வடகொரியா முன்னாள் கவுரவ அதிபர் மறைவு
பியாங்யாங்: வடகொரியாவின் முன்னாள் கவுரவ அதிபர் கிம் யோங் நம், 97, உடல் நலக் குறைவால் நேற்று முன்தினம் காலமானார்.
கிழக்காசிய நாடான வடகொரியாவில், 1998 முதல் 2019 வரை வடகொரிய மக்கள் சபையின் தலைவராக இரு ந்தவர் கிம் யோங் நம். இது, அந்நாட்டின் கவுரவ அதிபர் பதவி போன்றது.
கடந்த, 2019ல் அரசியலில் இருந்து ஓய்வு பெற்ற கிம் யோங் நம், அவ்வப்போது அரசு நிகழ்ச்சிகளில் மட்டும் பங்கேற்று வந்தார்.
இந்நிலையில், கடந்த சில ஆண்டுகளுக்கு முன் அவருக்கு புற்றுநோய் ஏற்பட்டது. இதனால் உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்த அவர் நேற்று முன்தினம் உயிரிழந்தார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
கூட்டணி பற்றி முடிவு எடுக்க விஜய்க்கு அதிகாரம்: தவெக சிறப்பு பொதுக்குழுவில் தீர்மானம்
-
அமெரிக்க பொருட்கள் மீதான 24% வரிவிதிப்பு நிறுத்தம்: சீனா அறிவிப்பு
-
சரக்கு ரயில் மீது பயணிகள் ரயில் மோதல்; பலி 11 ஆக உயர்வு; உயிர் பிழைத்தவர்கள் பகீர் தகவல்
-
அமெரிக்க தேர்தலில் டிரம்ப் கட்சி படுதோல்வி
-
4 மணி நேரம் 25 நிமிடம் என்ன செய்தது போலீஸ்: கோவை பாலியல் வழக்கில் இபிஎஸ் கேள்வி
-
2 நாட்களில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1360 சரிவு: ஒரு சவரன் ரூ.89,440க்கு விற்பனை
Advertisement
Advertisement