காஷ்மீர் போலீஸ் ஸ்டேஷனில் நிகழ்ந்த சம்பவம் தற்செயலானது: உறுதி செய்தது மத்திய அரசு
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் போலீஸ் ஸ்டேஷனில் வெடிப்பொருட்கள் வெடித்து நிகழ்ந்த சம்பவம் தற்செயலானது. பயங்கரவாத தாக்குதல் இல்லை என மத்திய உள்துறை அமைச்சகம் உறுதி செய்துள்ளது.
இது தொடர்பாக, உள்துறை அமைச்சகத்தின் இணைச் செயலாளர் பிரசாந்த் லோகண்டே நிருபர்களிடம் கூறியதாவது: பயங்கரவாதிகளுக்கு பதுக்கி வைத்து இருந்த வெடிபொருட்கள் மற்றும் ரசாயனங்களின் ஒரு பெரிய குவியல் மீட்கப்பட்டு, ஸ்ரீநகரின் புறநகரில் அமைந்துள்ள நவ்காம் போலீஸ் ஸ்டேஷனில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு இருந்தது. நவ்காம் போலீஸ் ஸ்டேஷனில் நடந்த மிகப்பெரிய துரதிர்ஷ்டவசமான தற்செயலாக வெடிப்பொருட்கள் வெடித்த சிதறியதில் 9 பேர் கொல்லப்பட்டனர்.
சம்பவத்திற்கான காரணம் விசாரிக்கப்பட்டு வருகிறது. குண்டுவெடிப்புக்கான காரணம் குறித்து வேறு எந்த ஊகங்களும் தேவையற்றவை. மீட்கப்பட்ட வெடிபொருட்கள் தடயவியல் சோதனைக்கு அனுப்பப்பட்துள்ளது. போலீஸ் ஸ்டேஷன் கட்டடம் பலத்த சேதத்தை சந்தித்துள்ளது. அதே நேரத்தில், அருகில் உள்ள சில கட்டடங்களும் சேதம் அடைந்து இருக்கின்றன. இவ்வாறு அவர் கூறினார்.
பெரும் சேதம்
ஜம்மு காஷ்மீர் டிஜிபி நளின் பிரபாத் கூறியதாவது: ஜம்முகாஷ்மீர் போலீஸ் ஸ்டேஷனில் நடந்தது வெடிவிபத்து தற்செயலானது. இந்த சம்பவத்திற்கான காரணம் குறித்து எந்த ஊகங்களும் தேவையற்றது. இந்த சம்பவம் குறித்து விசாரணை நடந்து வருகிறது. போலீஸ் ஸ்டேஷன் பெரும் சேதம் அடைந்துள்ளது. அருகில் உள்ள கட்டடங்களும் சேதம் அடைந்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
காவல் நிலையத்தில் நடந்த நிகழ்வு தற்செயல் என்று அரசு கூறுவது கேவலமானது. காவல் நிலையத்திலிருந்து ஒரு கைதி தப்பித்துச்சென்றால் இதனை தற்செயல் என்று காவல்துறை கூறினால் ஏன் நாம் ஏற்றுக்கொள்வதில்லை? பாகிஸ்தான் அக்ரிமித்த பகுதி காஸ்மீரில் உள்ளது வெட்கக்கேடு. POK பகுதியை தடுக்காத பிரதமர் யார் என்று தெரியும்.
மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள காஷ்மீரில் எது நடந்தாலும் அரசை குறை சொல்ல கூடாது. எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்களில் எது நடந்தாலும் மாநில அரசை குறை சொல்ல வேண்டும்
அங்க உமர் அப்துல்லா தானே முதல் அமைச்சர் உபிக்கு மஞ்சள் காமாலை கண்ணுக்கு பார்ப்பது எல்லாம் மஞ்சளாக தான் தெரியும்.மேலும்
-
யாத்திரையின் போது மாயமான சீக்கிய பெண்.. பாகிஸ்தானில் மதமாற்றம் செய்து திருமணம்
-
20 ஆயிரம் பேருக்கான வேலைவாய்ப்பு நழுவிவிட்டது: அண்ணாமலை கொந்தளிப்பு
-
பீஹார் தேர்தல் முடிவுக்கு எஸ்ஐஆர்-ஐ காரணம் சொல்வது துரதிர்ஷ்டவசமானது: ஒவைசி காட்டம்
-
அண்ணா பல்கலை 'சார்'ஐ விட இது பயங்கரமான 'சார்' இல்லை: நயினார் நாகேந்திரன்
-
வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு; நவம்பர் 17ல் 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலெர்ட்
-
தமிழகம் வேண்டாம்; தொழில் தொடங்க ஆந்திரா தான் சரியான இடம்; ஜகா வாங்கியது தென்கொரிய நிறுவனம்