கோயில் தெப்பக்குளத்தில் இறந்து மிதந்த மீன்கள்
திருவாடானை: திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர் கோயில் முன்புள்ள எழில் மிகு தெப்பக்குளத்தில் மீன்கள் இறந்து மிதப்பதால் துர் நாற்றம் வீசுகிறது.
திருவாடானையில் ராமநாதபுரம் தேவஸ்தானத்திற்கு சொந்தமான ஆதிரெத்தினேஸ்வரர் கோயில் உள்ளது.
இக்கோயில் முன்பு அழகிய தெப்பக்குளம் உள்ளது. மக்கள் குளிக்க பயன்படுத்தி வருகின்றனர். கடந்த சில நாட்களாக இங்கு மீன்கள் இறந்து மிதக்கின்றன.
இதனால் அந்தப் பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. அதிக வெப்பத்தால் ஆக்ஸிஜன் அளவு குறைந்து மீன்கள் இறந்திருக்கலாம்.
அப்பகுதி மக்கள் கூறுகையில் குளிக்க முடியாத அளவிற்கு துர்நாற்றம் வீசுகிறது. மீன்களை அகற்றி நீரை சுத்தப் படுத்த சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் நட வடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
இந்தியாவுக்குள் ஊடுருவல்; வங்கதேசத்தைச் சேர்ந்த 10 பேர் கைது
-
பஞ்சாபில் ஆர்எஸ்எஸ் பிரமுகர் மகன் சுட்டுக்கொலை: பைக்கில் வந்த மர்ம நபர்கள் தப்பியோட்டம்
-
இருதரப்பு உறவுகளை வலுப்படுத்த ஆலோசனை; கத்தார் பிரதமர் அல் தானியை சந்தித்தார் ஜெய்சங்கர்
-
விக்சித் பாரத் இலக்கை அடைவதில் முக்கிய பங்காற்றும் சிஏஜி; துணை ஜனாதிபதி பெருமிதம்
-
தெலுங்கானா ஐகோர்ட் இணையதளத்தை முடக்கிய ஹேக்கர்கள்
-
போலி செய்தி பரப்பினால் நடவடிக்கை; காங்., பெண் நிர்வாகியின் புகாருக்கு தேர்தல் ஆணையம் எச்சரிக்கை
Advertisement
Advertisement