புதிய வரி கொள்கைகளால் ரூ.50 லட்சம் கோடி கிடைக்கும்: அமெரிக்க அதிபர் புளகாங்கிதம்
வாஷிங்டன்: தன் வரி கொள்கைகள் வாயிலாக அமெரிக்காவுக்கு, 50 லட்சம் கோடி ரூபாய் வருவாய் கிடைக்கப் போவதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கூறியுள்ளார்.
கடந்தாண்டு ஜனவரியில் அமெரிக்க அதிபராக இரண்டாவது முறையாக பொறுப்பேற்றுக் கொண்ட டிரம்ப், வர்த்தக பற்றாக்குறையை போக்க உலக நாடுகள் மீது பரஸ்பர வரி விதிப்பை மேற்கொண்டார்.
இதில் பல்வேறு நாடுகளுக்கு அதீத வரியை விதித்தார். இது உலக நாடுகள் இடையேயும்,
அமெரிக்காவுக்குள்ளும் அதிருப்தியை ஏற்படுத்தியது. ஆனால், டிரம்ப் இது பற்றியெல்லாம் கவலை கொள்ளவில்லை.
தான் பதவியேற்ற பின் மேற்கொள்ளப்பட்ட வரி கொள்கைகளினால், அமெரிக்காவுக்கு பெருமளவு நிதி கிடைத்துள்ளதாக சமீபத்தில் கூறினார்.
இத்தொகை தற்போது, 50 லட்சம் கோடி ரூபாயை தாண்டும் என, டிரம்ப் தெரிவித்துள்ளார். இவ்வரி விதிப்புகளால் அமெரிக்கா முன்பை விட பொருளாதார ரீதியாகவும், தேசிய பாதுகாப்பு ரீதியாகவும், வலிமையானதாகவும், மரியாதைக்குரிய நாடாகவும் மாறியுள்ள தாக டிரம்ப் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
இந்த மிகப்பெரிய நிதி ஆதாரத்தை பற்றி பேச அமெரிக்க ஊடகங்கள் மறுப்பதாகக் கூறி, அவற்றை போலி செய்தி ஊடகங்கள் என விமர்சித்துள்ளார்.
மற்ற நாடுகளை மிரட்டி அதிக வரி வசூலித்து கோடிகளில் வருமானம் ஈட்டி பெருமை தேடிக்கொள்வதும் ஒரு பொழப்பா….? திருட்டு வகையில் இது அதிகார பூர்வ திருட்டு.
கூடவே பல நன்பர்கள் உங்களுக்கு எதிரான மனநிலைக்கு மாற்றம் அடைந்து விட்டார்கள். அவர்கள் உங்களை கவிழ்க்க உங்கள் எதிரிகளை மறைமுகமாக ஆதரவு அளிப்பது நடக்கும். வாழ்த்துக்கள் நீங்கள் உங்கள் கையால் உங்கள் நாட்டிற்கு குழி தோண்டி கொண்டு உள்ளீர்கள்
சென்ற நூற்றாண்டில் பல நாடுகளை ஏப்பம் விட்டு காலனி ஆதிக்கம் செலுத்திய இங்கிலாந்தின் தற்போதைய நிலையை நினைவில் வைக்கட்டும்.
கிடைக்கும் கோடிகளை வைத்து இந்த கேடி உலகெல்லாம் போர் நடத்துவார் மிரட்டுவார்
இந்த மாக்கான் நாட்டை நொடிக்கச் செய்து விட்டான். இதில் புளாங்கிதம் ஒன்றுதான் குறைச்சல்.
மற்ற உலக நாடுகள் இணைந்து இந்த கோமாளிக்கு பாடம் புகட்ட வேண்டும். இத்தனை வருடங்கள் போதாதா? இவ்வளவு பெரிய நம் நாட்டில் தற்சார்பு கொள்கை பெரிய அளவில் எடுத்து சென்றால் மட்டுமே இவர்களை வெல்ல முடியும். இப்போது கூட நாம் பாதுகாப்பு சாதனங்களுக்காக பெரிய ஆர்டர் கொடுத்துள்ளோம். Makein India பெருமளவில் ஊக்குவிக்க பட வேண்டும்.
உலகில் அதி பயங்கரவாதியும், தாதாவும் இவர்தான், இவர் ஆட்டு மக்களுக்கு உழைத்து வாழ கற்றுக்கொடுக்க முடியாது. அடுத்தவனை சுரண்டி வாழும் வாழக்கைதான் சொல்லிக்கொடுப்பார். பாப்போம், இன்னும் ஒருவரிடத்தில் இவரின் ஆட்சி முடிந்து போய்விடுவார், அதுவரை உலக மக்களின் சாபம் இவருக்கு இருக்கும்.
வரியை கட்டுவது அமெரிக்க நுகர்வோர் மற்றும் இறக்குமதியாளர்கள். இந்தியா பல காலமாக காங்கிரஸ் ஆட்சியில் வைத்திருந்த கொள்கை போன்றது.
என்ன இப்படி சொல்லிட்டீங்க, அப்போ திராவிட மாடல் இல்லையா?மேலும்
-
ஆதித்யா கல்லுாரி மாணவர்கள் சி.எம்.ஏ., தேர்வில் சாதனை
-
சிறியவர்கள் பெரியோரை வாழ்த்தலாமா... ஓய்வுபெற்ற நீதிபதி ராமபத்ர தாதம் உபன்யாசம்
-
சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஊர்வலம்
-
பயங்கரவாதம் இல்லாத ஜம்மு காஷ்மீர் தான் இலக்கு; அமித் ஷா உறுதி
-
அரசு மருத்துவமனை அருகே பாம்பு பிடிப்பு
-
தொழில்முனைவோர் கண்காட்சி புதுச்சேரியில் நாளை துவங்குகிறது