மக்களின் கூடவே இருப்பது தி.மு.க, தான்
அருப்புக்கோட்டை: ''மக்கள் நலனில் அக்கறை கொண்டு என்றைக்கும் மக்களுடன் இருப்பது திமுக., தான்'' என அருப்புக்கோட்டையில் அமைச்சர் சாத்துார் ராமச்சந்திரன் தெரிவித்தார்.
அருப்புக்கோட்டை பாளையம்பட்டி பசும்பொன் நகரில் ரூ.13.0 லட்சம் நிதியில் புதிய ரேஷன் கடை திறப்பு , காமராஜர் நகரில் ரூ.4.40 கோடியில் பேவர் பிளாக் பதித்தல் ,அத்திப்பட்டி பெத்தம்மாள் நகரில் ரூ.80 லட்சம் நிதியில் பேவர் பிளாக், வாறுகால் அடிக்கல் நாட்டு விழா,கஞ்சநாயக்கன்பட்டி ஜெயா நகரில் ரூ.75 லட்சம் நிதியில் பேவர் பிளாக் வாறுகால் அடிக்கல் நாட்டுதல் உள்ளிட்ட வளர்ச்சி பணிகளில் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் கலந்து கொண்டார்.
பின்னர் அவர் பேசியதாவது : மக்கள் நலனின் அக்கறை கொண்டு என்றைக்கும் மக்களுடன் இருப்பது தி.மு.க., தான் . அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றிய பகுதியில் ஒவ்வொரு பகுதிகளுக்கும் மாவட்ட நிதியில் பல்வேறு வளர்ச்சி பணிகள் செய்யப்பட்டு வருகின்றன. மகளிர் உரிமை தொகை கிடைக்காதவர்கள், முகாமில் பதிவு செய்த ரசீதை எம்.எல்.ஏ., அலுவலகத்தில் காண்பித்து கேட்கப்படும் உரிய ஆவணங்களை சமர்ப்பித்து விண்ணப்பிக்கலாம், என்று பேசினார்.
உடன் அரசு அதிகாரிகள், திமுக., நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
மேலும்
-
உ.பி., மருத்துவ பல்கலை பாலியல் வழக்கு இமாமிடம் போலீசார் தீவிர விசாரணை குற்றஞ்சாட்டப்பட்ட பயிற்சி டாக்டரை நீக்க முடிவு
-
பயங்கரவாதிகளுடன் தொடர்பு 5 அரசு ஊழியர்கள் பணி நீக்கம்
-
மின்சாரத்தை அதிக விலை கொடுத்து வாங்கத் துடிப்பது ஏன்? திமுக அரசுக்கு அன்புமணி கேள்வி
-
பண மூட்டை விவகாரம்; பார்லி குழு விசாரணைக்கு எதிரான நீதிபதி யஷ்வந்த் வர்மாவின் மனு தள்ளுபடி
-
உலக பொருளாதார வளர்ச்சியில் இந்தியாவுக்கு முக்கிய பங்கு; சர்வதேச நாணய நிதியம்
-
மும்பை மாநகராட்சியை கைப்பற்றுகிறது பாஜ கூட்டணி; ஓட்டு எண்ணிக்கையில் முன்னிலை!