கிரீன்லாந்தை கைப்பற்ற திட்டமா? அதிபர் டிரம்புக்கு டென்மார்க் கடும் எச்சரிக்கை
கோபன்ஹேகன்: கிரீன்லாந்தை கைப்பற்றுவதாக அதிபர் டிரம்ப் மிரட்டிய சில நாட்களுக்கு பிறகு டென்மார்க் பிரதமர் மெட்டே பிரடெரிக்சன் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
டென்மார்க்கின் தன்னாட்சி பெற்ற பிரதேசமான கிரீன்லாந்தை அதிபர் டிரம்ப் , பாதுகாப்பு காரணங்களுக்காக அமெரிக்கா உடன் இணைத்துக் கொள்ள வேண்டும் எனக்கூறி வருகிறார். இது தொடர்பாக டிரம்ப் அளித்த பேட்டி ஒன்றில் அமெரிக்காவின் பாதுகாப்பு ரீதியாக கிரீன்லாந்து இப்போது மிக முக்கியப் புள்ளியாக இருக்கிறது.
கிரீன்லாந்து முழுவதும் ரஷ்யா மற்றும் சீன கப்பல்கள் உள்ளன . அதனால் பாதுகாப்பை உறுதி செய்ய இந்தப் பகுதியை அமெரிக்கா உடன் இணைப்பது அவசியம், என்றார். இதற்கு உலக நாடுகள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.
இது குறித்து டென்மார்க் பிரதமர் மெட்டே பிரடெரிக்சன் கூறியதாவது: நேட்டோ கூட்டமைப்பின் ஒப்பந்தத்தின்படி உறுப்பு நாடுகள் ஒருவர் மீது ஒருவர் தாக்குதல் நடத்தக்கூடாது. ஏதாவது ஓர் உறுப்பினருக்கு ஆபத்து என்றால் ஒட்டு மொத்த நேட்டோ நாடுகளும் களமிறங்கும். அமெரிக்கா மற்றொரு நேட்டோ நாட்டை ராணுவ ரீதியாக தாக்க முடிவு செய்தால், எல்லாம் பாதியில் நின்றுவிடும்.
இதை ஒருபோதும் ஏற்க மாட்டோம். வெனிசுலா நாட்டுடன் கிரீன்லாந்தை ஒப்பிட முடியாது. ஒரு வேளை கிரீன்லாந்தை அமெரிக்கா கைப்பற்றினால் நேட்டோ கூட்டமைப்பு உடைந்து சிதறும். முதலில் சுடுவேன், பின்னர் கேள்விகளை கேட்பேன்.
யாராவது டென்மார்க் பிரதேசத்தை ஆக்கிரமித்தால், அதன் வீரர்கள் உடனடியாக சண்டையில் ஈடுபடுவார்கள். தங்கள் தளபதிகளின் உத்தரவுக்காக காத்திருக்காமல் துப்பாக்கிச் சூடு நடத்துவார்கள். இவ்வாறு மெட்டே பிரடெரிக்சன் கூறினார்.
உலகநாடுகளுக்கு எதிரான மனிதகுலத்திற்கு எதிரான நடவடிக்கைகளே அவனுக்கு எதிராக உயிரை வாங்கும். இது நடக்குதா இல்லையா பாருங்க.. நடக்கும்போது இப்படி ஒரு கருத்து வெளிவந்ததே எல்லோருக்கும் மறந்துபோகும்.
நமது ஆட்டின் அரசியல் வாதிகள் எல்லாரும் ஒன்னும் இல்லை என செய்து விட்டான். அடியாள் + திருட்டுத்தனம் + ஜொள்ளு + நம்பிக்கை துரோகம் + ..... இன்னும் பல ஐரோப்பா நாடுகள் இவனை புரிந்து கொள்ளட்டும்
முன்னெல்லாம் ஆயுத வியாபாரிகள் தான் உலக அளவில் மோதல்களை உருவாக்கி அதன் காரணமாக தங்களது வணிகத்தை செவ்வனே செய்து வந்தனர். ஆனால் இப்போது உலகில் எங்கே என்ன நடந்தாலும் அது தங்க வணிகத்தை பெரிதாக பாதிக்கிறது. அதனால் சொல்லுகிறேன் சமீபத்திய உலக மோதல்கள் எல்லாம் சில தங்கச் சுரங்க முதலாளிகளின் சூழ்ச்சியோ என்று எண்ணத் தோன்றுகிறது.
