பல கோடி மக்களின் ஓட்டுரிமை கேள்விக்குறி: முதல்வர் ஸ்டாலின்
சென்னை: வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி காரணமாக, பல கோடி மக்களின் ஓட்டுரிமை கேள்விக்குறியாகி உள்ளது என முதல்வர் ஸ்டாலின் குற்றம் சாட்டி உள்ளார்.
முதல்வர் ஸ்டாலின் தலைமையில் தி.மு.க., மாவட்டச் செயலர்கள் கூட்டம், இன்று 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக நடந்தது. இதில் மாவட்டச் செயலர்கள், எம்.பி.,க்கள், எம்.எல்.ஏ.,க்கள், தொகுதி பார்வையாளர்கள் பங்கேற்றனர். இந்த ஆலோசனை தொடர்பாக சமூக வலைதளத்தில் முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தமிழகத்தை எஸ்.ஐ.ஆர்., ஆபத்து சூழ்ந்துள்ளது. பல கோடி மக்களின் ஓட்டுரிமை கேள்விக்குறியாகி உள்ளது. நம் மக்களின் ஓட்டுரிமையைப் பாதுகாக்க, கட்சியினர் கண்ணும் கருத்துமாக இருந்து மேற்கொள்ள வேண்டிய அவசர நடவடிக்கைகள் குறித்தும், வரும் 11ம் நாள் அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் எஸ்.ஐ.ஆர்.,க்கு எதிரான கண்டன ஆர்ப்பாட்டங்களைக் கூட்டணிக் கட்சிகளுடன் இணைந்து வெற்றிகரமாக நடத்திடவும்,இன்றைய மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் அறிவுறுத்தல்களை வழங்கினேன்.
சிறப்புத் தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம் எனும் சதி வலையில் சிக்காமல் நம் மக்களைக் காக்க வேண்டிய பொறுப்பு கட்சி நிர்வாகிகள் ஒவ்வொருவருக்கும் உள்ளது. அனைத்து வாக்குச்சாவடிகளிலும் கண்காணிப்பை பலப்படுத்துவோம், கடமையாற்றுவோம். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
வீடியோ வெளியீடு
எஸ்.ஐ.ஆர்-ஐ ஏன் எதிர்க்கிறோம்? என முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியிருப்பதாவது: நமது தொடர் எதிர்ப்புகளை மீறி, எஸ்.ஐ.ஆர் பணிகள் தொடங்கி உள்ளது. வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் குறித்து மக்கள் நிறை பேருக்கு இன்னமும் முழுசாக தெரியலவில்லை.
@quote@இந்நிலையில எஸ்ஐஆர்.,ஐ திமுக ஏன் எதிர்க்கிறோம் என்பதை விளக்கவும் நமது ஓட்டுரிமையை எப்படி பாதுகாத்துக் கொள்வது என்று வழிகாட்டவும் தான் இந்த வீடியோ. quote
சரியான உண்மையான வாக்காளர் பட்டியல் தான் நியாயமான தேர்தலுக்கு அடிப்படை. எனவே வாக்காளர் பட்டியல் திருத்தம் செய்யப்படுவதை நாங்கள் எதிர்க்கவில்லை.
கால அவகாசம்
ஆனால் போதுமான கால அவகாசம் தராமல் தேர்தலுக்கு சில மாதங்களே உள்ள நிலையில் இதை அவசர, அவசரமாக செய்துவது சரியாக இருக்காது என்பது தான் எங்களது நிலைப்பாடு. தேர்தல் கமிஷனுடன் கூட்டு சேர்ந்து வாக்காளர் பட்டியலை பாஜ எப்படியெல்லாம் மோசடி பண்ணி இருக்குன்னு லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் பத்திரிகையாளர் சந்திப்பு நடத்தி ஏற்கனவே விளக்கி இருக்கிறார். எஸ்ஐஆர் நடைமுறைக்கு வழங்கும் கணக்கீட்டு படிவத்தில் பிரச்னைகள், குழப்பங்கள் உள்ளன. கணக்கீட்டுப் படிவத்தில் வாக்காளர் உறவினர்கள் பெயர் கேட்கப்பட்டு உள்ளது.
இடியாப்பச் சிக்கல்
உறவினர் என்றால் யார்? அனைவரும் தானே வாக்காளர் பட்டியலில் இருப்பார்கள். விண்ணப்பிக்கும் வாக்காளர் பெயரா? உறவினர் பெயரா? யார் பெயரை முதலில் எழுத வேண்டும்.
@quote@சிறிய தவறு இருந்தாலும் வாக்காளர் பட்டியலில் இருந்து பெயரை நீக்கும் ஆபத்து இருக்கிறது. quote
நன்றாக படித்தவர்களுக்கே இந்த கணக்கீட்டு படிவத்தை பார்த்தால் தலை சுற்றிவிடும். வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் என்பது இடியாப்பச் சிக்கல் போன்றது. வாக்காளர் கணக்கீட்டு படிவத்தில் புகைப்படத்தை ஒட்டுவதில் கூட குழப்பம் இருக்கிறது.
