ரத்தத்தில் சர்க்கரை அளவை எளிதாக அறிய சென்னை ஐ.ஐ.டி.,யில் புதிய கருவி உருவாக்கம்
சென்னை: சென்னை ஐ.ஐ.டி., ஆராய்ச்சியாளர்கள், ரத்தத்தில் உள்ள குளுக்கோஸ் அளவை கணக்கிடும், 'கை கடிகாரம்' வடிவிலான புதிய கருவியை உருவாக்கி, காப்புரிமை பெற்றுள்ளனர்.
ஐ.சி.எம்.ஆர்., எனும், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில், 2023ம் ஆண்டு, ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதில், நாட்டில் மொத்த மக்கள் தொகையில், 9 சதவீதம் பேருக்கு நீரிழிவு நோய் பாதிப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகரித்து வரும் நோயாளிகளுக்கு ஏற்ப, பரிசோதனைகளும் மேம்பட்டு வருகின்றன.
தற்போது, சி.ஜி.எம்., எனும் நடைமுறையில், ரத்தத்தில் உள்ள குளுக்கோஸ் அளவு கண்காணிக்கப்படுகிறது. அதாவது, ஒரு சென்சார் சாதனம், நோயாளியின் கை அல்லது வயிற்று பகுதியில் பொருத்தப்படும். அதில் உள்ள, 2 முதல் 3 மி.மீட்டர் நீளத்திலான ஊசி, ரத்த நாளத்துடன் இணைக்கப்படும். அதன் வழியே, தினமும் ரத்தத்தில் உள்ள குளுக்கோஸ் அளவை, நம் மொபைல் போனில் அறிந்து கொள்ள முடியும்.
இந்த சாதனத்தை நான்கு வாரங்கம் மட்டுமே பயன்படுத்த முடியும். அதன்பின் வேறு சாதனம் பொருத்த வேண்டும். இதற்கு கூடுதல் செலவாகும். இந்நிலையில், சென்னை ஐ.ஐ.டி., ஆராய்ச்சியாளர்கள், ரத்தத்தில் உள்ள குளுக்கோஸ் அளவை எளிதாக அறிந்து கொள்ள, 'கை கடிகாரம்' வடிவிலான கருவியை உருவாக்கி, அதற்கு காப்புரிமை பெற்றுள்ளனர்.
இந்த கை கடிகாரத்திற்கு கீழே, 'சென்சார்' பொருத்தப்பட்டுள்ளது. அதில் உள்ள 1 மி.மீ., அளவிலான ஊசி, ரத்த நாளங்களுக்கு மேல் இருக்கும் திரவங்கள் வழியே, ரத்தத்தில் உள்ள குளுக்கோஸ் அளவை உடனடியாக கணக்கிட்டு, கை கடிகாரத்தின் திரையில் காண்பிக்கும். இந்த புதிய கருவியில், ஊசியை மட்டும் தேவைக்கேற்ப மாற்றிக் கொள்ளலாம்.
இது குறித்து, சென்னை ஐ.ஐ.டி.,யின் உலோகவியல் மற்றும் பொருட்கள் இன்ஜினியரிங் துறையின் மின்னணு பொருட்கள் ஆய்வகத்தின் பேராசிரியர் பரசுராமன் சுவாமிநாதன் கூறுகையில், ''கை விரல்களில் ஊசியை குத்தி, ரத்தத்தில் உள்ள குளுக்கோஸ் அளவை அறியும், அசவுகரியத்தை தவிர்க்க, சென்னை ஐ.ஐ.டி.யின் புதிய கண்டுபிடிப்பு வழிவகை செய்யும்,'' என்றார்.
கருவி பல சோதனைகளைக் கடந்து வணிகப்பயன்பாட்டுக்கு வரட்டும் .... ஆனால் ஏற்கனவே இந்த பிசினஸில் இருக்கும் நிறுவனங்கள் தொல்லை கொடுக்க வாய்ப்பிருக்கிறது ....
ஐ ஐ டி மிக சிறந்த கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம். பாராட்டுக்கள். வாழ்த்துக்கள். இதை ஒழிக்க மிகவும் பாடு பட்டனர் திராவிட மற்றும் விடுதலை சிறுத்தை கும்பல். நல்ல வேலை. இன்றும் உயிரோடு இருக்கிறது ஐ ஐ டி. வாழ்க வளமுடன்
இது ஒன்னும் புதிகண்டுபிடிப்பில்லை
கட்டிடங்களின் கூரையிலிருந்து கூவப்படும் - தமிழகம் எல்லவாற்றிழும் முன்னோடி என்பதற்கு மற்றோரு சான்று.
ரத்தத்தில் சர்க்கரை அளவை எளிதாக அறிய சென்னை ஐ.ஐ.டி.,யில் புதிய கருவி உருவாக்கம். ஹி...ஹி...ஹி... இதெல்லாம் ஒரு பெருமையா? விஞ்ஞான ரீதியில் எங்குமே நிரூபிக்க முடியாதபடி ஊழல் செய்யும் கட்டுமர திருட்டு திமுகவினரை கண்டுபிடிக்க ஒரு கருவி செய்யுங்க பார்க்கலாம். அந்த கருவியையே எங்குமே நிரூபிக்க முடியாதபடி ஆட்டையை போட்டு காட்டுவார்கள் கட்டுமர திருட்டு திமுகவினர். சர்க்கரை அளவிற்கு கருவியாம், போவியா அங்கிட்டு. ஹி...ஹி...ஹி...
ரத்தத்தில் சர்க்கரை அளவை எளிதாக அறிய சென்னை ஐ.ஐ.டி.,யில் புதிய கருவி உருவாக்கம் கை விரல்களில் ஊசியை குத்தி, ரத்தத்தில் உள்ள குளுக்கோஸ் அளவை அறியும், மேலும் தற்போதுள்ள அசவுகரியத்தை தவிர்க்க, சென்னை ஐ.ஐ.டி.யின் புதிய கண்டுபிடிப்பு வழிவகை செய்யும் என்ற தினமலரின் செய்தி அனைவருக்கும் ஒரு சூப்பர் செய்தியாகும். விரைவில் இந்த புதிய கருவி சந்தைக்கு விற்பனைக்கு வந்தால், லட்சக்கணக்கில் விற்பனை ஆகும் என்பதில் சந்தேகமேயில்லை. ஆனால் விலை குறைந்த பொருளாதாரத்தில் உள்ள எளியோர்களும் வாங்கும் அளவிற்கு சுமாராக இருக்கவேண்டும். விரைவில் இது நிறைவேறட்டும்.
உண்மையா இருக்குமா வேணு . எதற்கும் தமிலன் கிட்ட பேசுங்கள்.மேலும்
-
தொடரை வெல்லுமா இந்தியா * இன்று ஐந்தாவது 'டி-20' மோதல்
-
இந்திய ஹாக்கி நுாற்றாண்டு விழா * ஜூனியர் கோப்பையை பெற்றார் உதயநிதி
-
உலக செஸ்: அர்ஜுன், பிரனவ் வெற்றி
-
இந்திய பவுலர்கள் அபாரம் * மூன்று விக்கெட் சாய்த்த பிரசித்
-
ஸ்குவாஷ்: அரையிறுதியில் ராதிகா
-
இந்தியாவில் இருந்து வந்த அழைப்பு தான் ஷேக் ஹசீனாவின் உயிரை காப்பாற்றியது: வன்முறை குறித்த புத்தகத்தில் தகவல்