தென் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
சென்னை: 'தென் மாவட்டங்களில், அடுத்த இரண்டு நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது' என, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வானிலை மையம் அறிக்கை:
தமிழகத்தில் ஒரு சில இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்று காலை 8:30 மணியுடன் முடிவடைந்த, 24 மணி நேரத்தில், அதிகபட்சமாக, சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் 12 செ.மீ., மழை பெய்துள்ளது. அடுத்து, தஞ்சாவூர் மாவட்டம் கீழ் அணைக்கட்டு, அரியலுார் மாவட்டம் ஜெயங் கொண்டம் பகுதியில், தலா 8 செ.மீ., மழை பெய்தது.
தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும், இன்றும், நாளையும், இடி, மின்னலுடன் கூடிய, லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது.
ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், மதுரை, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில், இன்று சில இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. நாளை, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, துாத்துக்குடி, மாவட்டங்களில், சில இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.
நவ., 10, 11 ஆகிய தேதிகளில், தென்தமிழகத்தில் சில இடங்களிலும், வடதமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் இடி, மின்னலுடன் லேசான மழை பெய்யும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும்
-
தொடரை வெல்லுமா இந்தியா * இன்று ஐந்தாவது 'டி-20' மோதல்
-
இந்திய ஹாக்கி நுாற்றாண்டு விழா * ஜூனியர் கோப்பையை பெற்றார் உதயநிதி
-
உலக செஸ்: அர்ஜுன், பிரனவ் வெற்றி
-
இந்திய பவுலர்கள் அபாரம் * மூன்று விக்கெட் சாய்த்த பிரசித்
-
ஸ்குவாஷ்: அரையிறுதியில் ராதிகா
-
இந்தியாவில் இருந்து வந்த அழைப்பு தான் ஷேக் ஹசீனாவின் உயிரை காப்பாற்றியது: வன்முறை குறித்த புத்தகத்தில் தகவல்