பயங்கரவாதம் இல்லாத ஜம்மு காஷ்மீர் தான் இலக்கு; அமித் ஷா உறுதி
புதுடில்லி: பயங்கரவாதம் இல்லாத ஜம்மு காஷ்மீர் என்ற இலக்கை விரைவில் அடைவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
ஜம்மு காஷ்மீரின் உயர்மட்ட பாதுகாப்பு ஆய்வுக் கூட்டம் உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் நேற்று (ஜனவரி 8) நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் ஜம்மு காஷ்மீர் துணைநிலை கவர்னர் மனோஜ் சின்கா, மத்திய உள்துறைச் செயலாளர் கோவிந்த் மோகன், உளவுத்துறை இயக்குநர் தபன் குமார் தேகா, ஜம்மு காஷ்மீர் தலைமைச் செயலாளர், டிஜிபி மற்றும் மத்திய ஆயுதப்படைப் படைகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர்.
இந்தக் கூட்டத்தில் அமித் ஷா பேசியதாவது; பிரதமர் மோடி தலைமையிலான அரசு, ஜம்மு காஷ்மீரில் நிலையான அமைதியை நிலைநாட்டவும், பயங்கரவாதத்தை முற்றிலுமாக வேரறுக்கவும் உறுதி பூண்டுள்ளது.
மத்திய அரசின் தொடர் நடவடிக்கைகளினால் பயங்கரவாதிகளின் ஆதிக்கம் நிறைந்ததாக இருந்த ஜம்மு காஷ்மீர், தற்போது அதில் இருந்து விடுபட்டுள்ளது. சட்டப்பிரிவு 370 நீக்கப்பட்டப் பிறகு, ஏற்பட்ட நலன்களை தக்க வைப்பதற்கான அனைத்து பணிகளிலும் பாதுகாப்பு படையினர் தொடர்ந்து ஈடுபட வேண்டும்.
பயங்கரவாத உள்கட்டமைப்புகள் மற்றும் பயங்கரவாதத்திற்கான நிதி பரிவர்த்தனைகளை முற்றிலுமாக முடக்க வேண்டும். பயங்கரவாதம் இல்லாத ஜம்மு காஷ்மீர் என்ற இலக்கை விரைவில் அடைவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும், எனக் கூறினார்.
மூர்க்கத்தை அவ்வப்போது அடக்கி வைக்க முடியுமே தவிர நாகரீக உலகத்திற்கு கொண்டு வருவது நடக்காது. அதை தான் 1400 ஆண்டு வரலாறு சொல்கிறது. ஜம்மு காஷ்மீரை பிரித்து, காஷ்மீர் பண்டிட்களுக்கு ஒரு மாநிலமும், லடாக்கில் ஒரு பகுதியை பிரித்து சிந்திகளுக்கு ஒரு மாநிலமும் அவசியம்.
இதை தவிர பங்களாதேஷை பிரித்து ஹிந்துக்களுக்கு ஒரு மாநிலம் அவசியம். காலத்தின் கட்டாயம்.
இதைத்தான் திமுக எதிர்க்கிறது சிறுபான்மையினருக்கு எதிரான பாஜக என்று சொல்லி .....
Jai hind, we also need to wage a war against drug in the countryமேலும்
-
தி.மு.க., கூட்டணியில் மகளுக்கு சீட் கேட்கும் ராமதாஸ்
-
தேசியம் பேட்டி
-
கோர்ட்டில் திரிணமுல் - ஈ.டி., மோதல்: கோபத்துடன் வெளியேறினார் நீதிபதி
-
ஜி.டி.பி., 7.50% வளரும் என்கிறது எஸ்.பி.ஐ.,
-
இந்தியாவில் ஏ.ஐ., சர்வர்களை தயாரித்து ஏற்றுமதி செய்ய 'லெனோவா' திட்டம்
-
போலி ஜி.எஸ்.டி., நோட்டீஸ் பற்றி எச்சரிக்கை