நவம்பர் 12ல் 12 மாவட்டங்கள், நவ., 13ல் 8 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை
சென்னை: தமிழகத்தில் வரும் நவம்பர் 12ம் தேதி 12 மாவட்டங்களிலும், நவம்பர் 13ம் தேதி 8 மாவட்டங்களிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்ட அறிக்கை: மன்னார் வளைகுடா மற்றும் அதை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளின் மேல், ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.
அதேபோல், தமிழக பகுதிகளின் மேல், ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் இன்று (நவ., 09) கன்னியாகுமரி, தென்காசி, திருநெல்வேலி ஆகிய 3 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
நவம்பர் 12ம் தேதி கனமழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்:
* நீலகிரி
* கோவை
* திருப்பூர்
* தேனி
* தஞ்சாவூர்
* புதுக்கோட்டை
* விருதுநகர்
* ராமநாதபுரம்
* தென்காசி
* தூத்துக்குடி
* திருநெல்வேலி
* கன்னியாகுமரி
நவம்பர் 13ம் தேதி கனமழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்:
* நீலகிரி
* கோவை
* திண்டுக்கல்
* தேனி
* தென்காசி
* தூத்துக்குடி
* திருநெல்வேலி
* கன்னியாகுமரி
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
வாசகர் கருத்து (1)
babu - ,
09 நவ,2025 - 14:13 Report Abuse
நவம்பர் 12 மாவட்டங்களுக்கு 12 மழைக்கு வாய்ப்பு... தேதியைப் போல் எண்ணிக்கை இருக்குதே 0
0
Reply
மேலும்
-
நிதிஷ் குமார் ஆட்சி முடிவுக்கு வந்து விட்டது; பிரசாந்த் கிஷோர்
-
101வது பிறந்தநாளை கொண்டாடிய திருப்பூர் மூதாட்டி: 7 தலைமுறை உறவுகளுடன் உற்சாக சந்திப்பு
-
கடல்சார் சக்தியாக திகழும் இந்தியா; முப்படை தளபதி பெருமிதம்
-
டீக்கடைகள், தெருமுனைகளில் எஸ்.ஐ.ஆர். விண்ணப்பம் விநியோகம்; 8 அதிகாரிகளுக்கு தேர்தல் கமிஷன் நோட்டீஸ்
-
பாலியல் குற்றச்சாட்டில் சிக்கிய ஆம் ஆத்மி எம்எல்ஏ ஆஸி.,க்கு தப்பி ஒட்டம்
-
விஜய் மனிதாபிமானம் கொண்டவர்; நாங்கள் அது இல்லாதவர்களா: கேட்கிறார் துரைமுருகன்
Advertisement
Advertisement