அதிமேதாவிகள்
எதிர்க்கட்சிகளின் சில அதிமேதாவிகள் புரிதலற்ற வகையில் உண்மைக்கு புறம்பாக பேசுகின்றனர். ஏழை மக்களின் ஓட்டுரிமையை நீக்கிவிடலாம் என எதிர்க்கட்சிகள் நினைக்கின்றன. கணினிமயமாக்கும் பணிகளை முடித்து டிசம்பர் 7ல் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட வேண்டும்.
சமர்ப்பித்ததற்கான ஒப்புகைச் சீட்டையும் வாக்காளர்கள் பெற்றுக்கொள்ள வேண்டும். தேர்தல் கமிஷனின் வாக்காளர் பட்டியல் திருத்தம் படிவத்தை பூர்த்தி செய்வதில் சந்தேகம் எழுந்தால் திமுக சார்பிலான உதவி எண் 8065420020 தொடர்பு கொண்டு வழிகாட்டுதல்களை பெறலாம். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
திருட்டு ஒட்டு பதிவு செய்ய வழி இல்லை தி மு க விற்கு
திராவிட மாடல் ஸ்டாலினாரே நீங்கள் திராவிடனாக தமிழன் இல்லை என்று எங்களுக்கு த் தெரியும் இருந்தால் உங்களுக்கு தைரியம் இருந்தால் S.I.R நடத்தவிட மாட்டோம் . அரசு அதிகாரிகள் பங்கெடுக்க அனுமதிக்க மாட்டோம் என்று சொல்லிப்பாருங்களேன். அன்றைய தினமே உங்கள் ஆட்சி காலி ஆகி விடும்.
ஒரு மாநில முதல்வரே பொறுப்பற்ற முறையில் பேசி வருவது வருத்தம் அளிக்கிறது.
புரளி கிளப்புறவன் ரத்தம் கக்கி சாவான்?
பல கேடி மக்களின் ஓட்டுரிமை கேள்விக்குறியாகி நிற்கிறது. அதற்கு முற்றுப்பள்ளி வைப்பதுதான் தேர்தல் ஆணையத்தின் கடமை.
ஏதாவது சாக்கு போக்கு சொல்லி கண் காது வைத்து பூதம் போல் சித்தரித்து SIR அமல்படுத்துவதை முற்றிலும் தடுக்க வேண்டும். ஏற்கனவே தயார் செய்யப்பட்ட ஏதுவான கள்ள ஓட்டால் நிரம்பி வழியும் வோட்டர் லிஸ்டை வைத்து தேர்தலில் வெற்றி பெற்று இன்னும் ஒரு ஐந்து ஆண்டுகளுக்கு ராஜா போக ஆட்சியை நடத்த திட்டம். உச்ச நீதிமன்றம் அவசியம் என்று சொல்கிறது. முரண்டு பிடிக்கும் மேற்கு வங்கமே ஒப்புக்கொண்டுள்ளது.
தேர்தல் கமிஷனுக்கு அரசியமைப்பு அமைத்த உரிமை ...... ன்னு சொல்லுங்கப்பு .....
திருவண்ணாமலை மாவட்டத்தில் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த பெண்களை கடத்திச் சென்று, காவலர்கள் பாலியல் வன்கொடுமை ......விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே, பத்தாம் வகுப்பு மாணவியை அச்சுறுத்தி, ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த காவலர் பாலியல் வன்கொடுமை.....காவல் துறை இங்கு யார் கட்டுப்பாட்டில் உள்ளது ??....இதற்கெல்லாம் பதில் சொல்லும் காலம் வரும் ...
பல கோடி மக்களின் ஓட்டுரிமை கேள்விக்குறியாம் ...யோக்கியன் வந்துட்டான் , சொம்பை எடுத்து உள்ளே வை ....
....கள்ள வோட்டு போடுவது ....வோட்டு சாவடியை கை பற்றுவது .....வோட்டு போட காசு என்று இதில் எல்லாம் கை தேர்ந்தது எந்த கட்சி ??....
திருட்டு திராவிட கட்சிகள் இவர்களுக்கு பேசுவதற்கு வாய் இல்லை
தேர்தல் ஊழல் தகிடு தத்தம் இதில் கை தேர்ந்த கட்சி மக்கள் உரிமை பற்றி பேசுவதா? இவர்கள் செய்ததை சொல்ல நாலு ராகுல் போததாதேமேலும்
-
நிதிஷ் குமார் ஆட்சி முடிவுக்கு வந்து விட்டது; பிரசாந்த் கிஷோர்
-
101வது பிறந்தநாளை கொண்டாடிய திருப்பூர் மூதாட்டி: 7 தலைமுறை உறவுகளுடன் உற்சாக சந்திப்பு
-
கடல்சார் சக்தியாக திகழும் இந்தியா; முப்படை தளபதி பெருமிதம்
-
டீக்கடைகள், தெருமுனைகளில் எஸ்.ஐ.ஆர். விண்ணப்பம் விநியோகம்; 8 அதிகாரிகளுக்கு தேர்தல் கமிஷன் நோட்டீஸ்
-
பாலியல் குற்றச்சாட்டில் சிக்கிய ஆம் ஆத்மி எம்எல்ஏ ஆஸி.,க்கு தப்பி ஒட்டம்
-
விஜய் மனிதாபிமானம் கொண்டவர்; நாங்கள் அது இல்லாதவர்களா: கேட்கிறார் துரைமுருகன்