ஒரு நாளைக்கு, 40 முதல் 50 வீடுகளுக்கு ஓட்டுச்சாவடி அலுவலர்கள் செல்ல வியூகம்: கோபாலசாமி
புதுடில்லி: ''கணக்கெடுப்பு படிவத்துடன் வரும் ஓட்டுச்சாவடி அலுவலர்களிடம், அதை வாக்காளர்கள் இன்று பெற்றுக்கொள்ள வேண்டும். ஒரு நாளைக்கு, 40 முதல் 50 வீடுகளுக்கு ஓட்டுச்சாவடி அலுவலர்கள் செல்லும் வகையில் வியூகம் வகுக்கப்பட்டு உள்ளது,'' என, முன்னாள் தலைமை தேர்தல் கமிஷனர் கோபாலசாமி கூறினார்.
தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணியை, இந்திய தேர்தல் ஆணையம் இன்று துவங்க உள்ளது. இதன் முதல் கட்டமாக, வாக்காளர்கள் குறித்த கணக்கெடுப்பு பணிகளில், ஓட் டுச்சாவடி அலுவலர்கள், இன்று முதல் ஈடுபட உள்ளனர். இதற்காக, வீடு வீடாக வரும் ஓட்டுச்சாவடி அலுவலர்களை அணுகுவது தொடர்பாக, பல்வேறு கேள்விகள் வாக்காளர்கள் மத்தியில் எழுந்துள்ளன.
முன்னாள் தலைமை தேர்தல் கமிஷனர் கோபாலசாமி அளித்த பேட்டி:
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியின் முதல் நாளான இன்று என்ன நடக்க போகிறது?
கடந்த, 2002ம் ஆண்டு தயாரிக்கப்பட்ட வாக்காளர் பட்டியலுடன், ஓட்டுச்சாவடி அலுவலர்கள், வாக்காளர்களின் வீடுகளுக்கு வருவர். இதற்கான பட்டியல், தேர்தல் கமிஷன் வாயிலாக, ஓட்டுச்சாவடி அலுவலர்களுக்கு வழங்கப்பட்டு உள்ளது. அவர்கள் கொண்டு வரும் படிவத்தில், தொடர்புடைய வாக்காளரின் பெயர், முகவரி விபரம் இடம்பெற்று இருக்கும். அதை வாக்காளர்கள் வாங்கி கொள்ள வேண்டும்.
அந்த வாக்காளர், 2002ம் ஆண்டு அதே இடத்தில் வசித்திருந்தால், மற்ற விபரங்களை பூர்த்தி செய்ய வேண்டும். அந்த வாக்காளர், தொகுதி அல்லது வீடு மாறி இருந்தால் என்ன செய்ய வேண்டும்?
ஒருவேளை, 2002ம் ஆண்டு வேறு ஒரு தொகுதியில், வேறு ஒரு இடத்தில், அந்த வாக்காளர் இருந்தால், அதை ஓட்டுச்சாவடி அலுவலரிடம் தெரிவிக்க வேண்டும். ஓட்டுச்சாவடி அலுவலர், அந்த தொகுதியில், 2002ம் ஆண்டு வாக்காளர் பட்டியலை பார்த்து, அவரது இருப்பை உறுதி செய்வார். அதன்பின், குடும்பத்தில் உள்ள மற்ற வாக்காளர்களின் விபரத்தை படிவத்தில் பூர்த்தி செய்ய வேண்டும். ஓட்டுச்சாவடி அலுவலர் அடுத்தமுறை வரும்போது, மீண்டும் சமர்பிக்க வேண்டும்.
எத்தனை நாட்களில் கணக்கெடுப்பு பணி நிறைவு பெற வாய்ப்புள்ளது?
ஒவ்வொரு ஓட்டுச்சா வடிக்கும், 1,200 வாக்காளர்கள் இருக்கும்படி, இந்திய தேர்தல் ஆணையம் வரையறை நிர்ணயம் செய்துள்ளது. அதன்படி, கிராமங்களில் குறைந்தபட்சம், 250 வீடுகள் வரை இருக்கும். நகரப் பகுதிகளில் அடுக்குமாடி குடியிருப்புகளில், மொத்தமாக பல வாக்காளர்கள் இருக்கவும் வாய்ப்புள்ளது.
