ஆட்சியில் பங்கு என்று கூறுவது விஜய்யின் பெருந்தன்மை; சீமான்
சிவகங்கை: ஆட்சியில் பங்கு என்று தவெக தலைவரும், நடிகருமான விஜய் கூறுவது அவரின் பெருந்தன்மையை காட்டுகிறது. அதை வரவேற்கிறோம் என்று நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறி உள்ளார்.
சிவகங்கையில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது;
ஆட்சியில் பங்கு என்பதை அவர் (நடிகர் விஜய்) ஒரு கொள்கையாக வைத்திருக்கிறார். இங்கேயும் (தமிழகத்தில்) ஆட்சியில் பங்கு என்பதை பல கட்சிகள் கோரிக்கையாக வைக்கின்றன.
இதில் என்ன பார்க்க வேண்டும் என்றால் மத்தியில் ஆளுகின்ற கட்சிகள் எல்லாம் பங்கு கொடுக்க தானே செய்கிறது. காங்கிரசும் கொடுத்தது. இப்போது பாஜவும் கூட்டணி கட்சிகளுக்கு கொடுத்து இருக்கிறது.
அதே போன்ற ஒரு முறை மாநிலத்தில் (தமிழகத்தில்) கேட்கிறார்கள். அதில் தவறு ஒன்றும் இல்லை. ஆட்சியில் பங்கு கொடுப்போம் என்பது தம்பியின்(நடிகர் விஜய்) பெருந்தன்மையை காட்டுகிறது. அது வரவேற்கத்தக்கது.
இந்த தேர்தலிலும் எல்லா ஜாதியினருக்கும் (நாம் தமிழர் வேட்பாளர்கள்) இடம் கொடுத்திருக்கிறோம். நீங்கள் ஓட்டு போடுங்கள், போடாமல் போங்கள். எங்களிடம் ஜாதி பார்த்தீர்கள் என்றால் எனது தத்துவம் இறந்து போய் விடும்.
மதம் பார்த்து விட்டீர்கள் என்றால் போய்விடும். உண்மையில் நான் முன் வைக்கிற அரசியலைத் தான் நீங்கள் பார்க்க வேண்டும். எடுத்து வைக்கின்ற கருத்தை தான் பார்க்க வேண்டும்.
அதைவிட்டு விட்டு, இவர் என்ன ஜாதி, என்ன மதம் என்று பார்த்தால்... அதனால் தான் நாடு நாசமாகி போய்க் கொண்டு இருக்கிறது. ஜாதியில் நின்று சாதித்த ஒருத்தர் பெயரை. சொல்லுங்கள்.
திரும்ப, திரும்ப அந்த திராவிட கட்சிகளிடம் போய் இரண்டு, மூன்று சீட்டுக்காக, நிற்பதை தவிர வேறு என்ன நமக்கு வலிமை?
இவ்வாறு சீமான் பேட்டி அளித்தார்.
அந்த பெருந்தன்மையில் ஒட்டிகிட்டா ஏதாவது பிச்சை பொடுவாங்க!
பிஜேபி கொள்கைகளை காப்பியடித்து தமிழகத்திற்கு தகுந்தவாறு சீமான் பேசுகிறார். இதனால் பிஜேபி ஓட்டுகள் சிதறுகின்றன. பிஜேபி வளரவேண்டுமெனில், சீமானை பிஜேபி அணியின் கீழ் கொண்டுவரவேண்டும். சீமானுக்கு வேண்டியதை கொடுத்தால், பிஜேபி அணிக்கு வந்துவிடுவார். ஸ்டாலினை ஜெயிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது. சீமான் போன்ற பிஜேபி கொள்கை கொண்டவர்களை ஒன்றுசேர்க்க வேண்டும்.
வெட்டு ஒண்ணு துண்டு ரெண்டு. இப்போ சொல்லுங்க. ஆக்டர் பங்கு தரேன்னுட்டாரு. ஓகே. உங்களுக்கு பங்கு வேணுமா வேணாமா? அதான் மேட்டரே. அதுக்கு பதில் சொல்லுங்க.
எல்லாம் அமலாக்க துறை சிபிஐயின் பெருந்தன்மை என்று தொண்டர்கள் பேசுகின்றனர்.
பெருந்தன்மையா விஜய் அவர்களுக்கும் ஆட்சியில் பங்கு என்பதிற்கும் என்ன சம்பந்தம். இன்னும் ஆட்சியை பிடிக்கவில்லை. தொடவுமில்லை. அதற்க்குள் சம்பந்தமில்லாத வொன்றில் சம்பந்தத்தை ஏற்படுத்த முயலுகின்றீர்கள்.
சீமான் இப்படி பேசியே, கூட்டனி அமைத்து நாட்டையும் காப்பாற்ற மாட்டார் , அவரை நம்பி இருக்கிற மக்களையும் காப்பாற்றமாட்டர், சூழ்நிலையை எத்தனை முறை சோதிப்பீர்கள்......இலங்கை போதாத....
சீமான் ஒரு பெரிய உருட்டு
NTK , TVK இரண்டுமே குடும்பக்கட்சியின் டீம்களாக இருந்து கொண்டே அவ்வப்போது மோதிக்கொண்டு, விளையாடிக்கொள்வது வேடிக்கை ......மேலும்
-
அதிகாரப் பகிர்வு குறித்து விவாதிக்க வேண்டிய நேரம்: காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர்
-
அசாமில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்; கட்டடங்கள் குலுங்கியதால் பொதுமக்கள் பீதி
-
கோகைன் கடத்தல்; நைஜீரியாவில் இந்திய கப்பல் மாலுமிகள் 22 பேர் கைது
-
வார தொடக்கத்தில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.640 அதிகரிப்பு
-
மோடி நல்லவர்; நான் மகிழ்ச்சியுடன் இல்லை என்பது அவருக்கு தெரியும்: சொல்கிறார் அதிபர் டிரம்ப்
-
அமெரிக்காவில் இந்தியப்பெண் குத்திக்கொலை; வாலிபருக்கு வலை