பாக்., முப்படை தளபதிக்கு சவுதியின் உயரிய விருது
ரியாத்: நம் அண்டை நாடான பாகிஸ்தானின் முப்படை தலைமைத் தளபதி, பீல்ட் மார்ஷல் அசிம் முனீருக்கு சவுதி அரேபியாவின் மிக உயரிய 'ஆர்டர் ஆப் அப்துல் அஜீஸ் அல் சவுத்' விருது வழங்கப்பட்டது.
மேற்காசிய நாடான சவுதி அரேபியாவுக்கு, அசிம் முனீர் அரசுமுறைப் பயணமாக சென்றுள்ளார். அப்போது அவருக்கு சவுதி இளவரசர் காலித் பின் சல்மான் இந்த விருதை வழங்கினார். இது தேசிய சேவை, சிறந்த பங்களிப்பு போன்ற காரணங்களுக்காக வழங்கப்படுகிறது. அசிம் முனீர், இரு நாடுகளுக்கு இடையிலான உறவுகளை வலுப்படுத்துவதிலும், பாதுகாப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவதிலும் ஆற்றிய பங்களிப்பை பாராட்டியே இந்த விருது வழங்கப்பட்டுள்ளதாக சவுதி அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்த விருது, பாகிஸ்தான் -மற்றும் சவுதி அரேபியா இடையிலான நீண்டகால சகோதரத்துவ உறவின் அடையாளம் என்று அசிம் முனீர் நன்றி தெரிவித்தார்.
கடந்த 2016ல் 'ஆர்டர் ஆப் அப்துல் அஜீஸ் அல் சவுத்' விருது, நம் பிரதமர் நரேந்திர மோடிக்கு வழங்கப்பட்டது.
Bunker லே பதுங்கிய பாக்கிஸ்தான் புலிகேசிக்கு பரிசு. ஆக சிறந்த காமெடி.
இந்த விருது முனீர்க்கு வழங்கிய காரணத்தால் இனி யாரும் இந்த விருதை ஏற்க மாட்டார்கள்
இவனுக்கு இந்த விருது பயங்கரவாத தூண்தலுக்காக கொடுக்கப்பட்டதா?மேலும்
-
மக்களை பலி வாங்கும் திமுக அராஜக அரசியலை தமிழகம் ஒருபோதும் மன்னிக்காது; அண்ணாமலை காட்டம்
-
இந்தியாவில் 3 புதிய விமான நிறுவனங்கள் உதயம்; மத்திய அரசு ஒப்புதல்
-
விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க ரூ.289 கோடிபேரிடர் நிவாரணத் தொகை ஒதுக்கீடு; தமிழக அரசு ஒப்புதல்
-
சச்சின் போல வைபவ் சூர்யவன்ஷி சாதனை: சசிதரூர் பாராட்டு
-
மும்பை வளர்ச்சிக்கு உதவாத தாக்கரேக்கள் கூட்டணி:ஏக்நாத் ஷிண்டே விமர்சனம்
-
விவசாயியிடம் ரூ.2,000 லஞ்சம் : பெண் வேளாண் அதிகாரி கைது