ஒரு நாளைக்கு, 40 முதல் 50 வீடுகளுக்கு ஓட்டுச்சாவடி அலுவலர்கள் செல்லும் வகையில் வியூகம் வகுக்கப்பட்டு உள்ளது. அதன்படி, ஒரு வாரம் அல்லது, 10 நாட்களுக்குள் கணக்கெடுப்பு விண்ணப்பம் வினியோகம் செய்யும் பணிகள் நிறைவு பெறும். அடுத்தகட்ட சுற்றின்போது, ஓட்டுச்சாவடி அலுவலர்கள் கேட்கும் ஆவணங்களை, வாக்காளர்கள் வழங்க வேண்டும். படிவத்தை பூர்த்தி செய்வதில், ஏதாவது சந்தேகம் இருந்தால், அதற்கு தேவையான உதவிகளை, ஓட்டுச்சாவடி அலுவலர்கள் வழங்குவர். இவ்வாறு அவர் கூறினார்.
முதல்ல விண்ணப்பம் பெறுவதற்கு வாக்காளர்கள் வீட்டில் இருப்பார்களா? என்பதே சந்தேகம். வார இறுதிநாட்கள் சென்றால் கூட அவர்கள் ஊருக்கு சென்று விடுவார்கள். நீங்கள் விண்ணப்பம் கொடுக்கும் நாட்களை முன்பாகவே அந்த 50 வீடுகளுக்கு தெரியபடுத்துவீர்களா? அதுவும் முடியாது. உங்களால் மொபைல் எண் இணைப்பு கூட வீடு வீடாக செயல்படுத்துவதில் தோல்விதான். இன்னொன்று நீங்கள் வழங்கிய வாக்காளர் அட்டையில் முகவரி சரியாக இருந்தும் 10 க்கு மூன்று வாக்காளர்களாவது அவருக்கு உரிய வாக்கு சாவடி கிடையாது. இதனாலே ஒட்டு அளிக்கும் உரிமை அவர் இழக்கிறார். இதில் சிறப்பு சீர்திருத்தம் என்ற பெயரில் என்ன செய்ய போகிறீர் ? பாஜக கொடுத்த நீக்கல் பட்டியலை செய்யப்போகிறீர்கள். ஜனநாயக படுகொலையை யார் தடுக்க போகிறார்கள் என்று நினைத்தால் அச்சம் தான் வருகிறது. தேர்தல் ஆணையம் மீதும் நம்பிக்கை இல்லை . நமது ஜனாதிபதி மீது முற்றிலும் நம்பிக்கைஇல்லை. நீதிமன்றம் தான் சற்று நம்பிக்கை அளித்து ஜனநாயகத்தை காப்பாற்றி வருகிறது. யாராவது எங்கள் ஜனநாயகத்தை காக்க உறுதுணையாக இருந்தால் அவருக்கு நோபல் பரிசுக்கு பரிந்துரை செய்வோம் .. டிரம்ப் அவர்கள் காதில் கேட்கிறதா ?
