லேயில் கடும் பனிப்பொழிவு; விமான சேவைகள் தற்காலிக ரத்து
லடாக்: லடாக்கில் நிலவி வரும் கடுமையான கடுமையான பனிப்பொழிவு காரணமாக, லே விமான நிலையத்தில் விமான சேவைகள் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால், சுற்றுலாப் பயணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்திய வானிலை ஆய்வு மையத்தின் அறிக்கையின்படி, லேயில் -9.6 டிகிரி செல்சியஸ் குறைந்தபட்ச வெப்பநிலை பதிவாகியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 0.6 சென்டி மீட்டர் பனிப்பொழிவு நிலவியுள்ளது. இதனால், லேயில் உள்ள சுற்றுலாப் பகுதிகள் வெள்ளைப்போர்வையால் மூடப்பட்டது போல காட்சியளிக்கின்றன.
கடும் பனிப்பொழிவு காரணமாக லே விமான நிலையத்தில் அனைத்து விமானங்களின் சேவைகளும் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து இண்டிகோ நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், "லேவில் நிலவும் பனிப்பொழிவு காரணமாக, விமானச்சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன. இதனால், காத்திருப்பு நேரம் அதிகரிக்கலாம். வானிலையை நாங்கள் உன்னிப்பாக கவனித்துக்கொண்டிருக்கிறோம். இயல்புநிலை திரும்பியவுடன் மீண்டும், சேவைகள் தொடரும். விமான நிலையத்திற்கு வருவதற்கு முன்பாக, பயணிகள் தங்கள் விமானங்களின் நிலைகளை இணையதளங்கள் மூலம் அறிந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்," என தெரிவித்துள்ளது.
மேலும்
-
டெக்னிக்கல் அனாலிசிஸ்: ஏற்றம் தொடர்ந்தால் 25,850 வரை சென்று திரும்பலாம்
-
ஒரு கிலோ வெள்ளி விலை ரூ.4 லட்சத்தை எட்ட வாய்ப்பு
-
மாபெரும் மாற்றத்தில் இந்திய நுகர்வு முறை: முதலீட்டாளர்கள் கவனிக்க வேண்டியவை
-
அதிகாரிகள் மிரட்டலால் 'பார்'களில் ஹிந்தி அழிப்பு
-
பட்டியலிடப்படாத நிறுவனங்கள் கட்டுப்படுத்த செபி ஆலோசனை
-
மியூச்சுவல் பண்டு கட்டணங்கள் குறைகிறது