எமனேஸ்வரம் பெருமாள் கோயிலில் ஊஞ்சல் சேவை

பரமக்குடி: பரமக்குடி எமனேஸ்வரம் வரதராஜ பெருமாள் கோயிலில் ஐப்பசி கடைசி வெள்ளியில் ஊஞ்சல் சேவை நடந்தது.

எமனேஸ்வரம் சவுராஷ்டிரா சபைக்கு பாத்தியமான இக்கோயிலில் மூலவர் ஸ்ரீதேவி, பூதேவி, வரதராஜ பெருமாள் அருள் பாலிக்கிறார். இங்கு ஒவ்வொரு தமிழ் மாத கடைசி வெள்ளிக்கிழமை மாலை ஊஞ்சல் சேவை நடக்கிறது. நேற்று முன்தினம் இரவு பெருந்தேவி தாயார் வரதராஜ பெருமாள் ஊஞ்சலில் எழுந்தருளினர். பின்னர் சகஸ்ர நாம பாராயணங்கள் நிறைவடைந்து மகா தீபாராதனை நடந்தது. பிரசாதங்கள் வழங்கப்பட்டன. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

Advertisement