தலைவன் ஆட்டம் இதில் ஆரம்பமே. வெனிஸுல எண்ணை கிடங்கை கையில் வைத்துக்கொண்டு அந்த எண்ணை தான் வாங்கணும்னு சொல்வான். ஆனால் துட்ட என் கணக்கில் போடுன்னு சொல்வான். அப்புறம் இந்தியா சீன போன்ற அதிக தேவை உள்ள நாடுகளை சவூதி ஈராக் யுஏ நாட்டில் ஆயில் வாங்கக்கூடாதும்பான். அதற்கு மறைமுகமாய் வெனிஸுலா எண்ணை விலை குறைப்பான். மத்திய ஆசிய நாடுகளின் பொருளாதாரத்தினை ஆட்டம் காண வைப்பான். அவர்களிடம் இத்தனை நாள் கொஞ்சியதை மறந்து விடுவான்.
பணம் மற்றும் நில பித்து பிடித்தவனாக மாறி உள்ளார் தற்போதைய அமெரிக்க அதிபர்...
இதற்கு முன்பு ஆசிய நாடுகளை தாக்கி தனது அதிகாரத்தைக் காட்ட ஆரம்பித்த அமெரிக்கா இப்போது தென் அமெரிக்க, நேட்டோ நாடுகளையே தாக்கி கைப்பற்ற முயல்கிறது. கிரீன்லாந்தை சுற்றி ரஷ்ய, சீன போர்க்கப்பல்கள் இருந்தால் டிரம்ப் தாக்க வேண்டியது ரஷ்ய, சீன போர் கப்பல்களைத்தான். இது தொடர் கதையானால் நாளை வலிமை குறைந்த எந்த ஒரு நாட்டையும் அமெரிக்கா தாக்கி கைப்பற்றலாம். ஏற்கெனவே அமெரிக்காவை விட பரப்பில் பெரிய நாடான கனடாவை அமெரிக்காவின் ஒரு மாநிலமாக இணைக்க டிரம்ப் முயற்சித்தது ஆணவத்தின் உச்சம். இதையெல்லாம் பார்க்கும் போது மூன்றாம் உலகப் போர் டிரம்ப் காலத்தில் ஏற்படலாம் என்ற அச்சம் உண்டாகிறது.
இன்னும் 3 வருடம் பதவி உள்ள நிலையில் என்ன செய்ய போகிறானோ என்று அமெரிக்கா மக்களே குழம்பி உள்ளனர். பாவ மன்னிப்புகாரனுக்கே இந்த நிலைமை என்றால் மற்றவர்கள் நிலைமை சொல்ல வேண்டியது இல்லை. இது தான் உண்மை நிலைமை.
மன முதிர்ச்சி இல்லாத ஒரு நபர் நாட்டின் அதிபராக இருப்பது இடி அமீன், ஹிட்லெருக்கு அடுத்தது இவர்தான் என்பது அமெரிக்கா மக்களின் கருத்து
அமெரிக்கா ஈரான் போன்ற மத்திய ஆசிய நாடுகள் மற்றும் இந்தியா போன்ற ஆசிய நாடுகள் மேல காண்டு காட்டியபொழுது எதிர்த்திருந்தால் உங்கள் மேல் இரக்கம் வரும். இப்போ அடிமடியில் கை வைக்கின்றான். அனுபவியுங்கள்.
டிரம்ப் கு இது அவசியமில்லா வேலை
கிரீன்லாந்து முழுவதும் ரஷியா, சீனா கப்பல்கள் உள்ளன. பாதுகாப்பு நெருக்கடி. என்பது அமெரிக்கா குற்றச்சாட்டு. சுயாட்சி பெற்ற பகுதி கிரீன்லாந்து என்றால், ரஷியா, சீனாவிடம் இருந்து பாதுகாக்க முடியாது. சர்வதேச அமைப்பு வலு பெறும் வரை கிரீன்லாந்து போன்ற நாடுகள் அமெரிக்கா போன்ற வல்லரசால் பாதுகாக்க பட வேண்டும். இசுலாமிய நாடுகளை 5 நாடுகளாக கொண்டு வர வேண்டும். நிர்வாக செலவு எதிர்கொள்ள நாட்டில் உழைப்பு இல்லை. புதிய அகண்ட பாரதம் தேவை.மேலும்
-
சம்பள உயர்வு அறிவிப்பு கண்துடைப்பு பகுதிநேர ஆசிரியர் கூட்டமைப்பு கண்டனம்
-
இயற்கையோடு இணையும் இளம் விவசாயிகள் மணப்பாறையில் விவசாய புரட்சி
-
ஓய்வூதியம் இல்லாமல் அவதிப்படும் நகர கூட்டுறவு வங்கி ஊழியர்கள்
-
தமிழக ஆட்சி அதிகாரத்தில் தொண்டர்கள் பங்கு கேட்பதில் தவறில்லை; சச்சின் பைலட்
-
மேற்கு வங்கத்திற்கு 12 புதிய ரயில்களை அன்பு பரிசாக தரும் பிரதமர் மோடி; அஸ்வினி வைஷ்ணவ் பெருமிதம்
-
பணி நேரம் முடிந்ததால் விமானத்தை இயக்க மறுத்த விமானி: பயணிகள் கோபம்