ஸ்டாலினுக்கு ஜால்ரா அடிக்கும் காங்கிரஸ் தலைவர்கள்: அண்ணாமலை
வேலூர்: '' டில்லிக்கும், முதல்வர் ஸ்டாலினுக்கும் காங்கிரசார் ஜால்ரா அடித்து வருகின்றனர். தமிழக மக்களை பற்றி கவலைப்படவில்லை,'' என தமிழக பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
கைவந்த கலை
இது தொடர்பாக அவர் நிருபர்களிடம் கூறியதாவது: நான்கரை ஆண்டுகளாக தமிழக முதல்வராக ஸ்டாலின் இருக்கிறார். வைகோ திருச்சியில் இருந்து மதுரை வரை 11 வது முறையாக நடைபயணம் மேற்கொள்கிறார். அங்கு சென்ற முதல்வர் ஸ்டாலின் முழு பூசணிக்காயை சோற்றில் மறைத்துள்ளார். கஞ்சா பழக்கம் அதிகரித்துள்ளது. இதற்கு மத்திய அரசு மீது பழி போட பார்க்கிறார்.இது திமுகவுக்கும், முதல்வருக்கும் கை வந்த கலை. தேர்தலுக்கு ஆறு மாதம் இருக்கும்போது தான் இதனை கையில் எடுப்பார்கள்.
@quote@அரசியலமைப்பு குறித்து முதல்வருக்கு பாடம் எடுக்க வேண்டும். சட்டம் ஒழுங்கு மாநில அரசின் பொறுப்பு இதற்காக தான் போலீசார் மாநில அரசின் கீழ் உள்ளது. quote
போலீஸ், உளவுத்துறை,கஞ்சா ஒழிப்பு பிரிவு ஆகியன மாநில அரசின் பொறுப்பு. மாநில அரசுக்கு உதவ போதைப்பொருள் தடுப்புப் பிரிவை மத்திய அரசு வைத்துள்ளது.
முந்தைய ஆட்சி காலத்தில் போலீசார் திறமையாக பணியாற்றினர். திமுக ஆட்சிக்கு வந்த பிறகு பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள், கஞ்சா புழக்கம், பயங்கரவாத சம்பவங்கள் அதிகரித்துள்ளன.தங்களது குழந்தைகள் கஞ்சா புழக்கத்தால் பாதிக்கப்படுவதாக சாமானிய மக்களும் கூறுகின்றனர்.
கடத்தல்
வெளிநாடுகளில் இருந்துவரும் போதைப்பொருளை மத்திய அரசு திறமையாக தடுத்து வருகிறது. இன்று தமிழகத்தில் நடுத்தர மக்கள்,பள்ளி மாணவர்களை தாக்கும்,கஞ்சா எங்கிருந்து வருகிறது. மாநிலங்களுக்கு இடையே கடத்தப்படுகிறது. இதற்கு எல்லையில் போலீசார் இருக்க வேண்டும். மாநிலத்திற்குள் இருந்து வருகிறது. ஆய்வகம் வைத்து உருவாக்குகின்றனர். ஆன்லைன் மூலம் வருகிறது.
@quote@என்னால் தமிழகத்தை நிர்வாகம் செய்ய முடியவில்லை. காவல்துறையை நிர்வாகம் செய்ய முடியவில்லை என ஸ்டாலின் கூறினால் மத்திய அரசு பார்த்துக் கொள்ளும். quote
ஏற்க முடியாது
@block_B@முழு பொறுப்பை வைத்துக் கொண்டு இவ்வளவு பொய்யை சொல்கிறார்.ஆனால், அடுத்த ஆறு மாதம், மத்திய அரசு ஆதரவு கொடுக்காவில்லை. கஞ்சாவை மத்திய அரசு தடுக்கவில்லை. காவல்துறையை மத்திய அரசு கட்டிப்போட்டுவிட்டது என ஸ்டாலின் கூறிக் கொண்டு இருப்பார்.
block_B
இதனை மக்கள் நம்ப மாட்டார்கள். மத்திய அரசு, மாநில அரசின் வேலை என்ன என மக்கள் நன்றாக புரிந்து கொண்டுள்ளனர். தோல்வி அடைந்தால் ஒப்புக் கொள்ளட்டும். முதல்வராக தோற்றுவிட்டேன் என்றால் பதில் சொல்கிறோம். தோற்றுவிட்டு மத்திய அரசு மீது பழிபோடுவதை ஏற்க முடியாது.
நடவடிக்கை இல்லை
காங்கிரசை பொறுத்தவரை யார் டில்லிக்கு ஜால்ரா போடுவது; தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலினுக்கு ஜால்ரா போடுவது என இரண்டு குழுக்கள் உள்ளன. இரண்டு குழுக்களை தவிர மக்களை பற்றி கவலைப்படும் குழு யாரும் இல்லை. ஒருவேலை காங்கிரஸ் விஜய் கூட்டணி வைத்தால், சிதம்பரம் திமுக உடன் கூட்டணி வைப்பார் என நாளிதழில் செய்தி வந்துள்ளது.
விஜயை பார்த்தவிட்டு காங்கிரஸ் தலைவர் கடன் சுமை பற்றி பேசுகிறார். நேர் எதிர் சூழலில் பேசுகிறார். அவர் மீது நடவடிக்கை எடுக்கவில்லை. ஜோதிமணி ஒரு கருத்து போடுகிறார். காங்கிரஸ் கடையை சாத்தும் நேரம் வந்துவிட்டது.
@block_Y@காமராஜர் காலத்தில் இருந்த கதர் சட்டை போட்டவர்கள் ஜிகே வாசனிடம் வந்துவிட்டனர்.இப்போது இருக்கும் காங்கிரஸ் இந்திரா காங்கிரஸ். காமராஜரை தோற்க வேண்டும் என பாடுபட்டவர்கள் தான் தற்போது இருக்கும் காங்கிரஸ். காங்கிரஸ் அழிந்து கொண்டு இருக்கிறது. இதற்கு தலைவரே அதற்கு சான்று. தமிழக காங்கிரஸ் தலைவர் சான்று.
block_Y
நடுரோட்டில்
இந்த பக்கம், அந்த பக்கம் சண்டை போட்டு நடுரோட்டில் நிற்பார்கள். சட்டசபை தேர்தல் நடக்கும் போது, அவர்கள் நடுரோட்டில் நிற்க போகிறார்கள். அதற்கான வேலையை ஆரம்பித்துவிட்டனர். குதிரை பேரம் பேசுகின்றனர். ஆட்சியில் பங்கு வேண்டும் என்கின்றனர்.
அதிக தொகுதி வேண்டும் என்கின்றனர். காங்கிரஸ் எவ்வளவு வேண்டுமானாலும் பேசலாம். இந்தியாவில் காங்கிரஸ் எப்படி இல்லையோ. அதேபோல் தமிழகத்திலும் அழிந்து கொண்டு இருக்கிறது. கொஞ்சம் கொஞ்சமாக தேய்ந்து எறும்பு நிலை போன்று இருக்கிறது.
வெற்றி
கேரளாவில் பாஜ மீது மக்கள் நம்புகின்றனர். இது ஆரம்பம் தான். இந்தமுறை கேரளாவில் பாஜ வெற்றி உறுதியாக இருக்கிறது. காங்கிரஸ் அங்கு இல்லை. கம்யூனிஸ்ட் தேய ஆரம்பித்துள்ளது.
திருப்புமுனை
நயினார் நாகேந்திரன் 53 இடங்களில் சுற்றுபயணம் செய்துள்ளார். மிக வெற்றிகரமான நடைபயணத்தை புதுக்கோட்டையில் நடக்கும் விழாவில் அமித்ஷா பங்கேற்க உள்ளார். இது தொண்டர்களின் விருப்பம். அரசியல் திருப்புமுனையாக இந்த கூட்டம் இருக்கும். யாரை அழைப்பது என தலைவர் மற்றும் பொறுப்பாளர்கள் முடிவு செய்வார்கள். இவ்வாறு அண்ணாமலை கூறினார்.
அன்றொரு நாள் சிங்கம் போன்றிருந்து இந்தக் கட்சி இக்காலத்தில் எலி போல் ஆகிவிட்ட நிலையில் அவர்களுக்கு வேறு வழியில்லை. எவருக்கு வேண்டுமானாலும் ஜாலரா அடிப்பார்கள்.
இந்த அறிக்கை விடும் இவர்கள் எந்த போதைப் பொருள் கோஷ்டியையாவது பிடித்து கொடுத்து இருக்கிறார்களா? இவர்களுக்கு எதுவும் தெரியாதா? வெத்து செய்தி அறிக்கை மட்டும் தான்?
சாந்த குமாரு. உனக்கு போதை பொருள் விக்கும் கோஷ்டியை தெரியும் போல இருக்கு. நீயாவது அவன்களை புடிச்சி குடுக்க கூடாதா? நாளைக்கே அந்த கோஷ்டிய பத்தி அட்லீஸ்ட் தகவல் குடு. இத நீ பண்ணிய பிறகு அவனுங்களை ஏகடியம் பேசலாம். எடப்பாடி முன்பே குட்கா பொட்டலங்களை சட்ட சபையில் கொண்டு போய் காமிச்சாரு. திருட்டு தீயமுக காரனுங்க அப்புடி காமிச்சானுங்களா? ஏன்னா அவனோட ஆளுங்க தானே அதை கடத்துறது விக்குறது எல்லாமே. அயோக்கியனுங்க.
"இதன் பின்னணியில் பாஜக வின் மறைமுக ஆதரவும் இருப்பதாக கூறப்படுகிறது."... ஒரு பக்கம்:- எடப்பாடிதான் என் டி ஏ கூட்டணி முதலமைச்சர் வேட்பாளர் தமிழக என் டி ஏ கூட்டணிக்கு எடப்பாடிதான் தலைவர் பிஜேபியினர் யாரும் அவரை விமர்சிக்க கூடாது மறுபக்கம்:- பிரிந்து சென்றவர்கள் ஒன்றினைந்தால்தான் வெற்றிபெற முடியும் இப்படி உள்குத்து வேலைகளை கமுக்கமாக செய்து எடப்பாடியை தன் வழிக்கு கொண்டு வர நினைக்கிறது
எடப்பாடி யை முதல்வர் ஆக்குவேன் என்று சொல்லி கொண்டே TTV OPS இருவரையும் எடப்பாடி க்கு எதிரா மோத கொம்பு சீவுகிறாயே அதன் பேர் என்ன
நீ எடப்பாடிய முதல்வர் ஆக்குவேன் என்று சொல்லி கொண்டு திரிகிறாயே அதன் பேர் என்ன
கொத்து அடிமையே ..... ஆளும் கட்சியின் கூட்டணிக்கட்சிக்கு [காங்கிரஸ், கம்யூனிஸ்ட்டுகள்] அழகு பிழை சுட்டுதல் .....
இருநூறு ரூபாய்க்கு நீயே ஜால்ரா அடிக்கும் போது....
14 வருஷமா அந்த பாஞ்சி லட்சத்த காணோம்.
அப்பாவி ..உழைத்து பிழைக்கும் வழியை பாரு..பாஞ்ச லட்ச ஓசிக்கு ஆசைப்பட்டு குடும்பத்தை நடு தெருவில் நிறுத்தாதே
இதற்க்கு தான் இந்தி படிக்க வேண்டும் என்று கூறுகிறார்கள்..... என்ன பேசினார் என்று கூட தெரியாமல்.... வாங்கும் 200 ரூபாய் குவாட்டர் ஓசி பிரியாணி க்கு இப்படி முட்டு கொடுக்க கூடாது.
எடபடிக்கு ஜால்ரா அடிக்கும் பிஜேபி தலைவர்கள்: மக்கள்
திமுக அயோக்கியர்களின் அடிமைகளே நாட்டை சீரழித்த பாவம் ஊபிகளை
லண்டன் முட்டு சந்தில் ஏதோ ஒன்று ரொட்டி துண்டுக்கு குறைகிறது....
ஆமா ஆமா ஜால்ரா அடிப்பது கேவலம்தான். க்ரீட் டா சொல்லிப்புட்டீக. நீங்க மட்டும் தான் உண்மையை கண்டு புடிச்சி சொல்லிப்பட்டீக. ஜார்ஜ் பொன்னையா முன்னாடி சொல்லியிருக்காரு. திமுக ஆட்சி நாங்க போட்ட பிச்சை ன்னு பப்ளிக்கா பேசினாரு. அதுக்கு தீய முக பயலுவ எவனுமே இது வரைக்கும் ஏன் என்னான்னு கேக்கலை. நான் தெரிஞ்சு கிட்டது என்னான்னா ஜால்ரா என்பது கேவலம். பாதிரியாரின் பிச்சை என்பது கெவுரவம். இந்த க உ பி மகா கேவலமானவனுங்க. இவனுங்களுக்கு ஜால்ரா வை பத்தி நாக்கால் உச்சரிக்க தகுதி இருக்கா?மேலும்
-
தமிழக காங்கிரஸ் அழிவுப்பாதையில் செல்கிறது: ஜோதிமணி எம்.பி.,
-
மார் கழி வழிபாடு: மார்கழி வழிபாடு
-
பாரத் மாதா கீ ஜே,: பக்தர்கள் கோஷம்; அமைச்சர் சேகர்பாபு ஆத்திரம்
-
தேசியம்
-
சிரியா முன்னாள் அதிபர் ஆசாத் உருவம் பதித்த கரன்சிகள் மாற்றம்
-
ஒரே ஆண்டில் 201 வழக்குகள் பதிவு; கேரள ஊழல் தடுப்புப்பிரிவு அதிரடி