சாலையோரம் அபாய கிணறு தடுப்புவேலி அமைக்க கோரிக்கை

வெண்ணந்துார்: சாலையோரம் உள்ள திறந்தவெளி கிணறால் விபத்து அபாயம் உள்ளது.

வெண்ணந்துார் ஒன்றியம், ஓ.சவுதாபுரம் பகுதியில் இருந்து தொட்டியபட்டி பஞ்., பகுதிக்கு செல்லும் சாலையோரத்தில் திறந்-தவெளியில் அபாய கிணறு உள்ளது.

இவ்வழியாக, நாள்தோறும் எண்ணற்ற தனியார் பள்ளி, கல்லுாரி வாகனங்கள், கனரக, இருசக்-கர வாகனங்கள் சென்று வருகின்றன. இதன் அருகே வாகன ஓட்டிகள் செல்லும்போது, சற்று பயத்துடனேயே சென்று வருகின்றனர். திறந்தநிலையில் காணப்படும் கிணற்றுக்கு தடுப்புவேலி அமைக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.

Advertisement