விஜய் மனிதாபிமானம் கொண்டவர்; நாங்கள் அது இல்லாதவர்களா: கேட்கிறார் துரைமுருகன்
வேலூர்: கரூரில் 41 பேர் உயிரிழந்ததற்கு காரணமாக இருந்த அவர் (விஜய்) ரொம்ப மனிதாபிமானமிக்கவர்; நாங்கள் மனிதாபிமானம் இல்லாதவர்களா? என அமைச்சர் துரைமுருகன் கேள்வி எழுப்பி உள்ளார்.
வேலூரில் நிருபர்கள் சந்திப்பில், கேள்விகளுக்கு அமைச்சர் துரைமுருகன் பதில் அளித்தார். அதன் விவரம் பின்வருமாறு:
நிருபர்: கொடநாடு விவகாரத்தில் என்ன பூச்சாண்டி காட்டினாலும் நான் பயப்படமாட்டேன் என அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி கூறியுள்ளாரே?
துரைமுருகன் பதில்: அவருடைய நிலைமையை அவர் தெரிவிக்கிறார். ஆனால் சட்டம் என்ன சொல்கிறதோ அதை சர்க்கார் செய்யும்.
கேள்வி: உச்சபட்ச அதிகாரம் மயக்கத்தில் மனிதாபிமானம் மாண்பு இல்லாமல், சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் எதிராக பேசுகிறார் என தவெக தலைவர் விஜய் கூறியுள்ளாரே?
துரைமுருகன் பதில்: கரூரில் 41 பேர் சாவதற்கு காரணமாக இருந்துவிட்டு பாதிக்கப்பட்டவர்களின் ஒரு வீட்டிற்கும் ஆறுதல் சொல்லாமல், பார்க்காமல் இருக்கிற அவர் (விஜய்) ரொம்ப மனிதாபிமானம் உள்ளவர். நாங்கள் மனிதாபிமானம் இல்லாதவர்கள், போங்க சார் நீங்கள்?
கேள்வி: 2026ம் தேர்தலில் திமுகவின் நாள்கள் எண்ணப்பட்டுள்ளது என பாஜ மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளாரே?
துரைமுருகன் பதில்: அவர் பாவம், எதையோ சொல்வார். நல்ல மனிதர், அங்கு சொல்லிக் கொடுப்பதை சொல்லிவிடுவார் அவ்வளவுதான்.
நிருபர்: எம்ஜிஆர் காலத்தில் இருந்தே செங்கோட்டையன் அரசியலில் இருக்கிறார், தற்போது செங்கோட்டையனை கட்சியிலிருந்து இபிஎஸ் அதிரடியாக நீக்கி இருக்கிறார்?
துரைமுருகன் பதில்: அது அவர்கள் கட்சி விவகாரம். செங்கோட்டையன் எம்ஜிஆர் காலத்திலிருந்து இருப்பவர் தான். இல்லை என்று சொல்லவில்லை. ஏன் இப்படி ஒரு முடிவு எடுத்தார் என்பது அவருக்கு தான் தெரியும்.
நிருபர்: டில்லிக்குச் சென்ற செங்கோட்டையன் நான் யாரையும் சென்று சந்திக்கவில்லை என்று அன்று கூறினார். கட்சியை விட்டு நீக்கிய உடன் பாஜ தன்னை அழைத்து பேசினார்கள் என்று செங்கோட்டையன் தெரிவித்துள்ளாரே?
துரைமுருகன் பதில்: உண்மை வெளிவந்து விட்டது. இவ்வளவுதான்.
உண்மைதானே 100% இப்போதான் உண்மை பேசுறீங்க துரைமுருகன்
நிதி வம்சத்தினர் மீது உள்ள அளவு அபிமானம் - மற்றவர்கள் மீது கிடையாது என்ற அளவில் உண்மை தானே?
எங்களிடம் இருப்பது மணல்லாபிமானம் மட்டுமஃகான் என சொல்லவருக்கிறார் போலும்
மக்களுக்கு மனிதாபிமானம் இருப்பதால் தான் திரும்ப திரும்ப மன்னித்து, இந்த முறையாவது ஊழல் அற்ற, வகுப்புவாதத்தை தூக்கி பிடிக்காத, வேலையின்மையை போக்கும் அரசை அமைத்து விடுவீர்கள் என ஆட்சி அதிகாரத்தை தந்து தந்து ஏமாந்து விடுகிறார்கள்.
அப்பாடி இப்போவது தெரிஞ்சுதே
ஹிருட்டு திராவிடர்கள் பதவிக்காக மனிதர்களை கொலை செய்பவர்கள்.. கொலைகாரர்களிடம் எப்படி மனிதாபிமானம் இருக்கும்...
துரைமுருகன் ஒரு உளறு வாய் மன்னன் என்பது தமிழத்தில் அனைவரும் அறிவர். சட்டசபையில் விஜய் குறித்து துண்டு சீட்டு ஸ்டாலின் வேண்டாத முறையற்ற பேச்சுக்களை பேசியதை நியாயப்படுத்தகிறாரா இந்த 85 வயது கிழவர்? ஆளும் கட்சியிலேயோ, அல்லது எதிர்கட்சியிலேயோ இல்லாத ஒருவரைப் பற்றி சர்ச்சையாக சட்டசபையில் பேசுவது மாண்பா அல்லது முறையா? சட்டசபைக்கு வெளியில் துண்டு சீட்டு ஸ்டாலினோ, அல்லது அவரது அடிமை ஊழல் அமைச்சர்களோ என்ன வேண்டுமானாலும் பேசட்டும். ஆனால் சட்டசபைக்குள் பேசலாமா?
சீமான் வழியில் பெட்டி தான் பிரதானம் என்று கருதுகிறதா...
ADHU SARI KEVALAM KOLLAI ADIPPADHAI EPPO NIRUTHUM IDEA.PADHAVI EDHARKKU INDHA VAYADHIL.VEKKAME ILLAMAL SENGAL THIRUDAN KAALAI KAZHUVI POZHAPPU.ASINGAM.மேலும்
-
வரிசையில் நின்றபோது கடித்து குதறிய நாய்: திருச்செந்துாரில் பக்தருக்கு நேர்ந்த சோகம்
-
கேரள உள்ளாட்சி தேர்தல்: முதல் பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாஜ வாய்ப்பு
-
கிறிஸ்துவர்கள் அதிகமாக இருப்பதால் உன் ஒருத்தனுக்காக பஸ் ஊருக்குள் போகாது: பூஜாரியை அவதுாறாக பேசிய அரசு பஸ் கண்டக்டரால் சர்ச்சை
-
குருவாயூரில் முகேஷ் அம்பானி தரிசனம்: மருத்துமனை கட்டுமானத்திற்கு ரூ.15 கோடி நன்கொடை
-
பெல்ஜியத்தில் டிரோன்கள் ஊடுருவல்; படைகளை அனுப்ப பிரிட்டன் உத்தரவு
-
ஓட்டுத் திருட்டு விவகாரத்தை விடவில்லை: ராகுல்