கரூர் சம்பவம்; விஜயின் பிரசார வாகனத்தை பறிமுதல் செய்து சிபிஐ அதிகாரிகள் ஆய்வு
சென்னை: கரூர் நெரிசல் சம்பவம் தொடர்பான வழக்கில், தவெக தலைவர் விஜயின் பிரசார வாகனத்தை பறிமுதல் செய்த சிபிஐ அதிகாரிகள், அதனை இயக்கி சோதனை செய்தனர்.
கடந்த ஆண்டு செப்டம்பர் 27ல், கரூரில் தவெக தலைவர் விஜய் பங்கேற்ற கூட்ட நெரிசலில் சிக்கி, 41 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக சிபிஐ அதிகாரிகள் விசாரித்தனர். கரூர் கலெக்டர், எஸ்பி, டிஎஸ்பி என முக்கிய அதிகாரிகளை டில்லிக்கு அழைத்து விசாரணை நடத்தினர். அதேபோல, தவெக முன்னணி நிர்வாகிகளிடம் விசாரணை நடத்தப்பட்டது. மேலும், ஜனவரி 12ம் தேதி தவெக தலைவர் விஜய் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளது.
இது ஒருபுறம் இருக்க சிபிஐ அதிகாரிகள் கரூர் வேலுச்சாமிபுரத்தில் முகாமிட்டு விசாரணையை தீவிரப்படுத்தி வருகின்றனர். விஜய்யின் ஓட்டுநர் பரணிதரனிடம் விசாரித்த சிபிஐ அதிகாரிகள், அவரது பிரசார வாகனத்தை ஆய்வு மேற்கொண்டனர்.
பிரசார வாகனத்தை இயக்கி சோதனை செய்த அதிகாரிகள், வாகனம் மீது விஜய் பேசும் இடத்தில் தடயவியல் துறை அதிகாரிகள் அளவீடு செய்து, அதனை வீடியோ பதிவு செய்துள்ளனர்.
மத்திய தடயவியல் துறை அதிகாரிகள் காலை 11 மணிக்கு விஜய் பிரச்சார வாகனத்தை ஆய்வு செய்ய துவங்கி மதியம் 2 மணி வரை சுமார் 3 மணி நேரமாக அளந்து தடயங்கள் சேகரித்தனர். மேலும் உணவு இடைவேளைக்கு பிறகு மதியம் 3 மணிக்கு மேல் விஜய்யின் பிரச்சார வாகனத்தை பஸ் டிரைவரை இயக்க சொல்லி, அதனையும் வீடியோ ஒளிப்பதிவு செய்தனர்.
மத்திய தடயவியல் துறை அதிகாரிகளின் கோரிக்கையை ஏற்று கரூர் சிபிஐ விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்கும் வகையில் தவெக தலைவர் விஜய் பிரசார வாகனம் கொண்டு வரப்பட்டதாக நிர்வாகிகள் தெரிவித்தனர். மேலும் சில ஊடகங்களில் சிபிஐ அதிகாரிகள் விஜய் பிரச்சார வாகனத்தை பறிமுதல் செய்து கொண்டு வந்திருப்பதாக தவறான தகவல்கள் வெளியாகி உள்ளன என்றும் விளக்கம் அளித்துள்ளனர்.
அவசர அரசியல். கொஞ்சம் பொருமைய்யாக இருந்து அதன் நெலுசுளுவுகளிய்ய ஓரளவுக்கு தெரிந்து அரசியலுக்கு வரணும். திடீர் ரசம் தீடீர்பாயசம் போல் சினிமா தயை தக்க ஆட்டமில்லைய அரசியல். வில்லன் காசுக்காக அடி வாங்குவான். அரசியல் அப்படி அல்ல அடியும் வாங்கிக்கணும் அடி கொடுக்கும் வல்லமையும் வேண்டும். MGR ரிடம் இரண்டும் இருந்தது. அவரை மனதில் எண்ணிக்கொண்டு சினிமா தைய்ய தக்க புகழ் வெல்லாம் எடு படாது.
