கண்மாயில் சிக்கிய வாலிபர் மீட்பு
ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் எட்டிவயல் அருகே பறவையை பிடிக்கச்சென்று கண்மாய்க்குள் சிக்கியவரை தீயணைப்பு வீரர்கள் மீட்டனர்.
எட்டிவயல் அருகே ஆனைகுடி பகுதியைச் சேர்ந்த குமரன் மகன் சந்துரு 20. இவர் நேற்று காலை அப்பகுதியில் உள்ள கண்மாயில் திரியும் முக்குளிப்பான் பறவைகளை பிடிக்க சென்றுள்ளார். கண்மாயின் நடுப்பகுதி வரை சென்றவரால் மீண்டும் கரைக்கு திரும்பி நீந்தி வர முடியாமல் அங்குள்ள மரத்தின் மீது அமர்ந்துள்ளார். அந்த வழியாக சென்றவர்வர்கள் வாலிபர் கண்மாய் நடுவில் இருப்பதை கண்டு தீயணைப்பு துறையினரிடம் தெரிவித்தனர். அவர்கள் பாதுகாப்பு உபகரணங்களுடன் நீந்திச் சென்று வாலிபரை மீட்டு கரைக்கு அழைத்து வந்தனர். இதுபோன்று பறவையை பிடிக்க கண்மாய்க்குள் இனி செல்லக் கூடாது எனவும் அவரை எச்சரித்து அனுப்பினர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
மக்களை பலி வாங்கும் திமுக அராஜக அரசியலை தமிழகம் ஒருபோதும் மன்னிக்காது; அண்ணாமலை காட்டம்
-
இந்தியாவில் 3 புதிய விமான நிறுவனங்கள் உதயம்; மத்திய அரசு ஒப்புதல்
-
விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க ரூ.289 கோடிபேரிடர் நிவாரணத் தொகை ஒதுக்கீடு; தமிழக அரசு ஒப்புதல்
-
சச்சின் போல வைபவ் சூர்யவன்ஷி சாதனை: சசிதரூர் பாராட்டு
-
மும்பை வளர்ச்சிக்கு உதவாத தாக்கரேக்கள் கூட்டணி:ஏக்நாத் ஷிண்டே விமர்சனம்
-
விவசாயியிடம் ரூ.2,000 லஞ்சம் : பெண் வேளாண் அதிகாரி கைது
Advertisement
Advertisement