முதலில் அலுவலர்கள் 8 மணிநேரம் ஒழுங்காக வேலை செய்வார்கள் என்று நம்புவோம். 8 மணி நேரமும் இதற்காகவே வேலை செய்வார்கள் என்றும் நம்புவோம். 8 மணிநேரத்தில் 40-50 வீடுகள் என்று நம்ம்ம்ம கோபாலசாமி ஐயா சொல்லீருக்கார். சரி ஒரு 45 வீடுன்னு வெச்சிக்குவோம். ஒரு வீட்டில கதவை தட்ட அவங்க தொறக்க, அப்புறம் அடுத்த வீட்டுக்கு போக உத்தேசமா ஒரு நிமிடம் வச்சுக்கிட்டா அதுக்கே 8 மணி நேரத்தில ஒரு மணி நேரம் ஆகிடும். மிச்சம் 7 மணி நேரம், அதாவது 420 நிமிடங்கள் இருக்கு. இதிலே ஒண்ணுக்கு, அடி, லஞ்ச் ப்ரேக்ன்னு ஒரு மணி நேரம் போனா 360 நிமிஷம் தான் இருக்கும். ஒரு வீட்டிலே 2-4 பேரு, சராசரியா 3 பேர்ன்னு வெச்சிக்கலாம். 3 பெருக்கல் 45 ன்னா 135 பேரு. சுமாரா ஒரு ஆளுக்கு இரண்டரை நிமிஷம். ஆளுக்கு எத்தனை ஆதாரங்களை சரி பார்க்கணும்? முடியுமா? ஏசி ரூமிலே ஒக்காந்து சமோசா சாப்பிட்டு கொண்டு பிளான் பண்ணா இப்படித்தான். இஷ்டத்துக்கு பேர்களை பார்த்து, தெருவை பார்த்து, பேரை நீக்க வேண்டுமானால் இந்த இரண்டரை நிமிடங்கள் அதிகம் தான்.
அது என்ன வச்சுக்குவோம் , வச்சுக்குவோம் .. நீங்க திமுக தானே
ஆஹா ஆஹா என்ன அருமையான அலசல். வெறுப்பு இருக்கலாம், அது இவ்வளவு மோசமாக இருக்க கூடாது.
தமிழக தேர்தல் ஆணையம் ஒரு தனியார் நிறுவனத்திடம் கொடுத்து ஒரு வாக்காளர் திருத்த பட்டியலை தயாரித்தார்களே அதை மனதில் வைத்து கூறியிருப்பது போல தெரிகிறது. அனுபவம் பேசுதோ
மூளை மழுங்கிய இருநூறு கொத்தடிமையின் கருத்து.....
2002 ஆம் ஆண்டு வாக்காளர் பட்டியலா ... 90 சதவிகித வாக்காளர்கள் இடம் மாறியிருப்பார்கள்..
முதல் தேவை.. மக்கள் தொகை கணக்கெடுப்பு. அதை முடித்தாலே பெரும்பாலான பிரச்சனைகள் தீர்ந்து விடும்
நல்ல நடவடிக்கைதான். நல்ல வ்யூகமும் கூட. கள்ள பங்களாதேஷி, ரொஹின்யா குடியேறிகள் அடையாளம் கிட்டும். அவர்கள் பெயரும் நீங்கும். இறந்தவர்கள் பெயர் நீக்கப்படும். அவர்கள் பெயரில் இடப்படும் கள்ளவோட்டுகள் நின்றுபோகும்.
பங்காளதேசி, ரோஹிங்யா குடியேறிகள் ஒருவரையாவது நீங்கள் பார்த்திருக்கிறீர்களா? என்ன வட மாநில மக்கள் போல தமிழ்நாட்டில் பெருகி வழிகிறார்களா? சும்மா சும்மா இங்கு இல்லாததை சொல்லி பயங்காட்டும் அரசியல்வாதிகள் சொல்கிறார்கள் என்று மண்டைக்குள் இறக்கக்கூடாது.
நக்சல் இருக்கிறார்கள் என்று புலம்பாமல் இருந்தால் சரி.
பாவம்....கும்மிடிப்பூண்டியை தாண்டதவர் போல கருத்து போடுகிறார்மேலும்
-
74 சதவீத இந்திய மாணவர்கள் விசா விண்ணப்பங்கள் நிராகரித்த கனடா!
-
தங்கம் விலை சவரனுக்கு ரூ.800 குறைவு; ஒரு சவரன் ரூ.90 ஆயிரத்திற்கு விற்பனை
-
மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை: முதல்வர் பதில் அளிக்க நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்
-
இது நடந்தால் நியூயார்க் நகரத்திற்கு நிதியை நிறுத்துவேன்: அதிபர் டிரம்ப் அச்சுறுத்தல்
-
அ.தி.மு.க., அலுவலகத்தில் பேனர் அகற்றியதால் பரபரப்பு
-
குறிவைத்து அடிக்கும் பா.ஜ.,வுக்கு முதல் பலி நான்