வீரணாமூரில் விவசாயிகளுக்கு நீர் மேலாண்மை பயிற்சி முகாம்
செஞ்சி: வீரணாமூர் கிராமத்தில் விவசாயிகளுக்கு நீர் மேலாண்மை குறித்த பயிற்சி முகாம் நடந்தது.
திண்டிவனம் வேளாண் அறிவியல் நிலையத்தின் சார்பில் வல்லம் ஒன்றியம் வீரணாமூர் கிராமத்தில் விவசாயிகளுக்கு நீர் மேலாண்மை தொழில்நுட்ப பயிற்சி மற்றும் இடுபொருள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
இதில் தோட்டக்கலை பயிர் சாகுபடியில் நீர் மேலாண்மை தொழில்நுட்பம் பற்றி பேராசிரியர்கள் ஆனந்தி, விஜய கீதா ஆகியோரும், வேளாண்மை உதவி இயக்குனர் சரவணன் வேளாண்மை துறை சார்பில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்தும், முனைவர் சிபி செபாஸ்டின், செந்தமிழ் ஆகியோர் கோழி வளர்ப்பு முறை மற்றும் வேளாண் அறிவியல் நிலையத்தின் செயல்பாடுகள் குறித்து விளக்கி பேசினார்.
விவசாயிகளுக்கு தென்னை, மாங்கன்றுகள், உயிர் உரங்கள், மற்றும் கோழி குஞ்சுகள் இலவசமாக வழங்கப்பட்டன. 70 க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.
மேலும்
-
தொடரட்டும் வெற்றிப்பயணம்
-
'மிகப்பெரிய உள்நாட்டு சந்தையே இந்தியாவுக்கு பாதுகாப்பு அரண்'; உலக வங்கி நிபுணர் கருத்து
-
மீனாட்சி கோவில் நிலத்தில் கிறிஸ்துவ கட்டுமானம்: உயர் நீதிமன்றம் நோட்டீஸ்
-
வக்கீல்கள் புடைசூழ வந்த எம்.பி.,க்கு நீதிபதி கண்டிப்பு
-
சூரிய ஒளியில் இயங்கும் வேதியியல் ஆலை
-
கோவையில் இயற்கை வேளாண் மாநாடு வரும் 19ல் பிரதமர் துவக்கி வைக்கிறார்