இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் போராட்டம்

நாமக்கல்: அரசு தொடக்க பள்ளிகளில் பணியாற்றும் இடைநிலை பதிவு-மூப்பு ஆசிரியர்கள் இயக்கம் சார்பில், 'சமவேலைக்கு சமஊ-தியம்' என்ற ஒற்றை கோரிக்கையை வலியுறுத்தி, 2025 டிச., 26 முதல், 10 நாட்கள், சென்னை நுங்கம்பாக்கம் டி.பி.ஐ., வளாகம், மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில், முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.



பொறுப்பாளர்கள், ஆசிரியர்களை கைது செய்வதை கண்-டித்தும், வாழ்வாதார கோரிக்கை மற்றும் தி.மு.க., தேர்தல் வாக்கு-றுதிப்படி, 20,000 இடை நிலை ஆசிரியர்களுக்கு, 'சமவேலைக்கு சம ஊதியம்' கோரிக்கையை விரைந்து நிறைவேற்றக்கோரி, தமி-ழகம் முழுவதும், மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் வளா-கத்தில், நேற்று மூன்றாம் நாளாக, தொடர் காத்திருப்பு போராட்-டத்தில் ஈடுபட்டனர். நாமக்கல் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் முன் நடந்த, மூன்றாம் நாள், தொடர் காத்திருப்பு போராட்டத்திற்கு, மாவட்ட தலைவர் ரவி தலைமை வகித்தார். செயலாளர் தமிழ்தென்றல் இசைவாணன், பொருளாளர் மகேஸ்வரி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

Advertisement