மசூதி இடிக்கப்படுவதாக வதந்தி; டில்லியில் கல் வீச்சால் பதற்றம்: சிறுவன் உட்பட 5 பேர் கைது
புதுடில்லி: டில்லியில் மசூதி இடிக்கப்படுவதாக வதந்தி பரவியதை தொடர்ந்து குவிந்த கூட்டம் போலீசார் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தியது. இதில், ஐந்து போலீசார் காயமடைந்த நிலையில், சிறுவர் உட்பட ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர்.
டில்லியில் ராம்லீலா மைதானத்தை ஒட்டிய பைஸ் - இ - இலாஹி மசூதி மற்றும் துர்க்மான் கேட் பகுதியில் கல்லறை தோட்டம் அமைந்துள்ளது.
இதையொட்டி உள்ள பகுதிகளில், அரசு இடத்தில் சட்டவிரோதமாக கட்டப்பட்ட கட்டடங்களை இடிக்க, டில்லி உயர் நீதிமன்றம் சமீபத்தில் உத்தரவிட்டது.
இதையடுத்து, ஆக்கிரமிப்பு கட்டடங்களை டில்லி மாநகராட்சி அதிகாரிகள் நேற்று முன்தினம் இரவு இடிக்க முயன்றனர்.
மாநகராட்சி ஊழியர்கள், போலீசார் என 300க்கும் மேற்பட்டோர் இடிக்கும் பணியை மேற்கொண்டனர். இதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட அவர்கள், ஒரு கட்டத்தில் அங்கிருந்த போலீசார் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். கண்ணாடி பாட்டில்களும் வீசப்பட்டன.
இதில், போலீசார் ஐந்து பேருக்கு படுகாயம் ஏற்பட்டது. கண்ணீர் புகை குண்டுகளை வீசி போராட்டக்காரர்களை போலீசார் கலைத்தனர். இதனால், மூன்று மணி நேரத்துக்கும் மேலாக, அப்பகுதியில் பதற்றம் நிலவியது.
இதுகுறித்து கூடுதல் போலீஸ் கமிஷனர் நிதின் வல்சன் கூறியதாவது: பிரச்னையை தவிர்ப்பதற்காகவே, நள்ளிரவில் கட்டடங்களை இடிக்கும் பணிகள் மேற் கொள்ளப்பட்டன. கல் எறிந்தவர்களை அடையாளம் காணும் பணி நடந்து வருகிறது. இது தொடர்பாக, சிறுவன் உட்பட ஐந்து பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறோம்.
முதற்கட்ட விசாரணையில், ஆக்கிரமிப்பு அகற்றும் பணியின் போது, மசூதி இடிக்கப்படுவதாக வதந்தி பரவியதை அடுத்து, ஏராளமானோர் இப்பகுதியில் திரண்டு ஆர்ப்பாட்டம் நடத்தியது தெரியவந்துள்ளது.
அதுதொடர்பாகவும் விசாரணை நடத்தி வருகிறோம். வன்முறை எதேச்சையாக நடந்ததா அல்லது திட்டமிட்டு அரங்கேற்றப்பட்டதா என்ற கோணத்திலும் விசாரணை நடத்தப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
“சட்டவிரோதமாக ஆக்கிரமிக்கப்பட்ட திருமண மண்டபம், மருந்தகம் மற்றும் அங்கிருந்த சில வணிக மையங்கள் மட்டுமே இடிக்கப்பட்டன. மசூதிக்கு எந்த சேதமும் ஏற்படவில்லை. அதிகாரிகள் குழுக்களாக பிரிந்து, மிகுந்த கவனத்துடன் இடிக்கும் பணிகள் நடந்தன,” என, மாநகராட்சி துணை ஆணையர் விவேக் குமார் தெரிவித்தார்.
மசூதி இடிக்கப்படுவதாக சமூக வலைதளத்தில் பகிரப்பட்ட வீடியோக்களில் ஒன்று, காலித் மாலிக் என்ற நபரால் பதிவு செய்யப்பட்டது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.
மசூதி இடிக்கப்படுவதற்கு எதிராக வீதியில் திரண்டு போராடும்படி அவர் மக்களுக்கு அழைப்பு விடுத்ததை அடுத்தே, சம்பவ இடத்தில் ஏராளமானோர் கூடினர். எனவே, காலித் மாலிக்கை கைது செய்யும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
திராவிட மாடல் திமுக முதலமைச்சர் மதிப்பிற்குரிய மாண்புமிகு திரு.ஸ்டாலின் அப்பா அவரது குடும்பத்தார் அனைவரும் இந்த செய்தியை ஒன்றுக்கு பத்து முறை படிக்க வேண்டும். மசூதியை இடிக்கிறேன் என்ற வதந்திக்கே கல் வீச்சில் ஈடுபாட்ட சமுதாயம் நீங்கள் மதச்சார்பின்மை என்ற பெயரில் ஆதரிக்கும் சமுதாயம். ஆனால் இந்துக்கள் நீங்கள் எத்தனை கோவில்களை இடித்து போதும் யாரும் கல்வீச்சு வன்முறையில் இதுவரை ஈடுபடவில்லை. இது தான் இந்து மதம்.
திமுக ஆட்சியில் இடிக்கப்பட்ட கோவில்களின் எண்ணிகை ஏராளம்.... சுமார் 400 க்கும் மேற்பட்ட கோவில்களை இடித்து இருக்கிறார்கள்..... கஜினி முகம்மதுக்கு பிறகு அதிகளவில் கோவில்களை இடித்தது இவர்களாக தான் இருப்பார்கள்.
திருப்பூர் அருகே உள்ள கோவிலை திமுக இடித்து விட்டது.மேலும்
-
உ.பி., மருத்துவ பல்கலை பாலியல் வழக்கு இமாமிடம் போலீசார் தீவிர விசாரணை குற்றஞ்சாட்டப்பட்ட பயிற்சி டாக்டரை நீக்க முடிவு
-
பயங்கரவாதிகளுடன் தொடர்பு 5 அரசு ஊழியர்கள் பணி நீக்கம்
-
மின்சாரத்தை அதிக விலை கொடுத்து வாங்கத் துடிப்பது ஏன்? திமுக அரசுக்கு அன்புமணி கேள்வி
-
பண மூட்டை விவகாரம்; பார்லி குழு விசாரணைக்கு எதிரான நீதிபதி யஷ்வந்த் வர்மாவின் மனு தள்ளுபடி
-
உலக பொருளாதார வளர்ச்சியில் இந்தியாவுக்கு முக்கிய பங்கு; சர்வதேச நாணய நிதியம்
-
மும்பை மாநகராட்சியை கைப்பற்றுகிறது பாஜ கூட்டணி; ஓட்டு எண்ணிக்கையில் முன்னிலை!