அரசு பஸ்சில் பெயர்ந்த கதவுகள் பயணிகளுக்கு பாதுகாப்பற்ற பயணம்

குன்னுார்: ஊட்டி-கோபி வழித்தடத்தில் இயக்கப்படும் அரசு பஸ் கதவுகள் பெயர்ந்த நிலையில் பயணிகளுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் உருவாகி வருகிறது.

நீலகிரி மாவட்டத்தில், பழமை வாய்ந்த, அரசு பஸ்கள் மாற்றப்படாமல் இயக்கப்பட்டு வருகின்றன. அதில், ஊட்டி -கோபி வழித்தடத்தில் இயங்கும் அரசு பஸ் கதவுகள் பெயர்ந்த நிலையில் உள்ளது. இதனால் பயணிகளுக்கு காயம் ஏற்படுவதுடன் பாதுகாப்பு இல்லாத சூழல் உள்ளது. அதிகாரிகள் இது போன்ற பாதிப்புகளை ஆய்வு செய்து உடனடியாக சீரமைக்க வேண்டும்.

Advertisement