பாக்., தூண்டிவிடும் பயங்கரவாதத்தை முழு பலத்துடன் எதிர்கொள்வோம்: ஐநாவில் இந்தியா திட்டவட்டம்
நியூயார்க்: ''பாகிஸ்தானால் தூண்டிவிடப்படும் பயங்கரவாதத்தை இந்தியா தனது முழு பலத்துடன் எதிர்கொள்ளும்'' என ஐநாவில் இந்தியாவின் நிரந்தர பிரதிநிதி பர்வதனேனி ஹரிஷ் திட்டவட்டமாக தெரிவித்தார்.
பாகிஸ்தான் மூன்று போர்களையும் ஆயிரக்கணக்கான பயங்கரவாதத் தாக்குதல்களையும் இந்தியா மீது தொடுத்து, ஒப்பந்தத்தின் உணர்வை மீறியுள்ளது. இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாத தாக்குதலில் ஒரு வெளிநாட்டவர் உட்பட 26 பேர் கொல்லப்பட்டனர். பாகிஸ்தானின் எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை முடிவுக்குக் கொண்டு வரும் வரை, இந்த ஒப்பந்தம் நிறுத்தி வைக்கப்படும் என்று இந்தியா இறுதியாக அறிவித்துள்ளது.
பாகிஸ்தானால் தூண்டிவிடப்படும் பயங்கரவாதத்தை இந்தியா தனது முழு பலத்துடன் எதிர்கொள்ளும். பாகிஸ்தான் பாகிஸ்தான் ஒரு முன்னாள் பிரதமரை சிறையில் அடைப்பது, அரசியல் கட்சியைத் தடை செய்வது மற்றும் அதன் ஆயுதப் படைகள் 27வது திருத்தத்தின் மூலம் ஒரு அரசியலமைப்பு சதியை அரங்கேற்றி, அதன் பாதுகாப்புப் படைத் தளபதிக்கு வாழ்நாள் முழுவதும் பாதுகாப்பு வழங்குகிறது. பாகிஸ்தான் இந்தியாவுக்கும், மக்களுக்கும் தீங்கு விளைவிப்பதில் தீவிர கவனம் செலுத்துகிறது. இவ்வாறு இந்தியாவின் நிரந்தர பிரதிநிதி பர்வதனேனி ஹரிஷ் கூறினார்.
வாசகர் கருத்து (4)
bharathi - ,
16 டிச,2025 - 13:30 Report Abuse
It is a duty of the government to protect our citizen hence there is no more retaliate post the incident. Time to eradicate the cause of terrorism from all the side...India...Afghan...Israel...Ausi...baluch jointly and firmly 0
0
Reply
Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா
16 டிச,2025 - 12:32 Report Abuse
ஆஸ்திரேலியாவில் பாகிஸ்தானை சேர்ந்த அப்பா, மகன் பயங்கரவாதிகள் போண்டி கடற்கரையில் கண்மூடித்தனமாக சுட்டு பொதுமக்களை கொன்றனர். அது மிகவும் வருத்தமளிக்கும் செய்தி. இங்கே நான் என்ன சொல்லவருகிறேன் என்றால், பாகிஸ்தான் பயங்கரவாதிகளால் பாதிக்கப்பட்ட அனைத்து நாடுகளும், இந்தியாவுடன் ஒன்றிணைந்து பாகிஸ்தானுக்கு ஒரு சரியான படம் கற்பிக்க வேண்டும். அதுவே கடைசி பாடமாக அவர்களுக்கு இருக்கவேண்டும். அதற்குமேலும் பாகிஸ்தான் தன்னுடைய பயங்கரவாத போக்கை நிறுத்தாவிட்டால், பாக்கிஸ்தான் அழிவது திண்ணம். 0
0
Reply
raju - Madurai,இந்தியா
16 டிச,2025 - 12:28 Report Abuse
எப்படி .. ? தேர்தல்ல வாக்கு வாங்க பயன்படுத்தோவோமே அப்படியா? இல்லை Trumph சொன்ன மாதிரி யா ? 0
0
Reply
ASIATIC RAMESH - RAJAPALAYAM,இந்தியா
16 டிச,2025 - 11:13 Report Abuse
"ஜம்மு காஷ்மீர் எப்போதும் இந்தியாவின் ஒருங்கிணைந்த மற்றும் பிரிக்க முடியாத பகுதி" என்பதை விரைவில் செயல்படுத்தவேண்டிய நல்ல நேரம் இது. POK என்பதே இருக்கக்கூடாது. ஒருங்கிணைந்த கிரீடம் போன்ற இந்தியா தான் அனைத்திற்கும் தீர்வு. தயவுசெய்து காலம் தாழ்த்தவேண்டாம்... இதை செய்தாலே பகைநாடுகள் அடங்கிவிடுவார்கள். 0
0
Reply
மேலும்
-
பிரான்ஸ் அஞ்சல் சேவையின் மீது சைபர் தாக்குதல்; ரஷ்ய ஹேக்கர்கள் நாச வேலை
-
குறளை சுட்டிக்காட்டி முதல்வர் ஸ்டாலின் கிறிஸ்துமஸ் வாழ்த்து!
-
ஒன்றிணைவு அன்பால் அல்ல பயத்தினால் பிறந்தது: தாக்கரே சகோதரர்களை தாக்கிய பட்னவிஸ்
-
எரிபொருள் இறக்குமதிக்கு இந்தியா ரூ.20 லட்சம் கோடி செலவு: மத்திய அமைச்சர்
-
எப்படியாவது முதல்வர் நாற்காலியை பிடிக்கும் எண்ணம்; இபிஎஸ் மீது கம்யூ. பாய்ச்சல்
-
ரஷ்யாவில் குண்டுவெடிப்பு: போலீஸ் அதிகாரி உள்ளிட்ட 3 பேர் பலி
Advertisement
Advertisement