ஆப்பு தயாராகிறது.
ஜோசப்பு இனி உனக்கு கசாப்பு தான் - ஒருபக்கம் ஜனநாயகன் பட ஒத்திவைப்பு அடுத்தது சிபிஐ விசாரணை. அணிலு நீயே வந்து சிக்கிட்டியேப்பா. உங்களுக்கு யாரோ தவறான ஆலோசனை கொடுக்குறாங்கன்னு நினைக்கிறேன். 41 பேர் இறந்த ஈரம் காயவில்லை, நீ மலேசியாவுக்கு போய் மேடைல ஆட்டம் போட, எப்படி ஐயா உனக்கு மனசு வருது. பாவம் அணில் குஞ்சுகள் கதறும் சத்தம் கேட்கல......
விஜய் பிஜேபி கூட்டணியில் சேராததால், சிபிஐ விசாரணை தீவிரமடையும் என்றே எதிர்பார்க்கப்படுகிறதாமே.
விசாரணை செய்ய உத்தரவு போட்டது நீதிமன்றம் ,ஆனால் குற்றம் சொல்லுவதுபிஜேபி அரசை. திராவிடமாடலின் உடன்பிறப்புகளுக்கு இதுதான் வேலை.
இது ரொம்ப தாமதம். வண்டியில் கொலை நடந்து இருந்தால் கூட இரத்தம் காய்ந்து இருக்கும்.நாற்றம் இருக்காது.
சரியான திட்டமிடல் இல்லை, இதற்கு முழு பொறுப்பு ஏற்க வேண்டியது, அரசாங்கம் மற்றும் விஜய்& கட்சியின் பொறுப்பாளர்கள்.
41 உயிர்கள் எவ்வளவு முக்கியம் இதற்கு என்ன பதில் என்பதை இவர்கள் இருவரும் தெளிவாக கூற வேண்டும், இதன் முழுமையான உண்மை நிலவரம் சிபிஐ அதிகாரிகளால் விரைவில் வெளிவரும்.
மாட்னமுடா! மாட்னமுடா! மாட்னமுடா! செத்தமுடா! செத்தமுடா! செத்தமுடா!
அளவுக்கு அதிகமா பில்டப்பு கொடுத்து இவனே வலிய வந்து சிக்கிக்கொண்டானோ?
உடாதிங்க. ஒண்ணு உடாம சோதனை செஞ்சு ஏதாவது கண்டுபுடிச்சு உள்ளே தள்ளுங்க.அப்பதான் அவுரு ஜெயிக்க முடியும்.
உச்சா போன ஈரம் கூட காஞ்சிருக்காது .... இம்புட்டு சீக்கிரமாவா ????மேலும்
-
உ.பி., மருத்துவ பல்கலை பாலியல் வழக்கு இமாமிடம் போலீசார் தீவிர விசாரணை குற்றஞ்சாட்டப்பட்ட பயிற்சி டாக்டரை நீக்க முடிவு
-
பயங்கரவாதிகளுடன் தொடர்பு 5 அரசு ஊழியர்கள் பணி நீக்கம்
-
மின்சாரத்தை அதிக விலை கொடுத்து வாங்கத் துடிப்பது ஏன்? திமுக அரசுக்கு அன்புமணி கேள்வி
-
பண மூட்டை விவகாரம்; பார்லி குழு விசாரணைக்கு எதிரான நீதிபதி யஷ்வந்த் வர்மாவின் மனு தள்ளுபடி
-
உலக பொருளாதார வளர்ச்சியில் இந்தியாவுக்கு முக்கிய பங்கு; சர்வதேச நாணய நிதியம்
-
மும்பை மாநகராட்சியை கைப்பற்றுகிறது பாஜ கூட்டணி; ஓட்டு எண்ணிக்கையில் முன்னிலை!