அரசு கலை கல்லுாரியில் விழிப்புணர்வு கருத்தரங்கு
குமாரபாளையம்: குமாரபாளையம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில், பாலின உளவியல் குறித்த கண்காணிப்பு மற்றும் விழிப்புணர்வு குழு சார்பில், பாலின உளவியல் விழிப்புணர்வு கருத்தரங்கு நடந்-தது. கல்லுாரி முதல்வர் சரவணாதேவி தலைமை வகித்தார். பாலின உளவியல் குழு ஒருங்கிணைப்பாளர் கார்த்திகேயனி வர-வேற்றார். அண்ணாமலை பல்கலை முன்னாள் உளவியல் துறை தலைவர் மற்றும் யோகா இயக்குனர் சுரேஷ் பங்கேற்றார்.
அவர், கல்லுாரி மாணவர்களுக்கு பாலியல் உளவியல் குறித்த விழிப்புணர்வு, சமூகத்தில் பாலினத்தின் பங்கு, குடும்பம் மற்றும் கலாசார மதிப்பீடு, பாலின சமத்துவமின்மைக்கான காரணங்களை ஆய்வு செய்வதின் அவசியம் குறித்து பேசினார். இதில், மாண-வர்கள், பேராசிரியர்கள், அலுவலக பணியாளர்கள் உள்பட பெரும்பாலானோர் பங்கேற்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
நாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை கவுன்சிலர்கள் கூட்டத்தில் கோரிக்கை
-
பொங்கல் பரிசு தொகுப்பு அமைச்சர் வழங்கல்
-
பழவேற்காடு பாலத்தின் இணைப்பு சாலையை சீரமைக்க கோரிக்கை
-
விழிப்புணர்வு கருத்தரங்கம்
-
நல்லாட்டூரில் ரூ.20 லட்சம் மதிப்புள்ள சவுக்கு மரங்கள் தீயில் கருகின
-
சேம்பர் ஆப் காமர்ஸ் தலைவர் துரைராஜ் பிறந்த நாள்
Advertisement
Advertisement