நரிக்கட்டியூரில் தரைப்பாலம் சேதத்தால் ஓட்டுனர்கள் அவதி

கரூர்: நரிக்கட்டியூரில் தரைப்பாலம் மற்றும் சாலை குண்டும், குழியுமாக உள்ளதால் வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர்.

கரூர் அருகே நரிக்கட்டியூர் பிரதான சாலையில், ஏராளமான வீடுகள் உள்ளன. ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள், பல்வேறு நிறு-வனங்களில் வேலை செய்கின்றனர். தொழிற்-பேட்டை, சணப்-பிரட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து, வாகனங்கள் நரிக்கட்டியூர் பிரதான சாலை வழி-யாக செல்கின்றன. ஆனால் இந்த சாலை பல மாதங்களாக குண்டும், குழியு-மாக உள்ளது. சில இடங்களில், ஜல்லிக்கற்கள் பெயர்ந்து, போக்கு-வ-ரத்துக்கு பயனற்ற நிலையில் உள்ளது.
அதில், நரிக்கட்டியூர் அரசு ஊராட்சி ஒன்றிய பள்ளி அருகில், தரைப்பாலம் உள்ளது.


அது முற்-றிலும் சேதமான நிலையில், மழை பெய்யும் போது தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதனால், பள்ளி, கல்லுாரி, டூவிலர் உள்பட அனைத்து வாகனங்களிலும் செல்ல சிரமப்படுகின்றனர்.

போதிய தெருவிளக்கு வசதி இல்லாததால், இரவு நேரங்களில் வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்--றனர். எனவே, புதிய தார்ச்சாலை அமைக்க நட-வ-டிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.

Advertisement