'ஆப்பரேஷன் சிந்துார்' நடவடிக்கையை நிறுத்தியதாக சீனா டுபாக்கூர்! அப்பட்டமான பொய் என இந்தியா திட்டவட்ட மறுப்பு
புதுடில்லி: இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போரை நிறுத்தியதாக, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தொடர்ந்து கூறி வருகிறார். இந்நிலையில், 'இல்லை, நாங்கள் தான் நிறுத்தினோம்' என, சீனா கூறியுள்ளது. இது அப்பட்டமான பொய் என இந்தியா திட்டவட்டமாக மறுத்துள்ளது.
ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில், கடந்த ஆண்டு ஏப்ரலில், பாகிஸ்தான் பயங்கரவாதிகள் பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தினர்; இதில் 26 பேர் உயிரிழந்தனர். விசாரணையில் பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ.,யிடம் ஆயுத பயிற்சி பெற்ற பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியது தெரியவந்தது.
இதற்கு பதிலடியாக, மே 7 முதல் 10 வரை பாகிஸ்தானுக்கு எதிராக, 'ஆப்பரேஷன் சிந்துார்' என்ற பெயரில் நம் முப்படைகளும் தாக்குதல் நடத்தின. பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்கள் குறிவைத்து அழிக்கப்பட்டன.
நோபல் பரிசு
பாகிஸ்தான் பதில் தாக்குதல் நடத்தியதால், அந்நாட்டின் ராணுவ தளங்கள், விமான நிலையங்கள் உள்ளிட்டவற்றை பிரம்மோஸ் ஏவுகணை மூலம் நம் விமானப் படை தாக்கியது.
இதில், பாகிஸ்தானின் நுார் கான், ஷோர்கோட் உள்ளிட்ட முக்கிய விமான தளங்கள் பெரும் சேதமடைந்தன. இதை சமீபத்தில் பாகிஸ்தானும் ஒப்புக்கொண்டது. இதனால் கடும் சேதத்தை சந்தித்த பாகிஸ்தான், விமானப்படையின் செயல்பாட்டை தொடர முடியாத நிலைக்கு தள்ளப்பட்டது. எனவே சண்டையை நிறுத்தும் முடிவுக்கு வந்தனர்.
இதையடுத்து, மே 10 அன்று, பாகிஸ்தான் ராணுவ இயக்குநர் மூலம் இந்திய ராணுவ இயக்குநரை தொடர்பு கொண்டு, சண்டை நிறுத்தம் கோரினார். இந்தியா தன் இலக்குகளை அடைந்துவிட்ட நிலையில், போர் நிறுத்தத்துக்கு ஒப்புக்கொண்டது.
இந்த சண்டையை அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தான் தலையிட்டு நிறுத்தியதாக கூறி வருகிறார். 'வர்த்தக தடை விதிப்போம்' என இரு நாடுகளிடமும் கூறி சண்டையை நிறுத்தியதாக இதுவரை 70 முறை கூறியுள்ளார். அதற்காக நோபல் பரிசு வழங்கப்பட்டிருக்க வேண்டும் என்றும் கூறினார்.
போர் நிறுத்தம்
ஆனால், அப்படி ஒரு சம்பவமே நடக்கவில்லை என, நம் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் உள்ளிட்ட பலர் தெளிவுப்படுத்தி உள்ளனர்.
இந்நிலையில், சீன தலைநகர் பீஜிங்கில் சமீபத்தில் நடந்த கருத்தரங்கு ஒன்றில், அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் வாங் யீ பங்கேற்று பேசினார். அப்போது, “சர்வதேச அளவில் 2025ல் பல பிரச்னைகள் எழுந்தன. நீடித்த அமைதியை உருவாக்க இந்த பிரச்னைகளை நடுநிலையாக அணுகினோம்.
“அதன்படி மியான்மர், ஈரான், பாகிஸ்தான்- - இந்தியா இடையிலான பதற்றம், பாலஸ்தீனம் - -இஸ்ரேல் பிரச்னை, கம்போடியா - -தாய்லாந்து மோதல் உள்ளிட்டவற்றில் நாங்கள் மத்தியஸ்தம் செய்தோம்,” என்றார்.
