மயிலாடுதுறை மீனவர்களுக்கு எச்சரிக்கை
மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்ட மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை எச்சரிக்கை விடுத்து உள்ளது. தென்கிழக்கு வங்க கடல், பூமத்திய ரேகை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதியில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்துள்ளது. மேற்கு வட மேற்கு திசைகளின் நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும்.
இதனால் இன்று (ஜனவரி 09) முதல் கடலோர டெல்டா மாவட்டங்களுக்கு கன மழை வாய்ப்பு உள்ளது. மயிலாடுதுறை மாவட்ட கடற்பகுதியில் 45 முதல் 55 கி.மீ. வேகத்தில் காற்று வீசக் கூடும். கடல் கொந்தளிப்புடன் காணப்படும் என சென்னை வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
விசைப் படகு மற்றும் நாட்டுப் படகு மீனவர்கள் இன்று (ஜனவரி 9) முதல் மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என மாவட்ட மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குனர் ஜனார்த்தனம் அறிவுறுத்தியுள்ளார். இது குறித்த கடிதம் மாவட்டத்தில் அனைத்து மீனவ கிராமங்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளது.
மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள 28 கிராம மீனவர்கள் கடலுக்குச் செல்லவில்லை. 400க்கும் மேற்பட்ட விசைப்படகுகள், 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பைபர் பாடல்கள் மீன்பிடித் துறைமுகங்கள் மற்றும் முகத்துவாரத்தை ஒட்டிய பகுதிகளில் பாதுகாப்பாக நிறுத்தப்பட்டுள்ளது.
மேலும்
-
ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் அமைப்பதில் இளைஞர்கள் ஆர்வம்: பிரதமர் மோடி
-
கவுரி லங்கேஷ் கொலை வழக்கில் கைதானவர் மஹா. உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி!
-
வளம் மிக்க துறைகளை காங்கிரஸ் தேடிப்போவதில்லை; மாணிக்கம் தாகூர் சொல்லாமல் விட்டது இதுதான்!
-
ஸ்டார்ட் அப் இந்தியா திட்டத்தின் 10ம் ஆண்டு நிறைவு விழா; பிரதமர் மோடி பங்கேற்பு
-
வங்கதேசத்தில் ஹிந்துக்கள் மீதான தாக்குதல்; பிரிட்டன் பார்லியில் எம்பி காட்டம்
-
பண்டிகை நாளிலும் போராட்டம்; சென்னையில் 22வது நாளாக போராடிய ஆசிரியர்கள் கைது