கோவையில் தொடர் சம்பவங்கள்: பெண்களுக்குப் பாதுகாப்பு துளியளவும் இல்லை; நயினார் குற்றச்சாட்டு
கோவை: ''விமான நிலையம் அருகில் பாலியல் வன்கொடுமை, பரப்பரப்பான சாலையில் கடத்தல் எனக் கோவையில் தொடர்ந்து நடக்கும் சம்பவங்களைப் பார்க்கும்போது திமுக ஆட்சியில் பெண்களுக்குப் பாதுகாப்பு துளியளவும் இல்லை'' என தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றம் சாட்டியுள்ளார்.
அவரது அறிக்கை: தென்னகத்தின் Manchester-ஐ பெண்களை சூறையாடும் Monster-கள் உலவும் பகுதியாக மாற்றியது தான் திமுக-வின் சாதனை. தேசத்தையே உலுக்கச் செய்த கோவை மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை நடந்து மூன்று நாட்களுக்கு உள்ளாகவே கோவை இருகூரில் அலறல் சத்தத்துடன் ஒரு பெண் கடத்தப்படும் சிசிடிவி பதிவு வெளியாகியுள்ளது அதிர்ச்சியளிக்கிறது.
தமிழக போலீசார் திமுகவின் ஏவல்துறையாக செயல்படாமல், உடனடியாக இவ்விஷயத்தில் தலையிட்டு கடத்தப்பட்ட பெண்ணை மீட்க வேண்டும் என வலியுறுத்துகிறேன். விமான நிலையம் அருகில் பாலியல் வன்கொடுமை, பரப்பரப்பான சாலையில் கடத்தல் எனக் கோவையில் தொடர்ந்து நடக்கும் சம்பவங்களைப் பார்க்கும்போது திமுக ஆட்சியில் பெண்களுக்குப் பாதுகாப்பு என்பது துளியளவும் இல்லை என்பது தெளிவாகத் தெரிகிறது.
திறனற்ற நிர்வாகத்தையும், சீரழிந்த சட்டம் ஒழுங்கையும் வைத்துக் கொண்டு எத்தனைக் குற்றவாளிகளைச் சுட்டுப் பிடித்து பெண்களைக் காப்பாற்ற போகிறீர்கள் முதல்வர் ஸ்டாலின். வாயால் வடைசுட்டு பெண்களைக் கயமைக் கழுகுகளிடம் பலிகொடுக்கும் திமுக அரசை நாடு போற்றும் நல்லாட்சி என்று கூறும் அவலத்தை வேறு கேட்க நேருவது பெரும் சாபக்கேடு. இவ்வாறு நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.
மணிப்பூரில் தொடர் சம்பவங்கள்: பெண்களுக்குப் பாதுகாப்பு துளியளவும் இல்லை மக்கள் குற்றச்சாட்டு
பிஜேபி ஆட்சிக்கு வந்தவுடன் தமிழ்நாட்டில் தனி தனியாக பெண்களுக்கு காவல் ஏற்பாடு செய்யப்படலாம். அதன் பிறகு பெண்கள் பாதுகாப்பாக இருப்பார்கள்.
Generally tamil people behaviour is very good. But now past few years people behaviour is becoming ....
ஆட்சி செய்பவர்கள் இதுக்கெல்லாம் முக்கியத்துவம் குடுக்க மாட்டாங்க.. ஓட்டு குறையுமோ, SIR தேவையோ ன்னு கூடி கும்மி அடிக்க தான் லாயக்கு
மக்களுக்கு கோவையில் நடப்பதால் இது தேர்தலுக்கு பிஜேபி செய்யம் வேலை என்றோ சந்தேகம் வருது ஏன் எனில் டிசைன் அப்படி தான் இருக்கு
தலை சிறந்த திராவிட சொம்பு..
பக்க ஆட்சியில் பெண்களுக்கெதிரான அதிகரித்துவரும் குற்றங்கள் முதலிடம் உத்தரபிரதேசம் 66382 இரண்டாவது இடம் மகாராஷ்டிரம் 47101.
நம்பர் முரசொலி பேப்பர் விற்பனைல இருந்து எடுத்தது போல...உங்க வீட்டுக்கு உள்ள பாலியல் அக்கப்போர் வராத வரை இப்படி உருட்டமுடியும்
கோவை முன் தென்னிந்திய மான்செஸ்டர் தான். முதலில் காங்கிரஸ் அதிக பருத்தி கமிஷன் பெற்று வாங்கி, NTC மில்லை ஒழித்தது. பின் திமுக தினகரன் காருண்யா சிறுபான்மை கூட்டணி உருவாக்கி, மத மாற்றம் துவங்கியது. கேரளா வழியாக முஸ்லிம் மக்கள் திமுக ஆதரவு பெற்று அதிகம் குடியேறினர். மனித சக்தி இழந்து, மத சக்தி மேலோங்கியது. தொழில், கல்வி, சட்டம் ஒழுங்கு நலிவடைந்து விட்டது. தமிழகத்தில் சுய பாதுகாப்பு தான் இன்றைய பாதுகாப்பு.
ஆக சிறந்த உண்மை
பெண்களுக்கு சுய கட்டுப்பாடு வேண்டும் .அது இல்லாமல் அரசு பொறுப்பு காவல்துறை பொறுப்பு என்பதெல்லாம் கவைக்கு உதவாது .இவர்கள் கண்ட நேரத்தில் கண்ட நபர்களுடன் சுற்றி விட்டு அரசை மட்டுமே குறை சொல்லுவது சரியாக தெரியவில்லைமேலும்
-
பந்திப்பூர் புலிகள் காப்பகத்தில் சுற்றுலா பயணிகளுக்கு தடை
-
தொகுதி மேம்பாட்டு நிதிக்கான ஜிஎஸ்டியை உடனே விடுவியுங்கள்: முதல்வருக்கு இபிஎஸ் வலியுறுத்தல்
-
பீஹார் முதல்கட்ட சட்டசபை தேர்தல் ஓட்டு சதவீதம் சொல்லும் சேதி: ஓர் பார்வை
-
பாக்., அணுசக்தி நிலையம் மீது தாக்குதல் நடத்த இந்திரா அனுமதி தரவில்லை: சிஐஏ முன்னாள் அதிகாரி பேட்டி
-
ஃபோரக்ஸ் காத்து நிற்கும் ரிசர்வ் வங்கி
-
ஐ.பி.ஓ