அவரது கருத்தை இந்தியா திட்டவட்டமாக மறுத்தது. இது குறித்து மத்திய அரசு வட்டாரங்கள் கூறியுள்ளதாவது:
ஆப்பரேஷன் சிந்துாரின் போது எந்த மத்தியஸ்தமும் நடைபெறவில்லை. பாகிஸ்தான் தரப்பில் இருந்து நம் ராணுவ இயக்குநரை தொடர்பு கொண்டு போர் நிறுத்தம் கோரப்பட்டது.
இந்தியா தொடர்பான பிரச்னையில், மூன்றாம் தரப்பு தலையீட்டை அனுமதிக்க கூடாது என்ற நிலைப்பாட்டில் மத்திய அரசு எப்போதும் தெளிவாக உள்ளது. இவ்வாறு அந்த வட்டாரங்கள் கூறின.
இருக்கலாம் சீனா தனது ராணுவ தளவாடங்கள் பாகிஸ்தானை காக்க தவறியதால் எங்கே சர்வதேச மார்க்கெடில் தனது ராணுவ தளவாடங்கள் பெயர் கெட்டு விடும் என்று அஞ்சி பாகிஸ்தானை சரணடைய சொல்லி ஆலோசனை கொடுத்திருக்கும். பாகிஸ்தானில் உள்ள அமெரிக்காவின் அணு ஆயுத கிடங்கு சேதப்படுத்த பட்டதால் அமெரிக்கா பாகிஸ்தானை உடனடியாக சரணடைய சொல்லி உள்ளது. ஆகவே இரு நாடுகளும் தாங்கள் தான் போரை நிறுத்தியதாக கூறிகிறதோ என்னவோ. அடுத்து துருக்கி இது போல் தான் தான் போரை நிறுத்தியதாக கூறும் ஏனெனில் துருக்கியின் ட்ரோன்கள் அனைத்தும் காணாமல் போய் விட்டது. அமெரிக்க சீனாவை தவிர துருக்கி ட்ரோன்கள் இயக்க துருக்கி நாட்டு போர் வீரர்களையும் களமிறக்கி இருந்தது அனைவரும் அறிந்ததே.
ஒருவேளை ஊரெல்லாம் ஒட்டணுமே ஆப்பரேஷன் சிந்தூர் விளம்பர ஸ்டிக்கர், போஸ்டர். இவைகளை சீனாவில் தயாரித்ததை பற்றி கூறியிருக்கிறார்களா?
புடின் இன்னும் ஒண்ணும் சொல்லவில்லை அடுத்து அவர் தான்.
அமெரிக்கா, சீனா எல்லாம் உண்மை இல்லை.
போன் போட்டு போரை நிறுத்த சொன்னது பாகிஸ்தான் ராணுவ அதிகாரி. அதனால் தான் தாக்குதலை நிறுத்தியதாக நமது ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங்கி ஓபனாக அறிவித்தார். ஒருவேளை பாகிஸ்தான் ராணுவ அதிகாரி அமெரிக்கா, சீனா இருவருக்கும் கூட போன் போட்டு நம்மிடம் பேச சொல்லி இருக்கலாம் என்று நினைக்கிறேன்.
என்னடா இது? புது வருஷத்துல இது புது உருட்டா இருக்கு...மேலும்
-
'சேவை செய்யும் எண்ணத்தை சிறுவயது முதல் வளர்க்கணும்'
-
ஊட்டி உருளைக்கிழங்கு விலை உயர்வு
-
ரயில்வே சுரங்கபாதை வாகனங்களுக்கு அனுமதி
-
ஆக்கிரமிப்பை அகற்றாமலேயே கோரிக்கை மனு முடித்து வைப்பு
-
'மணக்கிறது' மல்லிகை விலை! நேற்று கிலோ 2,000 ரூபாய்
-
மாநகராட்சி மைதானத்தில் ரூ.1.50 கோடி மதிப்பீட்டில் கபடி விளையாட்டு அரங்கு