மத சர்ச்சையாக மாறிய மாணவர் சேர்க்கை விவகாரம்; ஜம்முவில் மருத்துவக் கல்லூரியின் அங்கீகாரம் ரத்து
ஸ்ரீநகர்: மாணவர் சேர்க்கையில் முஸ்லிம்களுக்கு மட்டும் அதிக முக்கியவத்துவம் கொடுத்ததாக ஜம்முவில் செயல்பட்டு வரும் ஸ்ரீமாதா வைஷ்ணோ தேவி மருத்துவ கல்லூரியின் அங்கீகாரத்தை தேசிய மருத்துவ ஆணையம் ரத்து செய்துள்ளது.
ஜம்மு - காஷ்மீரின் ரியாசியில் அமைந்துள்ள ஸ்ரீ மாதா வைஷ்ணோ தேவி மருத்துவக் கல்லுாரியை, ஸ்ரீ மாதா வைஷ்ணோ தேவி கோவில் நிர்வாகம் நடத்தி வருகிறது. முதல் முறையாக இந்த ஆண்டு முதல் இந்த கல்லுாரியில் மாணவர் சேர்க்கை துவங்கி உள்ளது. இந்தக் கல்லுாரிக்கு 50 எம்பிபிஎஸ் இடங்கள் ஒதுக்கப்பட்டன. அவற்றில், 42 இடங்கள், முஸ்லிம் மாணவர்களுக்கும், 7 இடங்கள் ஹிந்துக்களுக்கும், ஒரு இடம் சீக்கிய மாணவருக்கும் கிடைத்துள்ளது.
இந்த ஒதுக்கீடுகள் தான் ஜம்மு - காஷ்மீரில் உள்ள ஹிந்து அமைப்புகளை கொந்தளிக்க வைத்திருக்கிறது. இது தொடர்பாக துணை நிலை கவர்னர் மனோஜ் சின்ஹாவை சந்தித்து இந்த விவகாரம் தொடர்பான கோரிக்கை கடிதமும் வழங்கப்பட்டது. மாணவர் சேர்க்கை விவகாரத்தில் ஸ்ரீ மாதா வைஷ்ணோ தேவி கோவில் நிர்வாகம் உரிய விதிகளை பின்பற்றவில்லை என்று குற்றம்சாட்டப்பட்டது.
இந்த நிலையில், மாணவர் சேர்க்கையில் உரிய விதிகளை பின்பற்றவில்லை எனக் கூறி, ஸ்ரீமாதா வைஷ்ணோ தேவி மருத்துவ கல்லூரியின் அங்கீகாரத்தை தேசிய மருத்துவ ஆணையம் ரத்து செய்துள்ளது. மேலும், அந்தக் கல்லூரியில் பயின்று வந்த மாணவர்களை பிற மருத்துவக் கல்லூரிகளுக்கு இடமாற்றம் செய்யவும் உத்தரவிடப்பட்டது. தேசிய மருத்துவ ஆணையத்தின் இந்த நடவடிக்கைக்கு பாஜ வரவேற்பு தெரிவித்துள்ளது.
ஸ்ரீமாதா வைஷ்ணோ தேவி மருத்துவ கல்லூரி அங்கீகாரம் ரத்து .இந்த தவறின் பின்னணியில் எத்தகைய ஹிந்து ஆன்மீக பெரியவர்கள் /மஹான்கள் /கோயில் நிர்வாகஸ்தர்கள் / தேவஸ்தான தலைவர்கள் / ஆன்மீக மடத்து குருக்கள் /சன்னிதான குரு பரம்பரை /காஷ்மீர் பண்டிட்கள் , இருந்தாலும் மத்திய அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் .இது ஒரு மத வைரஸ் என மாறும் முன்பே தடுக்கப்பட வேண்டும் .
எப்படி இருந்தாலும் முறை கேடாக தேர்வு செய்ய பட்டவர்கள் படிப்பை தொடர முடியும் என்பது தவறு தானே.மேலும்
-
ஆதித்யா கல்லுாரி மாணவர்கள் சி.எம்.ஏ., தேர்வில் சாதனை
-
சிறியவர்கள் பெரியோரை வாழ்த்தலாமா... ஓய்வுபெற்ற நீதிபதி ராமபத்ர தாதம் உபன்யாசம்
-
சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஊர்வலம்
-
பயங்கரவாதம் இல்லாத ஜம்மு காஷ்மீர் தான் இலக்கு; அமித் ஷா உறுதி
-
அரசு மருத்துவமனை அருகே பாம்பு பிடிப்பு
-
தொழில்முனைவோர் கண்காட்சி புதுச்சேரியில் நாளை துவங்குகிறது