வாக்காளர் பட்டியல் பணி கலெக்டர் எச்சரிக்கை

நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பத்தில் வாக்காளர் பட்டியல் திருத்த பணியை கலெக்டர் ஆய்வு செய்தார்.

கடலுாரில் வாக்காளர் பட்டியல் திருத்த பணி நடந்து வருகிறது. இந்நிலையில், நெல்லிக் குப்பத்தில் நடைபெறும்

பணியை கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் ஆய்வு செய்தார்.

ரத்தினம் தெருவில் உள்ள வீட்டுக்கு சென்று தேர்தல் ஆணையம் வழங்கிய படிவத்தை கொடுத்து எப்படி பூர்த்தி செய்து வழங்க வேண்டுமென அலுவலர்களிடம் கலெக்டர் கேட்டார். அப்போது சரியாக விளக்கம அளிக்க முடியாமல் அதிகாரிகள் திணறினர். இதனால் டென்ஷனான கலெக்டர், முறையாக பணி செய்யாவிட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தார்.

இந்த நிகழ்வில், துணை கலெக்டர் டியூட்பர்க்கர், ஆதிதிராவிடர் நல அலுவலர் கமலம், தாசில்தார் பிரகாஷ், கமிஷ்னர் கிருஷ்ணராஜன் உடனிருந்தனர்.

இந்த பகுதியில், மொத்தமுள்ள 38 பூத்துகளில் 26 பூத்துகளுக்கு மட்டுமே படிவங்கள் வந்துள்ளது குறிப்பிடத் தக்கது.

Advertisement