நுாலக உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை
குளித்தலை: குளித்தலை அடுத்த நெய்தலுார் காலனியில் உள்ள, ஊர்ப்புற நுாலக உறுப்பினர்களுக்கு அட்டை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் ஜெரால்டு பெஞ்சமின் தலைமை வகித்தார். நெய்தலூர் காலனி நுாலகர் கண்ணதாசன் முன்னிலை வகித்தார். தலைமை ஆசிரியர் ஜெரால்டு பெஞ்-சமின் அனைத்து மாணவ, மாணவியருக்கும் உறுப்பினர்களுக்கான அடையாள அட்டைகளை வழங்கி பேசினார்.
அப்போது, நுாலகங்களின் வளர்ச்சிக்காக பல்-வேறு பணிகளை முதல்வர் ஸ்டாலின் முன்னெ-டுத்து வருகிறார். ஏழை, எளிய மாணவர்களுக்கு நுாலக உறுப்பினர் கட்டணங்களை செலுத்தி அவர்களையும், உறுப்பினர்களாக இணைப்பதற்கு அனைவரும் முன்வர வேண்டும்.
வாசிப்பு பழக்கத்தினை ஊக்கப்படுத்துவதற்கும், அவர்களை நல்வழி படுத்துதலுக்கும் நுாலகங்-களின் பங்கு மிக முக்கியமானதாக உள்ளது என விளக்கம் அளிக்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் ஆசிரியர்கள் சரவணன், மேகலா, சிவானந்தம், தனபால் உள்பட மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர்.
மேலும்
-
10 வேட்பாளர்களின் பெயர் சொல்ல முடியுமா? விஜய்க்கு நயினார் நாகேந்திரன் கேள்வி
-
சிறுபான்மையினர் மீதான தாக்குதலை ஏற்க முடியாது: முதல்வர் ஸ்டாலின்
-
சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் கஞ்சா செடி வளர்ப்பு; போலீஸ் அதிர்ச்சி
-
வெளிநாடுகளில் இருந்து கடத்தல்: ரூ.1.15 கோடி மதிப்பிலான 272 டிரோன் கோவையில் பறிமுதல்
-
சன்சாத் கேல் மஹோத்சவ் விழா நிறைவு: கோவை மாணவி நேசிகாவுடன் உரையாடிய பிரதமர் மோடி
-
தி லயன் கிங் படத்தால் பிரபலமான நடிகை இமானி ஸ்மித் படுகொலை