நாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை கவுன்சிலர்கள் கூட்டத்தில் கோரிக்கை
பண்ருட்டி: பண்ருட்டி நகராட்சி பகுதியில் நாய்களை கட்டுப்படுத்த கோரிக்கை எழுந்துள்ளது.
பண்ருட்டி நகராட்சி கவுன்சிலர்களின் இயல்புக்கூட்டம் நேற்று நடந்தது. நகராட்சி சேர்மன் ராஜேந்திரன் தலைமை தாங்கினார்.
கமிஷ்னர் காஞ்சனா, உதவி பொறியாளர் கார்த்திகேயன் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் கவுன்சிலர்கள் பேசியதாவது:
ராமதாஸ்(சுயே) : ரூ.77 லட்சம் செலவில், தற்காலிக பஸ்நிலையம் அமைக்க, தீர்மானித்துள்ளனர். அந்த நிதியை வீணாக்காமல் மாற்று பணிக்கு செய்திடலாம்.
சண்முகவள்ளிபழனி(தி.மு.க.) : கட்டட கழிவுகளை சாலையில் கொட்டுகின்றனர். அது, அகற்றப்படுவதில்லை.
சாலையில் பல ஆண்டுகளாக பழைய வீணான பைக் உள்ளிட்டவை நிறுத்தி வைக்கின்றனர். இதற்கு நகராட்சி சார்பில் நோட்டீஸ் கொடுத்து சுத்தம், சுகாதாரமாக வைத்திருக்க அறிவுரை வழங்க வேண்டும்.
சோழன்(தி.மு.க.) :
எனது வார்டில் நாய்களை கட்டுப்படுத்த வேண்டும். மேம்பால சர்வீஸ் சாலை, மேம்பாலத்தின் மீதும் ஆட்டோக்கள் அனுமதியின்றி நிறுத்தப்படுகிறது. இதனால் பொதுமக்கள் அவதியடைகின்றனர்.
சேர்மன் : தற்காலிக பஸ்நிலைய அமைக்கும் பணிகளால், அப்பகுதி சுத்தம், சுகாதாரம் அடையும். தற்போது, நடந்து வரும் பஸ்நிலைய பணிகள் முழுமை பெறும். சாலையில் அசுத்தப்படுத்துபவர்களுக்கு நோட்டீஸ் வழங்கப்படும்.
இவ்வாறு கூட்டத்தில் பேசினர்.
மேலும்
-
'ஜாதி, மத பேதமின்றி மக்கள் சேவை செய்தவர் குருநானக்'
-
67 லட்சம் பேர் வேலைக்காக பதிவு : காலியிடங்களை நிரப்ப வலியுறுத்தல்
-
பழநியில் 5 மணி நேரம் காத்திருந்து தரிசனம்
-
பள்ளி சாரா, வயது வந்தோர் கல்வி திட்டம்: சிறந்த சி.இ.ஓ.,க்களுக்கு விருது
-
வங்கியில் போலி நகை அடகு வைத்து ரூ.17 லட்சம் மோசடி: மதிப்பீட்டாளர் உட்பட மூவர் கைது
-
காஷ்மீர் எல்லையில் மீண்டும் தென்பட்டது பாக் ட்ரோன்கள்; சுட்டு வீழ்த்தியது இந்திய ராணுவம்