -     
        
 கோவையில் இளம்பெண்ணுக்கு நிகழ்ந்த துயரம் மனிதத்தன்மையற்றது; முதல்வர் ஸ்டாலின்
 -     
        
 கோவையில் குற்றவாளிகளை சுட்டுப்பிடித்தது எப்படி? போலீஸ் கமிஷனர் விளக்கம்
 -     
        
 74 சதவீத இந்திய மாணவர்கள் விசா விண்ணப்பங்கள் நிராகரித்த கனடா!
 -     
        
 தங்கம் விலை சவரனுக்கு ரூ.800 குறைவு; ஒரு சவரன் ரூ.90 ஆயிரத்திற்கு விற்பனை