அதிமுக - பாஜ தொகுதி பங்கீடு பேச்சு: இபிஎஸ் உடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு
சென்னை: சென்னையில் அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸை அவரது இல்லத்தில் தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் சந்தித்து பேசினார். தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை சுமூகமாக நடந்து முடிந்தது என நிருபர்களிடம் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.
தமிழக சட்டசபை தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. இதனால் அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளை தீவிரமாக செய்து வருகின்றன. இந்த பரபரப்பான சூழலில், சென்னை பசுமை வழிச்சாலையில் அமைந்துள்ள இபிஎஸ் இல்லத்தில் அவரை நயினார் நகேந்திரன் சந்தித்தார்.
சுமூகமாக முடிந்தது!
நிருபர்களிடம் நயினார் நாகேந்திரன் கூறியதாவது: அதிமுக-பாஜ தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை சமூகமாக முடிந்தது. பாஜ எத்தனை தொகுதிகளில் போட்டி என்பதை பிறகு சொல்கிறேன். பிரதமர் மோடியின் தமிழக வருகை குறித்து ஆலோசித்தோம். தேதி இன்னும் முடிவு ஆகவில்லை. பிரதமர் கூட்டம் மதுரை அல்லது சென்னையில் நடத்துவது குறித்து ஆலோசித்தேன், என்றார்.
அடிமைக்கு ஆப்பு, பிஜேபிக்கு நோட்டதன் போட்டி
தோற்க்கப்போற கூட்டணி இது, எடுபுடி பழனிச்சாமி மண்ணைக் கவ்வுறது உறுதி
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இடையிலான சந்திப்பின் போது பேசப்பட்டது தொடர்பாக தகவல் வெளியாகி இருக்கிறது. அதிமுகவிடம் பாஜகவுக்கு சுமார் 56 தொகுதிகளும், 3 அமைச்சர் பதவியும் கேட்கப்பட்டதாக கூறப்பட்டிருக்கிறது. இதையடுத்து கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசித்து முடிவை கூறுவதாக எடப்பாடி பழனிசாமி பதில் அளித்துள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.
அரசியல் கட்சிகளில் படித்த தொண்டர்கள் நிறையே இருக்கின்றனர். ஆனால் அவர்களுக்கு பதவிகள் கிடைப்பது இல்லை. தொண்டர்களும் ஏன் மௌனமாய் இருக்கிறார்கள் என்பது தெரியவில்லை. திராவிட முன்னேற்ற கழகத்தை எடுத்துக்கொள்ளுங்கள் ஸ்டாலின் உதய நிதி கனி மொழி போன்றோர்.
No annamalai No BJP
"ஊர் உறவையும் உடல் உறவையும் என்றுமே பிரிக்கமுடியாது".அதுபோல இந்தியாவிலுள்ள அரசியல் கட்சி ஜாதி உணர்வை என்றுமே பிரிக்கமுடியாது? அதுபோல, இன்று "இனம் இனத்தோடு சேர்ந்து விட்டது". எடப்பாடியார் வன்னியர், அன்புமணிராமதாஸ் வன்னியர். ஆக இருவரும் ஒன்று சேர்ந்து மெகா கூட்டணியை உருவாக்கி உள்ளனர். அதிமுக ஐந்து முறை ஆட்சி ஆண்ட போது, டாக்டர் ராமதாஸ், அன்பு மணி எடப்பாடி கட்சி அடித்த கொள்ளைகள் கொலைகள் கற்பழிப்பு மானபங்கம் லஞ்சம் லாவண்யம் எல்லா துஷ்பிரயோகித செயல்களை இன்றுபோல் பட்டி தொட்டி முதல் விமர்சிக்கவில்லை. அதான் ஜாதி உணர்வு. ஆனால், திமுகவை ஆதி முல் அங்கம் வரை மேலே சொன்ன அனைத்து துஷ்பிரயோகங்களை பட்டியலிட்டு புகார் கொடுக்கின்றனர். ஏனெனில் முதல்வர் ஸ்டாலின் இசைவேளாளர் ஜாதி. ஆனால், முதல்வருக்கு ஜாதி உணர்வு கிடையாது. ஒரே உணர்வு குடும்ப வளர்ச்சி உணர்வு. இத்தருணத்தில் ஒரு தராசு தட்டில் அதிமுக, திமுகவை நிறுத்தினால் மேலே குறிப்பிட்ட அணைத்து குற்றங்களும் சர்வ சமமாக நிற்கும் தமிழக மக்களே சற்று சிந்திப்பீர், செயல்படுவீர்கள் மக்களே இந்த இரண்டு ஆட்சி தமிழக மக்களுக்கு கடந்த 50 வருடமாக மாறி மாறி ஆட்சியில் அமர்ந்து இன்று தமிழக மக்களை திவாலாக்கி திமுக, அதிமுக 4 லட்சம் கோடி தமிழக மக்களிடம் லஞ்சம், கமிஷன்,லாவண்யம் மூலம் சுகபோகமாக உல்லாச வாழ்க்கை சொகுசு ஆடம்பர பங்களா கார் என வாழ்கின்றனர். ஆனால்,ஓட்டு போட்ட அப்பாவி தமிழக மக்கள் வீடு வாசல் மூன்று வேளை உணவு, வேலை இல்லாமல் பசி,பட்டினி, நோய்யாலும் வாழ வழி இன்றி தவிக்கின்றனர். ஆக, இவை யாவையும் நன்கு தெரிந்து அனுபவித்து, மீண்டும் அதே தவறை, திமுக,அதிமுக அரசியலுக்காக ஏமாற்றும் காசு பணம் இலவச சலுகைகளுக்காக செய்யாதீர்கள்?
