வெனிசுலா விவகாரம்: மிகுந்த கவலை அளிப்பதாக இந்தியா கருத்து
பீஜிங்:வெனிசுலாவில் நடந்துள்ள சமீபத்திய நிகழ்வுகள் மிகுந்த கவலை அளிக்கின்றன என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
வெனிசுலா அதிபர் மதுரோ மற்றும் அவரது மனைவி ஆகியோர் அமெரிக்காவின் புரூக்ளின் சிறையில் அடைக்கப்பட்டனர். சிறைக்கு அதிபர் மதுரோ அழைத்து செல்லப்பட்ட வீடியோவை வெளியிட்டு அமெரிக்க வெள்ளை மாளிகை உறுதி செய்தது. கண்கள் கட்டப்பட்டு, கை விலங்குடன் மதுரோ சிறைக்கு அழைத்துச் செல்லப்படும் படத்தை அமெரிக்க ராணுவம் வெளியிட்டுள்ளது.
சிறையில் அடைக்க அமெரிக்க அதிகாரிகள் மதுரோவை அழைத்து செல்லும் வீடியோக்கள் தொடர்ந்து வெளியாகி வருகின்றன. அமெரிக்காவின் இந்த நடவடிக்கைக்கு, ரஷ்யா, சீனா, கியூபா, ஸ்பெயின், ஈரான் உள்ளிட்ட நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.
மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கை: வெனிசுலாவில் நடந்துள்ள சமீபத்திய நிகழ்வுகள் மிகுந்த கவலை அளிக்கின்றன. மாறி வரும் சூழ்நிலையை உன்னிப்பாக கவனித்து வருகிறோம். வெனிசுலா மக்களின் நலன், பாதுகாப்பை உறுதி செய்யும்படி இந்தியா வலியுறுத்துகிறது.
அனைத்து தரப்பினரும், பேச்சுவார்த்தை மூலம் பிராந்தியத்தில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை உறுதி செய்ய வேண்டும் என்று இந்தியா வலியுறுத்துகிறது. தலைநகர் கராகஸ்சில் இருக்கும் இந்திய துாதரகம், அங்கு வசிக்கும் இந்தியர்கள் அனைவருடனும் தொடர்பில் இருக்கிறது. இவ்வாறு வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
சீன வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது: அமெரிக்கா, அதிபர் நிக்கோலஸ் மதுரோ மற்றும் அவரது மனைவியின் தனிப்பட்ட பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். அவர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும்.
வெனிசுலா அரசை கவிழ்க்க முயற்சி நிறுத்த வேண்டும். இந்த நடவடிக்கையை சர்வதேச சட்டத்தின் அப்பட்டமான மீறல். இந்த பிரச்னைக்கு இருநாடுகளும் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
சர்வதேச சட்ட மீறலாகும்!
மலேசியா பிரதமர் அன்வர் இப்ராஹிம் வெளியிட்டுள்ள அறிக்கை: வெனிசுலாவில் நடக்கும் நிகழ்வுகளை நான் மிகுந்த கவலையுடன் கவனித்து வருகிறேன். அமெரிக்க ராணுவ நடவடிக்கையில் வெனிசுலாவின் அதிபர் மதுரோ மற்றும் அவரது மனைவியும் கைது செய்யப்பட்டனர். இத்தகைய நடவடிக்கைகள் சர்வதேச சட்டத்தின் மீறலாகும். ஒரு இறையாண்மை கொண்ட அரசுக்கு எதிராக சட்டவிரோதமாக நடவடிக்கைகள் மேற்கொள்வதற்கு சமமாகும்.
அதிபர் மதுரோவும் அவரது மனைவியும் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும். காரணங்கள் எதுவாக இருந்தாலும், பதவியில் இருக்கும் நாட்டின் அதிபரை வலுக்கட்டாயமாக ஆட்சியில் இருந்து அகற்ற முயற்சிப்பது ஆபத்தான முன் உதாரணம் ஆகும்.
வெனிசுலா மக்கள் தங்கள் அரசியல் எதிர்காலத்தை தாங்களே தீர்மானிக்க வேண்டும். சர்வதேச சட்டம் மற்றும் இறையாண்மையை மதிப்பது நாடுகளுக்கு இடையிலான அமைதியான உறவுகளுக்கு மிக முக்கியமானது. வெனிசுலா மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் ஒரு முடிவை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அன்வர் இப்ராஹிம் கூறியுள்ளார்.
விஷ்வகுரு மனது வைத்தால் ஒரே போனில் டிரம்பை மிரட்டி போரை முடிவுக்கு கொண்டு வர முடியும்
அதற்கு முதலில் டாஸ்மாக்கை மூடவேண்டும்
டிரம்ப் ஒரு கோழை என்று மீண்டும் மீண்டும் நிரூபித்து வருகிறார். சிறிய அளவு நாட்டில் போய் இப்படி செய்வது எப்படி நியாயமாகும். எப்டி பார்த்தாலும் பொது மக்கள் பாவம் என்று நினைக்க வில்லை அவர். இதில் அமைதிக்கு நோபல் பரிசு வரும் என்று எதிர்பார்த்தார் கடந்த வருடம்....
Americas Must be Liberated from NativesGenocider GreedyWhiteWest
EuropeanSettlers besides Punishments And Handed Over to Pagan RedIndians/Mayans/Incas. No Mercy Required
நம் நாட்டை பொறுத்த வரை அது எந்த கட்சியின் தலைமையா இருந்தாலும் வெளிநாட்டு விசயமா எடுக்கும் முடிவுகள் தர்மம் நீதிக்கு கட்டுப்பட்டதாவே இருக்கும்.அதனால்தான் இந்தியதேசம் தலை நிமிர்ந்து நிற்குது...இதை பெருமிதத்துடன் சொல்ல முடியும்.
அருமையான கருத்து ஹாஜா..
அமெரிக்காவிற்கு தைரியம் இருக்கு என்றால் சீனா..ரஸ்யா போன்ற நாடுகளில் இவ்வாறு செய்ய முடியுமா????ஒருநாட்டின் அதிபரை கைது செய்து அமெரிக்காகொண்டு போறது அராஜகம்.
உலகத்தின் மிக பெரிய பாவ மன்னிப்பு அழிவு சக்தி அமெரிக்கா. உலகத்தில் பிரச்சனைகளை ஆரம்பிப்பதே அந்த நாடுதான்.
Appreciate the great India's stand in this critical situation
இப்ப என்ன அவசரம் இன்னும் ஒரு வாரம் கழித்து கவலையை தெரிவித்து இருக்கலாமே!
சீனாவைப்போல நாமும் கண்டித்திருக்க வேண்டும் .....
கவலை மட்டும் தான் பட முடியும். வேற ஒன்னும் செய்ய முடியாது .
ரொம்ப வருத்தமா இருந்தா ....மேலும்
-
அதிகாரப் பகிர்வு குறித்து விவாதிக்க வேண்டிய நேரம்: காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர்
-
அசாமில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்; கட்டடங்கள் குலுங்கியதால் பொதுமக்கள் பீதி
-
கோகைன் கடத்தல்; நைஜீரியாவில் இந்திய கப்பல் மாலுமிகள் 22 பேர் கைது
-
வார தொடக்கத்தில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.640 அதிகரிப்பு
-
மோடி நல்லவர்; நான் மகிழ்ச்சியுடன் இல்லை என்பது அவருக்கு தெரியும்: சொல்கிறார் அதிபர் டிரம்ப்
-
அமெரிக்காவில் இந்தியப்பெண் குத்திக்கொலை; வாலிபருக்கு வலை