திருப்பூர் குமரன் குன்று கோவிலை அகற்ற முயற்சி; எதிர்த்து போராடிய இந்து முன்னணியினர் 200 பேர் கைது
திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் ஈட்டிவீரம்பாளையம் குமரன் குன்று முருகன் கோவிலை அகற்ற முயற்சித்தபோது, ஹிந்து முன்னணியினருக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில், இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் காயம் அடைந்தார். நிர்வாகிகள் உட்பட 200 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.




போராட்டத்தில் ஈடுபட்ட ஹிந்து முன்னணியினர் 200 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனால் அங்கு பதட்டமான சூழல் நிலவுகிறது. ஏராளமான போலீசார், அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
@block_Y@
கோவிலை இடித்து அகற்ற முயன்றதை பார்வையிட சென்ற ஹிந்து முன்னணி மாநில தலைவர் காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். இதனை தொடர்ந்து தாராபுரம் ரோட்டில் சாலை மறியலில் ஹிந்து முன்னணி அமைப்பினர் ஈடுபட்டனர்.block_Y
@block_G@
இது குறித்து தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கை: கோவிலைக் காக்க வந்தோரைத் தாக்கும் திமுக அரசு தூக்கியெறியப்படும். திருப்பூர் மாவட்டம் ராக்கியாபட்டி பகுதியில் உள்ள செல்வ முத்துக் குமாரசாமி திருக்கோவிலை திமுக அரசு இடிக்க முயற்சித்ததோடு, அதைத் தடுக்க வந்த ஹிந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் மீதும், பாஜ நிர்வாகிகள் மீதும் தாக்குதல் நடத்தியுள்ளது வன்மையான கண்டனத்திற்குரியது.
மதச்சார்பின்மை என்னும் போர்வையில் கோவிலைக் காக்க வந்த பக்த கோடிகளைத் தாக்குவது, குன்றத்தில் தீபத்தூணில் தீபமேற்ற மறுப்பது, அறுபடைவீட்டை சுடுகாட்டுடன் ஒப்பிடுவது, திருத்தேரோட்டத்தில் வைத்து பக்தர்களை வசைபாடுவது, கோவிலுக்குச் செல்வதை அநாகரீகம் என்று இழிவுபடுத்துவது, அடிப்படை அறிவின்றி சனாதன தர்மத்தைக் கொடூர நோய்களுடன் ஒப்பிடுவது எனத் தொடர்ந்து ஹிந்து விரோதப் போக்கைக் கைவிடாது தூக்கிப்பிடிக்கும் திமுக அரசு தனது ஹிந்து மத வெறுப்பாலேயே மண்ணைக் கவ்வும். இவ்வாறு நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார். block_G
குமரன் குன்று என்பது வெறும் பெயர் தானா? அல்லது குன்று இருக்கிறதா? குன்று என்றால் அது அரசு புறம்போக்குநிலம் என்று கூற முடியுமா? குன்று தோறும் குமரன் குடியிருப்பது தொன்று தொட்டு வரும் வழிபாடு அல்லவா? அப்படி என்றால் நூறாண்டு அல்ல நூற்றாண்டுகள் பழமையானதாக இருக்க வேண்டும். செய்தி விரிவாக இருந்து இருந்தால் நல்லது.
இந்த அரசு இப்படி நடந்தால் தேர்தலில் நல்ல பலன் கிடைக்கும்!
அரசு புறம் போக்கு நிலத்தில் கோவில் கட்டப்பட்டிருக்கிறது என்றால் , கடவுள் சிலைகளை பத்திரமாக பெயர்த்தெடுத்து பிறகு கட்டுமானத்தை இடிப்பதில் தவறில்லை. ஆனால் இதை எல்லா மத வழிபாட்டுத் தலங்களுக்கு கடைபிடிக்க வேண்டும். சென்னை க்ரோம் பேட்டையில் சர்ச் ஒன்றை இடிப்பதற்கு கோர்ட் உத்தரவிட்டும் , கிறிஸ்த்துவர்கள் போராட்டம் நடத்துகிறார்கள் என்று இன்னும் அதை இடிக்கவில்லை. இது என்ன ஞாயம்..
சட்டம் சமம் என்றால் மக்களுக்கு இடையூறாக உள்ள எல்லா மதத்தின் வழிபாட்டு தலங்களையும் அகற்ற வேண்டும் அதில்லாமல் ஒரு மதத்தின் வழிபாட்டுதலத்தை மட்டும் நினைப்பது என்ன விதமான அரசியல் .
அங்க ஒருத்தன் இது ஆன்மிக பக்தர்களுக்கான ஆட்சின்னு கூவிகிட்டு இருக்கான்..
நீங்க சொல்லுவது விக்கு மண்டயர் இல்லை தானே
சுதந்திரப்போராட்ட வீரர்கள் என்றாலே திமுகவுக்கு அலர்ஜி .... ஈவேராவை க்கூட அந்த லிஸ்ட்டில் சேர்த்தவர்கள் .....
இந்துமத ஜென்ம விரோதி ஓங்கோல் துண்டுசீட்டுக்கு முருகன் என்றாலே அலர்ஜி
அனுமதி இன்றி கட்டப்பட்ட சென்னை குரோம்பேட்டை அஸ்தினாபுரம் சர்ச், கோயம்பேடு பள்ளிவாசல் ஆகியவை நீதிமன்றம் உத்தரவு இட்டும் எதிர்ப்பு காரணமாக அரசால் அகற்ற முடியவில்லை. ஆனால் இந்து கோவில்கள் மட்டும் வேகமாக இடிக்கபடுகிறன
தமிழகத்தில் உள்ளஎல்லா இடங்களும் அரசுக்கு சொந்தம். அரசு பள்ளிகள் அரசு அலுவலங்கள் தவிர மற்ற எல்லா கட்டிடங்களை இடிப்பது நியாயம். திருக்கோயில்களை மட்டும் இடிப்பது சட்ட விரோதம்.
தமிழ் கலாச்சாரத்திற்கு எதிரான ஒரு போராகவே இதை பார்க்க வேண்டியுள்ளது. இதற்கான பணம் மட்டும் பலம் எங்கிருந்து வருகிறது என்பதை மக்கள் புரிந்து கொண்டால் மக்களுக்கு நல்லது. இல்லாவிட்டால் இந்த பிரச்சனை அவர்கள் வீட்டிற்கு கூட வரலாம்.மேலும்
-
கிரீன்லாந்தை கைப்பற்ற திட்டமா? அதிபர் டிரம்புக்கு டென்மார்க் கடும் எச்சரிக்கை
-
ஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வு
-
அதிமுக - பாஜ தொகுதி பங்கீடு பேச்சு: இபிஎஸ் உடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு
-
மயிலாடுதுறை மீனவர்களுக்கு எச்சரிக்கை
-
போராடும் ஈரான் மக்களுக்கு துணை நிற்போம்: அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் உறுதி
-
பெண் புள்ளிமான் பலி