எடப்பாடியார் வன்னியரா? ஹி...ஹி...ஹி...உங்கள் அரசியல் அறிவு மெய் சிலிர்க்க வைக்கிறது.
பிஜேபி யை ஒருத்தரும் சேர்க்க தயாரில்லை அனால் எடப்பாடி சம்பந்தி செய்த டெண்டர் , இன்று புலிவால் பிஜேபி இடம் வீழ்ந்து விட்டார் அனால் ஆளுமை அதிகம் தான் டெல்லி சென்றும் OPS எல்லாம் சேர்க முடியாது அண்ணாமலை எல்லாம் கண்ணில் படவே கூடாது என்று தீர்க்கமா சொல்லி வந்து விட்டார்
என்னவோ பீசபி யோக்கியர்கள் போல இலவஸ சலுகை செயாதது மாதிரி , இவர் செவ்வாய் கிரகத்தில் இருந்து நேற்று தான் இறங்கியது போல , பீஹார் தேர்தலில் 75 லட்சம் பேருக்கு ஆளுக்கு 10000 கொடுத்தார் இது காந்தி கணக்கா இதுவும் இலவஸ அக்கோவுண்ட் தான்
திகழ். எதுக்கு உன் பேஸ்மென்ட் இப்படி நடுங்குது...
விவேக் எனக்காவது இங்கு குளிர் பேஸ் நடுங்குது அங்கு நல்ல வெய்யில் என்கிறார் கல் அப்புறம் என் உமக்கு நடுக்கம்
பாவம் தோற்க போகிற கூட்டணி முனைப்பு காட்டுது , அண்ணாமலை வெளியே அவரால் வெளியேற்ற பட்ட KTR உள்ளே கால சக்கிரம் சுழது என்ன இருந்தாலும் அண்ணாமலையை ஸீன் இல் இருந்து அவுட்ஆப் GAME ஆகிய எடப்பாடி கிரேட் லீடர் தான்
திருப்பியும் ராகவன் உள்ள வந்துட்டான் விளங்கின மாத்ரி தான்
அண்ணாமலை தான் இவர் பேரை கெடுக்க சூழ்ச்சி செய்தவர் , கர்மா வென்றது
எனக்கு ஒரு சந்தேகம் மை லார்ட்... இந்த கூடையை குடுக்கறாய்ங்களே அதுக்கு என்ன அர்த்தம்... அதை என்ன பண்ணுவாங்க... அதுக்குள்ள என்னவாவது பெருசா இருக்குமா...??? சால்வையை அப்படியே ரீசர்குலேஷன்க்கு அனுப்புவாங்க தெரியும்... இந்த கூடை என்டே அம்மே பீரியட்ல ஆரம்பிச்சு ப்ப்ப்ப்பெரிய லெவலுக்கு போச்சு... அவர் ஏதோ அர்ச்சனை தட்டை தொட்டு குடுக்கிற மாதிரி தொடுவாப்ல... அப்புறம் அது என்ன ஆகும்கிற ரகசியம் அவர் எப்படி இறந்தார்ங்கிறதை விட பெருசா இருக்குமா...?? யாராவது விளக்கினால் தேவலை....
இதுக்குதான் படிங்க படிங்கன்னு சொல்றது. கூடையில் இருப்பது நல்ல நறுமணம் கொண்ட பலவித பூக்களின் தொகுப்பு. இதற்காகவே ஒரு இண்டஸ்ட்ரி இயங்குகிறது. பல பேர் இதில் வேலை செய்கிறார்கள். வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி ஆகிறது. இது ஹாலில் இருந்தால் வாசனை திரவியங்கள் போன்று வாசனை நாள் முழுக்க இருக்கும். ஒவ்வொரு பூக்கூடையும் பல ஆயிரம் விலை வரும்.
ஏல பாமர பகோடா....ஒருத்தர் கூடையோட தூக்கி dam குள்ள போட்டாரு.... ஹி.. ஹி...
விளங்கிடும் தமிழ்நாட்டு பாஜகவின் எதிர்காலம்.
போக்கிடம் இல்லை யாரும் சேர்க்க மாட்டார்கள் இவர்களை தவிர அப்புறம் என்ன , உங்களால் தான் ADMK க்கு அழிவுக்காலம்
அண்ணாமலை பதவி பறிக்கப்பட்டபின் குதிரை தேய்ந்து தமிழக பாஜக சிற்றரெம்பை விட சிறிதாகி விட்டது. போராட்ட குணமில்லா நயினாரெல்லாம் பதவி பிச்சை எடுக்கத்தான் லாயக்கு. இவர் அக்கால பா ராமசந்திரனாகா வாய்ப்பு அதிகம். அமித் ஷா உஷார்
அண்ணாமலையின் பதவி பறிக்கப்பட்டபின் பாஜக தேய்ந்து கட்டெறும்பு ஆகிடுத்து. நயினார் எல்லாம் வைத்து கொண்டு முடியாது.மேலும்
-
எம்ஜிஆர் பிறந்தநாள் சிறப்புப்பதிவு; எம்ஜிஆர் தழுவிய சட்டை தொண்டர் வீட்டில் அலங்கரிப்பு
-
நவீன ஜல்லிக்கட்டு போட்டி
-
விசைத்தறியை நவீன மயமாக்கும் சப்ளையர் திட்டத்தில் சேர விண்ணப்பிக்க அழைப்பு
-
இலக்கிய பேரவை திருவள்ளுவர் தினம் கொண்டாட்டம்
-
மாட்டுப்பொங்கல் கோலாகலம்
-
தை மாத பிரதோஷத்தையொட்டி ஏகாம்பர ஈஸ்வரருக்கு சிறப்பு பூஜை