நைஜீரியா பயங்கரவாதிகள் கடத்திய 130 மாணவர்கள் மீட்பு
அபுஜா: நைஜீரியாவில் ஆயுதம் ஏந்திய பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட பள்ளி மாணவர்கள் மற்றும் ஊழியர்கள் என, 130 பேரை ராணுவத்தினர் அதிரடியாக மீட்டனர்.
மேற்கு ஆப்ரிக்க நாடான நைஜீரியாவில் ஐ.எஸ்., அல் - குவைதா, போகோ ஹராம் போன்ற பயங்கரவாத அமைப்புகள் செயல்பட்டு வருகின்றன. இந்த பயங்கரவாதிகள் பணத்திற்காக பொது மக்களை, குறிப்பாக பள்ளி மாணவர்களை கடத் துவதை வாடிக்கையாக வைத்துள்ளனர்.
அந்நாட்டின் நைஜர் மாநிலத்தில் உள்ள பள்ளியில் கடந்த மாதம் 21ம் தேதி ஆயுதங்களுடன் நுழைந்த பயங்கரவாதிகள், 300க்கும் மேற் பட்ட மாணவர்களையும், 12 ஆசிரியர்களையும் கடத்திச் சென்றனர்.
பயங்கரவாதிகளிடமிருந்து, 50 மாணவர்கள் தப்பி வந்தனர். ராணுவ நடவடிக்கைகளால், இம்மாத துவக்கத்தில், 100 மாணவர்களை, பயங்கரவாதிகள் விடுவித்தனர். இந்த நிலையில் மாணவர்கள் மற்றும் ஊழியர்கள் என, 130 பேரை ராணுவம் நேற்று அதிரடியாக மீட்டுள்ளது.
மேலும்
-
சமூக நல்லிணக்கத்தின் அடையாளம்; கிறிஸ்துமஸ் விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு
-
உன்னாவ் பாலியல் வழக்கு: பாஜ முன்னாள் எம்எல்ஏ.,வுக்கு தண்டனை நிறுத்தி வைப்பு
-
என் கணவர் பெயர் குமார், மகன் பெயர் கார்த்திகேயன்; திருமாவுக்கு நடிகை கஸ்தூரி பதில்
-
ஹிந்து இளைஞர் படுகொலைக்கு வங்கதேச இடைக்கால அரசு கண்டனம்
-
50 விமான சேவைகளை ரத்து செய்த இண்டிகோ; டில்லி, புனே உள்ளிட்ட விமான நிலையங்களில் பயணிகள் தவிப்பு
-
மின்சாரத்துறையை சீரழித்து மக்கள் வரிப்பணத்தை திமுக வீணாக்குகிறது; நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு