வெனிசுலா மீதான அமெரிக்கப்படை தாக்குதலுக்கு ரஷ்யா, ஈரான் கண்டனம்
நியூயார்க்: வெனிசுலா மீது அமெரிக்கா நடத்திய தாக்குதலுக்கு ரஷ்யா மற்றும் ஈரான் உள்ளிட்ட நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.
போதைப்பொருள் பயங்கரவாதத்தை வெனிசுலா அரசு ஊக்குவிக்கிறது என்று அமெரிக்கா நீண்ட நாட்களாக குற்றம் சாட்டி வருகிறது. அதற்கு காரணமான, அதிபர் மதுரோ உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதிபர் டிரம்ப் கூறி வந்தார்.
இந்நிலையில், இன்று அதிகாலை வெனிசுலா தலைநகர் கராகஸ், மிரண்டா, அராகுவா உள்ளிட்ட பகுதிகளில் அமெரிக்க படைகள் வான்வழித் தாக்குதல் நடத்தின.
அதிபர் நிகோலஸ் மதுரோ மற்றும் அவரது மனைவியை சிறைப்பிடித்த தங்கள் படையினர், அவரை நாட்டை விட்டு வெளியேற்றியதாகவும், தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாகவும் அமெரிக்கா அறிவித்துள்ளது. மதுரோ வெளியேற்றப்பட்ட நிலையிலும், வெனிசுலா மீதான தாக்குதலை அமெரிக்க ராணுவம் நிறுத்தவில்லை.
ராணுவ நிலைகள் மீது தொடர்ந்து அமெரிக்க விமானப்படை குண்டு வீசி வருகிறது, இதை எதிர்கொள்ளும் வகையில், வெனிசுலா அரசு அவசர நிலையை பிரகடனம் செய்துள்ளது.
இதனிடையே, வெனிசுலா மீது அமெரிக்கா நடத்திய தாக்குதலுக்கு ரஷ்யா மற்றும் ஈரான் உள்ளிட்ட உலக நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.
இது குறித்து ரஷ்யா கூறியதாவது;
கடந்த சில தினங்களாக வெனிசுலாவுக்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கைகளைப் போலவே, இன்று அமெரிக்கா நடத்திய தாக்குதலுக்கு எந்தவொரு உறுதியான காரணமும் இல்லை. இது சர்வதேச சட்டத்தை மீறும் செயல். அமெரிக்காவுக்கு வெனிசுலா எந்தவொரு அச்சுறுத்தலையும் ஏற்படுத்தவில்லை. இந்த தாக்குதல் மேலும் விரிவடையக் கூடாது, எனக் கூறியுள்ளது.
ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சகம் தரப்பில் கூறியதாவது; வெனிசுலா மீது அமெரிக்கா நடத்திய தாக்குதல், ஐநா அடிப்படைக் கோட்பாடுகளையும், சர்வதேச சட்டத்தின் அடிப்படை விதிகளையும் மீறும் செயலாகும். வெனிசுலா நாட்டின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டை மீறும் இந்த செயலை வன்மையாகக் கண்டிக்கிறோம். சர்வதேச பாதுகாப்பை வலியுறுத்தும் அனைத்து நாடுகளும் அமெரிக்காவின் தாக்குதலுக்கு கண்டனத்தை தெரிவிக்க வேண்டும், இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
இதேபோல, கியூபா, ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகளும் அமெரிக்காவின் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளன.
தயார் நிலையில் கொலம்பியா
வெனிசுலா எல்லையில், தங்கள் நாட்டு ராணுவம் நிறுத்தப்படும் என்று அண்டை நாடான கொலம்பியா அறிவித்துள்ளது. அமெரிக்காவின் தாக்குதலை தொடர்ந்து வெனிசுலா மக்கள், தங்கள் நாட்டுக்கு அகதிகளாக வர வாய்ப்புள்ளதாக கருதும் கொலம்பியா, அதற்கான முன்னேற்பாடுகளை செய்து வருகிறது. இந்த இரு நாடுகளும், 2 ஆயிரம் கிலோமீட்டர் நீள எல்லையை பகிர்ந்து கொள்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
மதுரோவிடம் விசாரணை
அமெரிக்க படைகளால் கைது செய்யப்பட்டுள்ள வெனிசுலா அதிபர் மதுரோ, 2020ம் ஆண்டில் நியூயார்க்கில் பதியப்பட்ட போதைப்பொருள் பயங்கரவாதம் தொடர்பான வழக்கில் குற்றவாளியாக விசாரிக்கப்படுவார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதிகாரத்தில் யார்?
அதிபர் நாட்டை விட்டு வெளியேற்றப்பட்ட நிலையில், வெனிசுலா யார் கட்டுப்பாட்டில் இருக்கிறது, ராணுவத்தினருக்கு உத்தரவு பிறப்பிப்பது யார் என்பது பற்றி குழப்பமான சூழல் நிலவுகிறது.
உன்னிப்பாக கவனிக்கும் ஐரோப்பிய நாடுகள்
ரஷ்ய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், 'வெனிசுலா அதிபரும், அவரது மனைவியும் அமெரிக்காவின் நடவடிக்கையால் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டதாக வரும் தகவல் மிகுந்த கவலை அளிக்கிறது. இந்த சூழ்நிலை குறித்து அமெரிக்கா உடனடியாக விளக்கம் அளிக்க வேண்டும்,' என்று தெரிவித்துள்ளது.
ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளியுறவுக் கொள்கை பிரிவு தலைவர் காஜா கல்லாஸ் கூறுகையில், ''மதுரோவுக்கு அதிபராக நீடிப்பதற்கான உரிமை இல்லை. சர்வதேச சட்டங்கள், ஐ.நா., விதிகள் மதிக்கப்பட வேண்டும்,'' என்றார்.
பெல்ஜியம் வெளியுறவு அமைச்சர் மேக்சிமே பிரீவோட் கூறுகையில், ''ஐரோப்பிய நாடுகளுடன் இணைந்து சூழலை உன்னிப்பாக கவனித்து வருகிறோம்,'' என்றார்.
அமெரிக்காவின் நடவடிக்கையை, ரஷ்யாவின் கூட்டாளி நாடானா பெலாரஸ் கண்டித்துள்ளது.
அமெரிக்காவின் மிகப்பெரிய பலம் பொருளாதாரம் தொழில்நுட்பம் டாலர் என்பது ஏமாத்து வேலை.அவர்கள் பலம் இராணுவ கட்டமைப்பு மற்றும் விமானங்கள்.
ரஷ்யா விற்கு இன்னும் தேரிய வில்லை zelensky யும் அவர் மனைவியும் தட்டி தூக்கி கொண்டு ரஷ்யாவிற்கு தூக்கி சென்று இருந்தால் இந்த போர் எப்பவோ முடிந்து இருக்கும்
முதலீட்டார்கள் கச்சா என்னை பக்கம் செல்வதற்கான ஒரு ரகசிய சிக்னல் தான் உலகத்தில் கச்சா எண்ணெய் உற்பத்தி இந்த நாடு தான் முதலிடம் இதற்கு மேல் நான் ஒன்றும் சொல்லவில்லை அதற்குப் பிறகு என்ன நடக்கும் என்று மக்களே புரிந்து கொள்ளுங்கள் எல்லாம் ஒரு நாடகம் தான்
வாய் திறக்காது... வெட்க கேடானது....
நமது நாட்டிலும் இந்த மாதிரி குழப்பங்கள் வரவேண்டும் என்று திரைமறைவு முயற்சிகள் நடக்கின்றன. அதை இங்குள்ள சில எட்டப்பர்களை வைத்து நடத்த முயன்றும் இதுவரை அவர்கள் எண்ணம் ஈடேறவில்லை. நமது நாடு.ஜனநாயக நாடு. இங்கு நடக்கும் அரசாங்கம் தேசாபிமானமும் தேச பாதுகாப்பில் அக்கறையும் உள்ள வலிமையான ஆட்சியாக இருப்பதால் அவர்கள் சூழ்ச்சி பலிக்காமல் போகிறது.
வெனிசுலாவில் கச்சா எண்ணெய் அதிகம்.
Even venisila thinking Amerika die
21 ஆம் நூற்றாண்டு மக்களுக்கானது .எங்குமே மக்களுக்காக ,மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு ,மக்களின் பிரதிநிதிகளால் அரசாட்சி அமையவேண்டும் .ஏதேச்சதிகாரத்திற்கு இடமில்லை .அமெரிக்காவின் இறுக்கம் அதிகமானவுடனே மதுரோ மாற்றம் செய்திருக்கவேண்டும் .செய்யவில்லை .உலகத்தில் மற்ற ஏதேச்சதிகாரங்கலுக்கான எச்சரிக்கை .
Trump announces US strikes in Venezuela. Now the obvious question: How is this any different from Russia attacking Ukraine? When Russia was condemned as an aggressor, sanctioned, and branded a threat to global order, will the USA be judged by the same standards? Or will US think tanks and international media once again repackage military intervention as restoring democracy, just as they did in Iraq?
அமெரிக்காவின் இந்த தாக்குதல் மிக சரியானது . இது போல் ஈரான் மற்றும் ரஷ்யா மீது தாக்க வேண்டும் .
ரஷ்யா மீது தாக்க வேண்டுமா
ஏலே கோமாளி நீ யாருலே? குறுக்க மறுக்க ஓரமா போ
கைலாசம் எப்போதும் அரைவேக்காடுதான்
இதே அமெரிக்கா ஆப்கானிஸ்தான் மற்றும் ஈராக்கில் முடிச்சுட்டு இப்போ வெணிசுலாக்கு வந்துட்டாங்க.