இரட்டை வேடம் போடுகிறார் அமித் ஷா

6

@quote@ தி.மு.க.,விடம், ஆட்சி அதிகாரத்தில் பங்கு கொடுங்கள் என கேட்க மாட்டோம். தமிழக அரசு அறிவித்துள்ள ஓய்வூதிய திட்டம், புதிய ஓய்வூதிய திட்டத்தை விட கூடுதல் பலன்கள் கொண்டது.
அதில் குறைகள் இருப்பின் அவற்றை களைய வேண்டும். ஆட்சியில் தவறு நடக்கும் பட்சத்தில், இடதுசாரி அமைப்பினர் மட்டுமே தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றனர். பா.ஜ., சார்பில் திருச்சியில் கொண்டாடப்பட்ட பொங்கல் விழா, ஒரு கார்ப்பரேட் விழாவாக அமைந்திருந்தது.

ஒடிஷாவில் தமிழர்களைப் பற்றி இழிவாக பேசிய அமித் ஷா, தேர்தலுக்காக தமிழகம் வந்து தமிழர் விழாவில் பங்கேற்கிறார். ஏன் இந்த இரட்டை வேடம்? ஆயிரம் அமித் ஷாக்கள் மற்றும் கோடி மோடிகள் வந்தாலும் தி.மு.க., கூட்டணியை தோற்கடிக்க முடியாது.

நடிகர் விஜய்க்கு கூட்டம் கூடலாம். ஆனால், அதெல்லாம் அவரது கட்சிக்கு ஓட்டாக மாறாது. தேர்தலுக்குப் பின், இதை அனைவரும் உணருவர்.

- வீரபாண்டியன்,

மாநில செயலர், இந்திய கம்யூ.,quote

Advertisement