2026 சட்டசபை தேர்தலில் தி.மு.க., 200 இடங்களில் வெற்றி பெறும் ஆர்.எஸ்.பாரதி சென்னிமலையில் கணிப்பு
சென்னிமலை: சென்னிமலையில் தி.மு.க., சார்பில், நேற்று முன்தினம் இரவு பொதுக்கூட்டம் நடந்தது. திருப்பூர் மாவட்ட செயலாளர் இல. பத்மநாபன் தலைமை வகித்தார். இதில் தி.மு.க., அமைப்பு செய-லாளர் ஆஸ்.எஸ்.பாரதி பேசியதாவது: தியாகி குமரன் வாழ்ந்த இந்த மண்ணில், அவர் குடியிருந்த வீட்டுக்கு அருகில் இந்த கூட்டம் நடப்பது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது.
அரசு ஊழியர்களின் சம்பள பிரச்னை முதல், மகளிர் உரிமைத்-தொகை திட்டம் வரை அனைத்தும் சிறப்பாக செயல்படுத்தப்-பட்டு வருகிறது. 'ஸ்டாலினால் கொடுக்க முடியுமா?' என்று பழ-னிசாமி கேட்டார். ஆனால், 28 மாதங்களாக மகளிர் உரிமைத் தொகை வழங்கப்பட்டு வருகிறது. வரும், 2026 சட்டசபை தேர்-தலில் தி.மு.க., 200 இடங்களில் வெற்றி பெற்று, ஏழாவது முறை-யாக ஆட்சி அமைக்கும். ஸ்டாலினே மீண்டும் முதல்வராவார். இவ்வாறு பேசினார்.கூட்டத்தில் கட்சி துணை பொது செயலாளரும் அமைச்சருமான சாமிநாதன், அமைச்சர் கயல்விழி செல்வராஜ், ஈரோடு எம்.பி., பிரகாஷ், எம்.எல்.ஏ., சந்திரகுமார், பேரூராட்சி தலைவர் ஸ்ரீதேவி அசோக் உட்பட ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்,
மேலும்
-
தமிழகத்தில் இன்று 12 மாவட்டம், நாளை 5 மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை!
-
ஜனநாயகன் பட தயாரிப்பு நிறுவனம் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு
-
கரூர் சம்பவம்; விஜயின் பிரசார வாகனத்தை பறிமுதல் செய்து சிபிஐ அதிகாரிகள் ஆய்வு
-
பாஜ கூட்டணியால் ஜெயித்தோம் என்ற எண்ணம் அதிமுகவுக்கு வரணும்: ரங்கராஜ் பாண்டே
-
உண்மையான ஜனநாயகன் நான் தான்; சொல்லி வேதனைப்பட்ட சீமான்
-
நமது இளைஞர் சக்தி வலிமையானது: பிரதமர் மோடி பெருமிதம்