இதே நாளில் அன்று

டிசம்பர் 14:

துாத்துக்குடி மாவட்டம், எட்டயபுரத்தில், எட்டப்ப பிள்ளை - முத்தம்மாள் தம்பதியின் மகனாக, 1879, ஜூலை 27ல் பிறந்தவர், சத்தி யானந்த சோமசுந்தரம்.
எட்டயபுரம் அரண்மனை பராமரிப்பில் வளர்ந்த இவரும், அங்கு பணியாற்றிய சின்னசாமி அய்யரின் மகன் சுப்பிரமணியனும் நண்பர்கள். அரண்மனைக்கு வந்த இலங்கை புலவர் ஒருவர், கல்வியிலும், கவி புனைவதிலும் வல்லவர்களான இவர்களுக்கு, கடைசி வரியையும், தலைப்பையும் தந்து பாடல் எழுத சொன்னார்.

அதில் இருவரும் வென்றதால், 'பாரதி' எனும் பட்டத்தை வழங்கினார். இவர் சோமசுந்தர பாரதி, அவர் சுப்பிரமணிய பாரதியானார்.

இவர், நெல்லை சி.எம்.எஸ்., பள்ளி, சென்னை கிறிஸ்துவ மற்றும் சட்ட கல்லுாரிகளில் படித்து வழக்கறிஞரானார். வ.உ.சி.,யின் நண்பரான இவர், சுதேசி கப்பல் கம்பெனியின் நிர்வாக பொறுப்பாளராக இருந்தார். முன்னாள் முதல்வர் அண்ணாதுரை, கம்பராமாயணத்தை எரிக்க முயன்ற போது, அதற்கு எதிராக முழங்கினார்.

இவர், தன், 80வது வயதில், 1959ல், இதே நாளில் மறைந்தார்.

'நாவலர்' சோமசுந்தர பாரதி மறைந்த தினம் இன்று!

Advertisement